search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "underground excavations"

    • கீழடி அகழ்வாராய்ச்சியை பார்வையிட வருபவர்களுக்கு நிழற்குடை-கழிவறை வசதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து 10 கி.மீ. தூரமே உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் உள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகிறது.

    தொல்லியல் ஆராய்ச்சி யாளர்களின் ஆய்வு பணிகள் பல கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் பார்வையாளர்கள், பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகள் தினமும் ஏராளமானோர் பார்வையிட்டு செல்கின்றனர்.

    அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பல அரியவகை பொருட்களை அங்கேயே மக்கள் பார்க்கும் வகையில் தமிழக அரசு சார்பில் அருங்காட்சியகம், அருங்காட்சியக பொருட்கள் வைப்பகம் கட்டப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

    தொல்லியல் ஆராய்ச்சி நடைபெற்றுவரும் பகுதிகள், அருங்காட்சியகம் போன்றவற்றை காண மதுரையில் உள்ள பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து 10 கி.மீ. தூரமே உள்ளது. பண்டைய தமிழரின் வைகைகரை நாகரிகமாக, அப்போதைய மக்கள் வாழ்வியலுக்கு பயன்படுத்திய அரிய பொருட்கள் தொடர்ந்து ஆராய்ச்சியில் கிடைத்து வருகிறது.

    அகழ்வாராய்ச்சி பகுதிக்கு எளிதில் சென்று வரும் வகையில் இங்கு போக்குவரத்து வசதி இல்லாமல் மக்கள் அவதிபடுகின்றனர். குறிப்பாக மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் இருந்து அகழ்வாராய்ச்சி நடை பெறும் பகுதிக்கு செல்லும் வழியில் பயணிகள் நிழற்குடை, கழிவறை வசதி செய்ய வேண்டும்.

    கீழடி பஸ்நிறுத்தத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். அகழ்வாராய்ச்சி பகுதிக்கு பொதுமக்கள், மாணவ- மாணவிகள் எளிதாக செல்ல மதுரை மாட்டுத்தாவணி, பெரியார் பஸ்நிலையம் மற்றும் விரகனூர் சுற்றுசாலையில் இருந்து நேரடி பஸ்கள் விடவேண்டும். அரசுமினி பஸ்கள் இயக்க வேண்டும்.

    மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் முக்கிய இடங்களில் அகழ்வாராய்ச்சி வைப்பகம் பற்றிய தகவல் பலகைகள் அமைக்கவேண்டும். கீழடிபகுதிக்கு செல்ல நான்கு வழிசாலையில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும்.

    ரெயில்களில் வரும் பயணிகளின் வசதிக்காக அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடம் அருகே உள்ள ரெயில் நிலையமான சிலைமான் ரெயில் நிலையத்தில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு அனைத்து ரெயில்களும் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுகவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×