search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collector latha"

    சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற 72-வது ஆண்டு சுதந்திர தின விழாவில் கலெக்டர் லதா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து 114 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். #IndependenceDayIndia
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற 72-வது ஆண்டு சுதந்திர தின விழாவில் கலெக்டர் லதா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து  114 பயனாளிகளுக்கு ரூ. 27.12  லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர்  காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 

    இந்த விழாவில் சிவகங்கை  ஆக்ஸ்போர்டு மெட் ரிக்  மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் நா.ம.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மானா மதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீ சுப்பையா அம்பலம் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. 

    பின்னர் பங்கு பெற்ற மாணவ, மாணவியர்களை பாராட்டி பாராட்டுச் சான்றுகளை கலெக்டர் லதா வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், தேவ கோட்டை சார் ஆட்சியர் ஆஷா அஜீத்,  சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் வனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். #IndependenceDayIndia 
    திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகப் பதிவேடு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு உரப்பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை குறித்து கலெக்டர் லதா ஆய்வு மேற்கொண்டார்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகப் பதிவேடு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு உரப்பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை குறித்து கலெக்டர் லதா ஆய்வு மேற்கொண்டார்.

    திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பணிப்பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்து குடிநீர், சுகாதாரம், சாலை வசதி, மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து செயல் அலுவலர் சண்முகத்திடம் கேட்டறிந்தார்.

    பின்னர் தெருவிளக்கு பராமரிப்பு பதிவேட்டினை ஆய்வு செய்தார். தொடர்ந்து 18 வார்டுகளிலும் மக்கும் மக்கா குப்பைகள் எனப் பிரித்து வாங்கப்படுகிறதா? எனக் கேட்டறிந்தார். தொடர்ந்து பேரூராட்சி அலுவலக வணிக வளாகக் கடைகளிலும் உழவர்சந்தை உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்து பொதுமக்களிடம் உங்களின் வருங்கால சந்ததிகளுக்காக பிளாஸ்டிக் பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    திடக்கழிவு மேலாண் மைப் பணிகளை ஆய்வு செய்வதற்காக சிவகங்கை சாலையில் உள்ள பேரூராட்சி உரக்கிடங்கு பகுதிக்குச் சென்று அங்கு குப்பைகள் பிரிக்கப்படுவதையும் பிளாஸ்டிக் அரைப்பு எந்திரைத்தையும் பார்வையிட்டு துப்புரவு மேற்பார்வையாளர் தங்கதுரையிடம் உரம் தயாரிக் கப்படும் உரப்படுக்கை முறையினையும் அவற்றை சந்தைப்படுத்துதல் முறை குறித்தும் விளக்கினார்.

    பின்னர் அதே பகுதியில் கோழிக்கழிவுகள் உர மாக்கப்படுவதையும் பார்வையிட்ட கலெக்டர் லதா, இந்தப்பகுதியில் காய்கறித் தோட்டம் ஆரம்பிக்கச் செய்து அதனை பயனாளிகளே அனுபவிக்க கேட்டுக் கொண்டார்.

    இந்த ஆய்வின் போது பேரூராட்சியின் உதவி இயக்குனர் ராஜா, உதவிப் பொறியாளர் பாலசுப் பிரமணியன், பணி மேற்பார்வையாளர் சந்திரமோகன், உதவி செயற்பொறியாளர் குமரகுரு ஆகியோர் உடனிருந்தனர்.

    ×