என் மலர்tooltip icon

    சிவகங்கை

    திருப்புவனம் அருகே முதியவரை தாக்கி கத்தி முனையில் பணம் பறித்ததாக ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சிவகங்கை:

    திருப்புவனம் அருகே உள்ள கீழராங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேங்கை (வயது 65). இவர் அந்த பகுதியில் நடந்து சென்றபோது பூமிநாதன் மகன் நாகப்பன் (30), மேலராங்கியம் வேலு (27) ஆகியோர் வழிமறித்தனர்.

    அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி சேங்கையிடம் பணம் கேட்டனர். தர மறுத்ததால் அவரை தாக்கிய 2 பேரும் பணத்தையும் பறித்துச் சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து திருப்புவனம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் திருமலைநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து பணம் பறித்ததாக நாகப்பன், வேலுவை கைது செய்தார். கைதான நாகப்பன் பிரபல ரவுடி ஆவார். அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

    காளையார்கோவில் அருகே உள்ள மேல வளையப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (27), லாரி டிரைவர். இவருக்கும் மேட்டுப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் முத்துசாமி (35) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த விரோதத்தில் முத்துசாமி, தமிழரசன் (41), ராஜா (32), செபஸ்டின் (35) ஆகியோர் சேர்ந்து தன்னை தாக்கியதோடு 1½ பவுன் நகையை பறித்துச் சென்றதாக கார்த்திக் புகார் செய்தார்.

    காளையார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்தார். மற்ற 3 பேரை தேடி வருகிறார்.

    திருப்பாச்சேத்தி விவசாயி கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சோனைமுத்து (வயது 35), விவசாயி. இவர் நேற்று காலை வீட்டு முன்பு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் காணப்பட்டன.

    திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் ஆவரங்காட்டைச் சேர்ந்த செல்லமுத்து (45), ராமர் (35) ஆகியோர் தான் சோனைமுத்துவை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    நண்பர்களான 3 பேரும் மது குடித்த போது, அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டது. இதனை அந்தப்பகுதியில் நின்றவர்கள் தடுத்து சமரசம் செய்து அனுப்பினர். அதன் பிறகு தான் சோனை முத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய, இன்ஸ்பெக்டர் முருகன், தலைமறைவாக இருந்த செல்லமுத்து, ராமரை கைது செய்தனர்.

    தேவகோட்டை, திருப்பத்தூர் பகுதிகளில் நடந்த கொள்ளையில் திருடு போன 55 பவுன் நகைகள் மீட்கப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, திருப்பத்தூர் பகுதிகளில் நடந்த கொள்ளையில் திருடு போன 55 பவுன் நகைகள் மீட்கப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கடந்த 12-ந் தேதி தேவகோட்டை தாலுகா சோமநாதபுரம் காவல் நிலைய சரகம் காதிநகர், கீழசெவல்பட்டி விராமதி காரைக்குடி தாலுகா நேமத்தான்பட்டி ஆகிய 3 ஊர்களில் பகல் நேரத்தில் 3 வீடுகளில் திருடு போனது.

    இதில் மொத்தம் 55 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் காரைக்குடி டி.எஸ்.பி.கார்த்திகேயன் தலைமையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அழகர், இன்ஸ்பெக்டர் பால்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சேவியர், முதல்நிலை காவலர்கள் சுரேஷ், பார்த்திபன், தென்னரசு ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    இவர்கள் தேவகோட்டை ரஸ்தா அமராவதி புதூர் கல்லுப்பட்டி விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்தின் பேரில் காரில் வந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர்.

    அவர்கள் முரண்பாடான தகவலை கூறினார்கள். போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் காதிநகர், விராமதி, நேமத்தான்பட்டி ஆகிய ஊர்களில் பகல் நேரத்தில் வீடுகளில் கொள்ளையடித்தவர்கள் என்பது தெரியவந்தது.

