search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு கலைக்கல்லூரி"

    • வருகிற 22-ந்தேதி மற்றும் 23-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடை பெறுகிறது.
    • 23-ந்தேதி அன்று கணிதம், இயற்பியல், உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கும் பொதுக்கலந்தாய்வு நடைபெறும்.

    கும்பகோணம்:

    கும்பகோணம், அரசு கலைக் கல்லூரி முதல்வர் மாதவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்ப தாவது:-

    கும்பகோணம், அரசினர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ மாணவியர்களுக்கான பொதுக் கலந்தாய்வு வருகிற 22-ந் தேதி மற்றும் 23 ந் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடை பெறுகிறது.

    வருகிற 22 ந் தேதி அன்று தமிழ், ஆங்கிலம், பொருளியல், வரலாறு, இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாவியல், வணிகவியல், வணிக மேலாண்மை மற்றும் புவியியல் ஆகியப் பாடப்பிரிவுகளுக்கும்

    23-ந் தேதி அன்று கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், புள்ளியியல், கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் பொதுக்கலந்தாய்வு நடை பெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 14 இளநிலை பட்டப்படிப்புகளும் 10 முதுநிலை பட்டப்படிப்புகளும் உள்ளன.
    • பொதுப்பிரிவு மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக்கல்லூரியில் பொதுப்பிரிவு மாணவ- மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் முனைவர் சோ.கீ.கல்யாணி கூறியதாவது:- உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 14 இளநிலை பட்டப்படிப்புகளும் 10 முதுநிலை பட்டப்படிப்புகளும் உள்ளன. இதில் 2023- 2024 ம் கல்வியாண்டிற்கு இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெற்று வருகிறது. முதல் கட்ட கலந்தாய்வில் சிறப்பு பிரிவில் மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவர் படை, விளையாட்டு துறை என மொத்தம் 21 பேர் சேர்ந்தனர். அதைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் பெற்ற தரவரிசைப்படி பொதுப்பிரிவு மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது.

    இதில் பிபிஏ., பாடப்பிரிவில் 10 மாணவர்களும்,பி.காம் பாடப்பிரிவில் 52 மாணவர்களும்,பி.காம்(சிஏ) பாடப்பிரிவில் 59 மாணவர்களும்,இ.காமர்ஸ் பாடப்பிரிவில் 11மாணவர்களும்,பொருளியல் பாடப்பிரிவில் 6 மாணவர்களும், அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் 2 மாணவர்களும் ஆக மொத்தம் 140 மாணவ, மாணவிகள் சேர்ந்தனர் .முதல் கட்ட கலந்தாய்வின் 3- ம் நாளான இன்று கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கைக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் அறிவியல் பாடப்பிரிவிற்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.கலந்தாய்வுக்கு வருகை தரும் மாணவர்கள் 10,11,12-ம்வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் , மாற்று சான்றிதழ்,ஆதார் அட்டை,சாதிச்சான்றிதழ் ஆகிய அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் 3 நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 6 , இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகல்,தரவரிசை நகல் , கல்லூரிக்கட்டணம் உள்ளிட்டவற்றை கொண்டு வரவேண்டும்.கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள் கட்டாயம் பெற்றோருடன் வரவேண்டும்.இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

    • அரசு கலைக்கல்லூரிகளில் தமிழகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்கள் படித்து வருகின்றனர்.
    • மே மாதத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வு தொடங்குகிறது.

    சென்னை:

    அரசு கலைக்கல்லூரிகளில் தமிழகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தாமதமாக தொடங்கின.

    இதனால் பாடத்திட்டங்களை பருவத்தேர்வுக்கு முன்னதாக முடிப்பதில் சிரமம் உள்ளது.

    மே மாதத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வு தொடங்குகிறது. அதற்குள் பாடப்பகுதியை முடிக்க அனைத்து கலைக்கல்லூரிகளுக்கும் கல்லூரி இயக்கம் உத்தரவிட்டுள்ளது.

    மே 1-ந் தேதிக்குள் பாடத்திட்டத்தை முடிக்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. அதனால் அனைத்து அரசு, உதவி பெறும் கலைக்கல்லூரிகளில் சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தி பாடப் பகுதிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கி வைத்தனர்.
    • தாராபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    தாராபுரம் :

    திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தில் அரசு கலைக்கல்லூரி கட்டும் பணி மற்றும் மூலனூா், குண்டடம் ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.23.25 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப்பணிகளை செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கி வைத்தனர்.

    இதைத்தொடா்ந்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- தாராபுரம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் அருகில் ரூ.11.38 கோடி மதிப்பில் அரசு கலைக்கல்லூரி கட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி நபாா்டு வங்கி நிதி உதவியின் கீழ் கட்டப்பட்ட மயில்ரங்கம் ஆட்டுச்சந்தை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சந்தையில் 40 கடைகளுடன், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் வகையில் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க இலக்காக நிா்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா்.

    முன்னதாக மூலனூா் பேரூராட்சி வாா்டு எண் 8ல் பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வடுகப்பட்டி சாலை முதல் வெங்கல்பட்டி சாலை வரை ரூ.30 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைத்தல், ரூ.6.67 லட்சம் மதிப்பில் சின்னகாம்பட்டி ஆதிதிராவிடா் காலனியில் புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்தல், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், சூரியநல்லூா் ஊராட்சி, சோ்வகாரன்பாளையம் அன்னமாா் கோவில் அருகில் பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.17 கோடி மதிப்பீட்டில் மானூா்பாளையம் முதல் மேற்கு சடையம்பாளையம் சாலை வரை புதிய தாா்சாலை அமைத்தல், ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் புளியம்பட்டி முதல் வெள்ளியம்பாளையம் வரை புதிய தாா்சாலை அமைத்தல் என மொத்தம் ரூ.23.25 கோடி மதிப்பீட்டிலான வளா்ச்சித் திட்டப்பணிகளைத் அமைச்சா்கள் தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் அசோக்குமாா், திருப்பூா் மாநகராட்சி 4வது மண்டலத்தலைவா் இல.பத்மநாபன், தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன், மூலனூா் பேரூராட்சி தலைவா் தண்டபாணி, தாராபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

    • தொடர்ந்து நடைபெற்ற பிறந்தநாள் பேச்சுப் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 27 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அண்ணாவின் 114வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இடையே பேச்சுப்போட்டி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிறந்தநாள் பேச்சுப் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 27 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் கணிதத் துறை மாணவி சுபாஷினி போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் மூன்றாம் பரிசு பெற்றார்.

    மேலும் பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் நடைபெற்ற மினி மராத்தான் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக 14 மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

    இதில் மூன்றாம் ஆண்டு தமிழ்துறை மாணவன் சூர்யா இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கல்லூரி முதல்வர்முனைவர் விஜயலட்சுமி கலந்து கொண்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி பேரவை தலைவர் குமார், தமிழ்துறை தலைவர் சசிகுமார், துறை தலைவர்கள் நாராயணசாமி, சாந்தி, கார்த்திகா, உடற்கல்வி இயக்குனர் பிரபாகரன், நூலகர் சுப்பிரமணியன், நுண்களை மன்ற போட்டிகள் ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு வாழ்த்து பெற்ற மாணவர்களை பாராட்டினர்.

    மேலும் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை கடந்த 8ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.
    • மொத்தம் 62 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2022 -23 ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை கடந்த 8ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இளநிலை பாடப்பிரிவுகளில் மொத்தம் 864 இடங்கள் உள்ளன.

    முதல் கட்ட கலந்தாய்வில் பெரும்பான்மையான இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் கலை பாடப்பிரிவுகளில் 17 இடங்கள் அறிவியல் பாடப் பிரிவுகளில் 13 இடங்கள் வணிகவியல் பாடப்பிரிவுகள் 32 இடங்கள் என மொத்தம் 62 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. காலியாக உள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கடந்தாய்வு வரும் 27 -ந்தேதி நடைபெற உள்ளது. இது குறித்த குறுஞ்செய்தி தரவரிசை பட்டியலின் படி ஏற்கனவே விண்ணப்பித்திருந்த மாணவர்களின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும். எஸ்எம்எஸ். பெறப்பட்ட மாணவர்கள் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

    ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், 6 போட்டோக்கள் கொண்டு வர வேண்டும். மேற்கண்டவாறு கல்லூரி முதல்வர் சோ. கி.கல்யாணி தெரிவித்துள்ளார்.

    • கலந்தாய்வில் மொத்தமுள்ள 1,443 இடங்களில் 1,188 இடங்கள் நிரம்பியுள்ளன.
    • மாணவர் சேர்க்கைக்கான நேரடி கலந்தாய்வு கடந்த 5-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி வரை நடைபெற்றது.

    கோவை

    கோவை அரசு கலைக் கல்லூரியில் 26 பாடப் பிரிவுகளில் மொத்தம் சுமார் 1,443 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்காக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

    மாணவர் சேர்க்கைக்கான நேரடி கலந்தாய்வு கடந்த 5-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி வரை நடைபெற்றது.

    இதில், இளங்கலை படிப்பைப் பொறுத்தவரை பி.காம். இன்டர்நேஷனல் படிப்பில் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளன.


    இளமறிவியலில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பப் படிப்புகளில் தலா ