search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகழ்வாராய்ச்சி"

    • ஆய்வின்போது கோவில் வளாகத்தில் புதைக்கப்பட்டு இருந்த பானை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
    • பழங்கால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் உலக வரைபடத்தில் பனிகிரி இடம் பிடித்துள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் , சூரியா பேட்டை மாவட்டம், பனிகிரியில் புத்தர் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆய்வின்போது கோவில் வளாகத்தில் புதைக்கப்பட்டு இருந்த பானை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

    அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் பானையை வெளியே எடுத்தனர். அதில் பழங்காலத்தை சேர்ந்த ஏராளமான ஈய நாணயங்கள் குவிந்து கிடந்தன.

    மொத்தம் 3,730 பழங்கால நாணயங்கள் இருந்தன. பானை இருந்த இடத்தின் அருகில் கண்ணாடி மாதிரிகள் மற்றும் பெண்கள் அணியும் நகைகளின் மாதிரிகள் இருந்தன.

    ஒரே நேரத்தில் இவ்வளவு பழங்கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது நாட்டில் இதுவே முதல் முறை என அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

    பழங்கால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் உலக வரைபடத்தில் பனிகிரி இடம் பிடித்துள்ளது.

    பவுத்த வரலாற்றை இந்த நாணயங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் உலகின் பல நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் கவனம் பனிகிரி புத்த கோவில் மீது விழுந்துள்ளது.

    • தலை அலங்காரத்துடன் கூடிய ஆண் உருவ சூடுமண் கண்டெடுக்கப்பட்டது.
    • தற்போது 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து வருகிறது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் முதற் கட்ட அகழாய்வின் போது பண்டைய கால பொருட்கள் கிடைத்தது. இதை தொடர்ந்து தற்போது 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து வருகிறது.

    இந்த அகழாய்வில் இது வரை தங்க அணிகலன், தங்க பட்டை, சுடு மண்ணால் ஆன பொம்மை, சுடுமண் அகல் விளக்கு, காதணி, எடைக்கல், பதக்கம், கண் ணாடி மணிகள், வணிக முத்திரை, சங்கு வளையல் கள், யானை தந்ததால் ஆன பகடை, தக்களி, செங்கல், சில்லு வட்டம் உள்ளிட்ட ஏராளமான தொல் பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் ஆண் உருவ சுடுமண் பொம்மை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கருப்பு நிறத்துடன் வனை யப்பட்டுள்ள இப்பொம்மை தலை அலங்காரமும் உதட்டுச் சிரிப்பும் மெரு கூட்டுகிறது.

    கயல் வடிவில் கண்களும் அவற்றின் புருவங்களும் கீறல் வடிவில் வரையப்பட்டுள் ளன. வாய், மூக்கு, காதுகள் தடிமனாக உருவாக்கப் பட்டுள்ளன. இவ்வுருவம் 2.28 செ.மீ உயரமும் 2.15 செ.மீ அகலமும் 1.79 செ.மீ தடிமனும் கொண்டுள்ளது. அகழாய்வுக்குழியில் 40 செ. மீட்டர் ஆழத்தில் கிடைக்க பெற்ற இந்த ஆண் உருவ சுடுமண் பொம்மை வரலாற் றுக்காலத்தைச் சார்ந்ததாக கருதப்படுகிறது.

    • கல்வெட்டு மற்றும் பாறை ஓவியங்கள் மற்றும் மயிலாடும்பாறை அகழ்வாராய்ச்சி ஆகிய இடங்களை பார்வையிடப்பட்டது.
    • அவற்றை பாதுகாக்கவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா தொகரப்பள்ளி, ஐகுந்தம் பகுதிகளில் "காணத்தக்க கிருஷ்ணகிரி விழிப்புணர்வு சுற்றுலாத் திட்டத்தின்" கீழ் நடுகற்கள், வணிகக்குழு கல்வெட்டு மற்றும் பாறை ஓவியங்கள், மயிலாடும்பாறை அகழ்வாராய்ச்சி ஆகிய பகுதிகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையிலான விழிப்புணர்வு குழுவினர் நேற்று பார்வையிட்டனர்.