    பிடிபட்டவர்கள் மதுரை புட்டுத்தோப்பு செக்கடித்தெருவைச் சேர்ந்த சோனை மகன் பட்டறை சுரேஷ் (வயது 29), முசிறி காமராஜர் வீதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் ராஜ்கமல் (30) மணமேல்குடி கோட்டை பட்டணம் பொன்னைவயல் ராமச்சந்திரன் மகன் முத்து (25), திருச்சி அரிய மங்கலம் அம்மாகுளம் கலை வாணர்வீதி, கருப்பையா மகன் வினோத் (30) என்பது தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்து 55 பவுன் நகைகள், ரூ. 5 லட்சத்து 50 ஆயிரம், லேப்டாப், எல்.இ.டி. டிவி. ஆகியவைகள் கைப்பற்றப்பட்டன. கொள்ளையர்கள் 4 பேரும் காரைக்குடி மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

    இதில் பட்டறை சுரேஷ், ராஜ்கமல், வினோத் ஆகிய 3 பேரும் திருச்சி, மதுரை, சேலம், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு அப்பகுதி போலீசாரால் தேடப்பட்டு வந்தனர்.

    10 நாட்களுக்குள் கொள்ளையர்களை கண்டுபிடித்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகைகள், லேப்டாப், டி.வி. மற்றும் கொள்ளையர்கள் பயன்படுத்திய திருட்டு காரை பிடித்ததற்காக காரைக்குடி டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினரை எஸ்.பி. ஜெயச்சந்திரன் பாராட்டினார்.

    சுகாதாரத்துறை சார்பில் டெங்கு பரவ காரணமாக இருந்ததாக 15 ஆயிரம் பேருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
    சிவகங்கை:

    தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். மேலும் பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார். இன்று அவர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு நடத்தினார்.

    குழந்தைகள் வார்டு, ஆண்கள், பெண்கள் வார்டு, காய்ச்சல் வார்டு பகுதிகள் போன்றவற்றை பார்வையிட்ட அவர் அங்கு சிகிச்சை பெறுபவர்களிடம் குறை கேட்டார்.

    பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிவகங்கை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் தீவிர காய்ச்சல் ஓரளவு குறைந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், நாமக்கல், சேலம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் படிப்படி யாக குறைந்து வருகிறது.

    இன்று சிவகங்கை, மதுரை, நெல்லை மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் நான் ஆய்வு செய்கிறேன். காய்ச்சலை தடுக்க தற்போது மருத்துவதுறையுடன் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை இணைந்து பணியாற்றி வருகிறது.

    காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் பொதுமக்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல் அரசு மருத்துவமனைக்கு வரவேண்டும். இங்கு போதுமான சிகிச்சைகள் உரிய வகையில் தரப்படுகிறது. எந்த நேரத்திலும் காய்ச்சலுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சுகாதாரத்துறை சார்பில் டெங்கு பரவ காரணமாக இருந்ததாக 15 ஆயிரம் பேருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சிவகங்கை மருத்துவக் கல்லூரி டீன் சாந்திமலர், சுகாதாரத்துறை இயக்குநர் விஜயன் மதமடக்கி ஆகியோர் ஆய்வின்போது உடன் இருந்தனர்.
    டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீசு வழங்கப்பட்டது.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு பணிகள் கலெக்டர் லதா உத்தரவின்பேரில் தீவிரமாக நடந்து வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் நாள்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    மேலும் பொதுமக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைகள், நிறுவனங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

    சுற்றுப்புறத்தை சுகாதார மற்ற முறையில் வைத்திருந்த பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் காரைக்குடி அண்ணா நகர் பகுதியில் சப்-கலெக்டர் ஆஷாஅஜித், நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள் மற்றும் அதிகாரிகள் இன்று காலை ஆய்வு நடத்தினர்.


    அப்போது அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தியபோது அங்கு குடிநீர் தொட்டிகள் சுகாதாரமற்ற முறையில் இருந்தது தெரியவந்தது. மேலும் அதில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகி இருந்தது. மருத்துவ கழிவுகளும் முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடந்தன.


    இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீசு வழங்கப்பட்டது.

    திருப்பாச்சேத்தி பகுதியில் விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சோனைமுத்து (வயது 35), விவசாயி. இவரது மனைவி ஜான்சி ராணி.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜான்சிராணி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று சோனைமுத்து மற்றும் அவரது நண்பர்கள் ஆவாரங்காட்டை சேர்ந்த செல்லமுத்து (45), ராமர் (35) ஆகியோர் மது குடித்தனர். அப்போது நண்பர்கள் சோனைமுத்துவிடம் குடும்ப பிரச்சினை குறித்து பேசியதாக தெரிகிறது.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இன்று காலை வீட்டின் முன்பு சோனைமுத்து அரிவாள் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே திருப்பாச்சேத்தி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று இரவு ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் சோனை முத்துவை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் தலைமறைவாகி உள்ள செல்லமுத்து, ராமரை போலீசார் தேடி வருகின்றனர்.
    அரசு கலைக்கல்லூரி பேராசிரியை வீட்டில் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் லேப்-டாப்பை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள நேமத்தான்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிர மணியன் (வயது 47). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி அமிர்தவள்ளி (45). புதுக்கோட்டை அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார். இவர்கள் தீபாவளி பண்டிகைக்காக கடந்த 12-ந் தேதி, தங்களது சொந்த ஊரான பிள்ளையார்பட்டி அருகே உள்ள திருகூடல்பட்டி சென்றனர்.

    நேற்று இரவு அவர்கள் வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலிகள், 2 பவுன் ஜோடி வளையல்கள் மற்றும் லேப்டாப் திருட்டு போயிருந்தது.

    இது குறித்து செட்டி நாடு போலீசில் புகார் செய்யப் பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    காரைக்குடி நவரத்தினா நகரைச் சேர்ந்தவர் தமிழ்மாறன். இவரது மனைவி மஞ்சுளா (33). கணவர், சிங்கப்பூரில் வேலை பார்ப்பதால் மஞ்சுளா தனியாக வசித்து வந்தார்.

    கடந்த 20-ந் தேதி இவர், கண்டரமாணிக்கத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதனை அறிந்த யாரோ மர்ம மனிதர்கள் வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ. 40 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.

    இது குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்குடி அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    காரைக்குடி:

    காரைக்குடியில் உள்ள அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.சி.ஏ. படிக்கும் மாணவ-மாணவிகள் 40 பேர் தஞ்சாவூருக்கு பஸ்சில் கல்விச்சுற்றுலா சென்றனர்.

    பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டனர். தஞ்சாவூரில் போக்குவரத்து அதிகாரிகள் மாணவ-மாணவிகள் வந்த பஸ்சை ஆய்வு செய்தபோது பெர்மிட் இல்லாதது தெரியவந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் பஸ்சை பறிமுதல் செய்தனர். இதனால் மாணவ - மாணவிகள் அங்கேயே 2 வேன்களை பிடித்து இரவு ஊருக்கு புறப்பட்டனர்.

    காரைக்குடி அருகே உள்ள திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளைவேட்டி சித்தர் கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது மாணவர்கள் வந்த வேன் ரோட்டோரத்தில் நின்றிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

    இதில் காரைக்குடி கழனி வாசலை சேர்ந்த மாணவர் தினேஷ் (வயது 18) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த 17 மாணவர்கள் காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சரவணக்குமார் பரிதாபமாக இறந்தார். விபத்தில் காயம் அடைந்த மாணவர்கள் அகிலன், சந்தோஷ், பிரசாத், அச்சுதன், யோகேஸ்வரன், செல்வகணபதி, காசி ராஜன், விக்னேஷ், முரளி கிருஷ்ணன், மாணவி புனிதவள்ளி, விரிவுரையாளர் கருணாகரன், டிரைவர் அபுபக்கர் உள்பட 16 பேர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    விபத்து குறித்து குன்றக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரசவத்தின் போது மனைவியும் குழந்தையும் இறந்து விட்டதால் மனம் உடைந்த நிலையில் இருந்த எண்ணெய் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
    காரைக்குடி:

    காரைக்குடி மேல ஊருணி வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 50). எண்ணெய் வியாபாரி. இவரது மனைவி காமாட்சி. திருமணம் முடிந்து 18 வருடங்களுக்குப் பிறகு காமாட்சி கர்ப்பம் அடைந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் பிரசவத்தின் போது காமாட்சியும், அவரது குழந்தையும் இறந்து விட்டார்களாம்.

