என் மலர்
செய்திகள்

திருப்பாச்சேத்தி விவசாயி கொலையில் 2 பேர் கைது
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சோனைமுத்து (வயது 35), விவசாயி. இவர் நேற்று காலை வீட்டு முன்பு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் காணப்பட்டன.
திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் ஆவரங்காட்டைச் சேர்ந்த செல்லமுத்து (45), ராமர் (35) ஆகியோர் தான் சோனைமுத்துவை கொலை செய்திருப்பது தெரியவந்தது.
நண்பர்களான 3 பேரும் மது குடித்த போது, அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டது. இதனை அந்தப்பகுதியில் நின்றவர்கள் தடுத்து சமரசம் செய்து அனுப்பினர். அதன் பிறகு தான் சோனை முத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய, இன்ஸ்பெக்டர் முருகன், தலைமறைவாக இருந்த செல்லமுத்து, ராமரை கைது செய்தனர்.