    இது குறித்து கலெக்டர் கூறுகையில், "காணத்தக்க கிருஷ்ணகிரி என்ற விழிப்புணர்வு சுற்றுலாத் திட்டத்தை" கடந்த மாதம் 29ம் தேதி முதல் பயணமாக மல்லசந்திரம் கற்திட்டைகள் பார்வையிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று (நேற்று) சனிக்கிழமை தொகரப்பள்ளி நடுகற்கள், ஐகுந்தம் வணிகக்குழு கல்வெட்டு மற்றும் பாறை ஓவியங்கள் மற்றும் மயிலாடும்பாறை அகழ்வாராய்ச்சி ஆகிய இடங்களை பார்வையிடப்பட்டது.

    இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பல்வேறு வரலாற்று சின்னங்கள், கலாச்சார பெருமை கொண்ட இடங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அனைவரும் அறிந்து கொள்ளவும், அவற்றை பாதுகாக்கவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    வருகிற 13-ந் தேதி காலை அஞ்செட்டி பகுதியில் உள்ள மீட்டர் அருவி மற்றும் சில சுற்றுச்சூழல் தலங்களை மேற்படி குழு பார்வையிட உள்ளது என்றார். இந்த பயணத்தின் போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வந்தனாகார்க், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், சுற்றுலா அலுவலர் கஜேந்திரன், தாசில்தார் திலகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, பாலாஜி மற்றும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆவணக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    • சிவகாசி அருகே 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் 200 தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
    • முன்னோர்கள் வெளிநாடுகளில் வாணிபம் செய்ததற்கான சான்றாக தற்போது கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கிடைத்து உள்ளதாக தொல்லியல் துறை இயக்குனர் தெரிவித்தார்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அகழ்வாராய்ச்சி பணிகளின் 9 நாட்கள் முடிவில் இதுவரை சுடுமண் புகைப்பான், கல்லால் ஆன எடைக்கல், செப்பு நாணயம், கண்ணாடி மணிகள், சுடுமண் காதணி உள்ளிட்ட 200 தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு வாழ்ந்த முன்னோர்கள் வெளிநாடுகளில் வாணிபம் செய்ததற்கான சான்றாக தற்போது கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கிடைத்து உள்ளதாக தொல்லியல் துறை இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.

    2-ம் கட்ட அகழாய்வில் இன்னும் பல குழிகள் தோண்ட இருப்பதால் முதல்கட்ட அகழாய்வில் கிடைத்ததை விட, பண்டைய கால பொருட்கள் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    • அகழ்வாராய்ச்சி வைப்பகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
    • இந்த தகவலை கலெக்டர் மதுசூன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    மானாமதுரை

    சிவகங்கை-மதுரை மாவட்ட எல்லையில் கீழடி, கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகள்உள்ளன. இங்கு தமிழக அரசின் தொல்லியல் துறைமூலம் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியின் முக்கிய திட்டமாக இங்கு கிடைத்த பொருட்களை கொண்டு பிரமாண்ட கட்டிடத்தில் காட்சிப்படுத்தும் வகையில் செட்டிநாடு கட்டிடகலையில் மிகப்பெரிய அகழ்வா ராய்ச்சி காப்பக அரங்கம், கல்மண்டபங்கள், கூடங்கள், குளம் போன்றவை கலை நயத்துடன் அமைக்கும் பணிநிறைவடைந்துள்ளது.

    இந்த பணிகளை இறுதி ஆய்வு செய்யும் பணி நடந்தது. சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கீழடியில் ஆய்வு செய்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் கீழடிக்கு மார்ச் முதல் வாரத்தில் வருகை தருகிறார். அப்போது கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.

    கீழடி அகழாய்வு பணியில் கிடைத்த தொல்பொருட்களை பார்த்த வகையில் தமிழர்கள் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப் படுத்துவதற்கு ஏதுவாகவும் அந்த பொருட்களை உலகத் தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வருகை புரியும் பொதுமக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலும் செட்டிநாடு கலைநயத்துடன் ரூ11.03கோடி மதிப்பீட்டில் புதிய அகழ் வைப்பக கட்டி டம் கட்டுமான பணிகள் நடந்தது.

    தமிழர்களின் சங்க கால தமிழர்களின் பெருமை களை பறைசாற்றுகின்ற வகையில் உலக அளவில் புகழ்பெற்றுள்ள கீழடி அகழ் வைப்பக கட்டிடத்தில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் வளாகத்தில் நடை பெற்ற விவரம் தொடர்பாக கலெக்டர் ஆய்வு செய்தார்.