    அன்று முதல் மனம் உடைந்த நிலையில் தனிமையில் வசித்து வந்தார். இந்த நிலையில் வெங்கடேஷ் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வெங்கடேஷ் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

    மனம் உடைந்த நிலையில் இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    தேவகோட்டையில் ராணுவ வீரர் வீட்டில் 36½ பவுன் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் 1-வது வீதியை சேர்ந்தவர் வின்சென்ட் அமலநாதன். இவர் ராணுவ வீரராக மத்தியபிரதேசத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ரோஸ்லின் அமலி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    நேற்று ரோஸ்லின் அமலி வீட்டை பூட்டி விட்டு குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இரவு அங்கேயே தூங்கினார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு தனி அறையில் இருந்த பீரோவை திறந்து 36½ பவன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.

    இன்று காலை வீடு திரும்பிய ரோஸ்லின் அமலி கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளைபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் தேவகோட்டை போலீஸ் இனஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சிவகங்கையில் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் சர்வதேச பேரிடர் தணிக்கும் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் லதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை:

    சிவகங்கை அரண்மனை வாசலில் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் சர்வதேச பேரிடர் தணிக்கும் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் லதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இப்பேரணி அரண்மனை வாசலிருந்து தொடங்கி கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்தடைந்தது. பேரணியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

    நிலநடுக்கத்தின்போது மேஜை, நாற்காலிக்கு கீழ் சென்று தரையோட தரையாக அமர்ந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும். புயல் எச்சரிக்கை கிடைத்தவுடன் ஈரப்பதமில்லா உணவு, குடிநீர் மற்றும் எரிபொருட்களைப் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

    மின் பாதுகாப்பு மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு அகல வேண்டும். வெள்ள அபாயம் முன்னெச்சரிக்கை கிடைத்தவுடன் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வந்தனர்.

    மேலும், கலெக்டர் அலுவலக மைதானத்தில் தீயணைப்புத் துறையின் சார்பில் பேரிடர் வரும் காலங்களில் பாதுகாத்துக் கொள்ள செயல்முறை விளக்கம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடி அகழ்வாராய்ச்சி பள்ளங்கள் மூடப்பட்டதைக் கண்டித்து திருப்புவனத்தில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    மானாமதுரை:

    “ கீழடியில் 2500 ஆம் ஆண்டு பழமைவாய்ந்த 5,000-க்கும் மேற்பட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்மக்களின் தொன்மை வாய்ந்த வரலாற்றை, நாகரிகத்தை இழுத்து மூடும் ஏற்பாடாக, ஆராய்ச்சிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்பட்டன.தொல் பொருள் அகழ்வாராய்ச்சி மைய அலுவலகத்தை காலி செய்து விட்டனர்.

    அகழ்வராய்ச்சி பள்ளங்கள் மூடப்படுவதற்கு எதிப்பு தெரிவித்து அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் சி.பி.எம். ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமையில் சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் சுந்தர மகாலிங்கம் முன்னிலையில் திருப்புவனத்தில் நடந்தது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமி, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், த.மா.க. வட்டாரத் தலைவர் ராஜா, தே.மு.தி.க. சேகர், விடுதலை சிறுத்தைகள் கண்ணன், மாங்குடிமணி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, நகர செயலாளர் நாகூர்கனி, சி.பி.எம். மாவட்டக்குழு உறுப்பினர் அய்யம்பாண்டி, நகர செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் பேசினர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்டச் செயலாளர் கந்தசாமி பேசும்போது “கீழடி தமிழர்களின் வரலாற்று பட்டயம். இதை வைத்து தமிழன் மூத்த குடிமக்கள் என்பதை நிரூபித்துக்காட்டுவதற்கு ஏதுவாக அமைந்து விடும் என்று பா.ஜ.க. பயப்படுகிறது. 4-ம் கட்ட ஆய்வு பணி வெறும் பேச்சோடு நின்றுவிடாமல் தமிழக அரசு உடனடியாக ஆய்வை தொடங்க வேண்டும். கீழடியில் கண்டெடுக் கப்பட்ட பொருட்கள் கீழடியி லேயே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். மேலும் ஆய்வுக்கு இடம் கொடுத்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
    ×