    வருகிற மார்ச் முதல் வாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங் கெற்க உள்ளார். அப்போது கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று கலெக்டர் மதுசூன்ரெட்டி தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம், கீழடி கட்டிட மைய செயற பொறியாளர் மணிகண்டன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், சிவகங்கை கோட்டாச்சியர் சுகிதா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கான ஆயத்த பணிகள் தொடக்கங்கப்பட்டது.
    • தமிழகத்தில் இருந்து கடல் வழியாக வாணிபம் செய்ததற்கான சான்றுகளும் இந்த ஆராய்ச்சியில் கிடைத்தன.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட விஜயகரிசல்குளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தன.

    இதில் பழங்கால சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள், சுடுமண்ணால் ஆன தொங்கட்டான், பகடைக்காய் உள்ளிட்ட 3,254 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

    மேலும் விஜயகரிசல் குளத்தில் சங்கு வளையல் தயாரிப்பு கூடம் இருந்த தற்கான சாத்தியக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இருந்து கடல் வழியாக வாணிபம் செய்ததற்கான சான்றுகளும் இந்த ஆராய்ச்சியில் கிடைத்தன. அத்தோடு முதற்கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் முடிவடைந்தன.

    தமிழர்களின் நாகரீகம் மற்றும் பழமைகள் குறித்து மேலும் கண்டறிய வெம்பக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வுப்பணி நடத்தப்பட வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதன் அடிப்படையில் 2-ம் கட்ட அகழாய்வு பணியை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகள் நேற்று தொடங்கின.

    அகழ்வாரா ய்ச்சிக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சுத்தம் செய்யும் பணியும், குழிகள் தோண்டுவதற்கு அளவீடு செய்யும் பணி போன்றவை நடந்து வருகிறது.

    • கீழடி அகழ்வாராய்ச்சியை பார்வையிட வருபவர்களுக்கு நிழற்குடை-கழிவறை வசதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து 10 கி.மீ. தூரமே உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் உள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகிறது.

    தொல்லியல் ஆராய்ச்சி யாளர்களின் ஆய்வு பணிகள் பல கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் பார்வையாளர்கள், பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகள் தினமும் ஏராளமானோர் பார்வையிட்டு செல்கின்றனர்.

    அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பல அரியவகை பொருட்களை அங்கேயே மக்கள் பார்க்கும் வகையில் தமிழக அரசு சார்பில் அருங்காட்சியகம், அருங்காட்சியக பொருட்கள் வைப்பகம் கட்டப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

    தொல்லியல் ஆராய்ச்சி நடைபெற்றுவரும் பகுதிகள், அருங்காட்சியகம் போன்றவற்றை காண மதுரையில் உள்ள பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து 10 கி.மீ. தூரமே உள்ளது. பண்டைய தமிழரின் வைகைகரை நாகரிகமாக, அப்போதைய மக்கள் வாழ்வியலுக்கு பயன்படுத்திய அரிய பொருட்கள் தொடர்ந்து ஆராய்ச்சியில் கிடைத்து வருகிறது.

    அகழ்வாராய்ச்சி பகுதிக்கு எளிதில் சென்று வரும் வகையில் இங்கு போக்குவரத்து வசதி இல்லாமல் மக்கள் அவதிபடுகின்றனர். குறிப்பாக மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் இருந்து அகழ்வாராய்ச்சி நடை பெறும் பகுதிக்கு செல்லும் வழியில் பயணிகள் நிழற்குடை, கழிவறை வசதி செய்ய வேண்டும்.

    கீழடி பஸ்நிறுத்தத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். அகழ்வாராய்ச்சி பகுதிக்கு பொதுமக்கள், மாணவ- மாணவிகள் எளிதாக செல்ல மதுரை மாட்டுத்தாவணி, பெரியார் பஸ்நிலையம் மற்றும் விரகனூர் சுற்றுசாலையில் இருந்து நேரடி பஸ்கள் விடவேண்டும். அரசுமினி பஸ்கள் இயக்க வேண்டும்.

    மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் முக்கிய இடங்களில் அகழ்வாராய்ச்சி வைப்பகம் பற்றிய தகவல் பலகைகள் அமைக்கவேண்டும். கீழடிபகுதிக்கு செல்ல நான்கு வழிசாலையில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும்.

    ரெயில்களில் வரும் பயணிகளின் வசதிக்காக அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடம் அருகே உள்ள ரெயில் நிலையமான சிலைமான் ரெயில் நிலையத்தில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு அனைத்து ரெயில்களும் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுகவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×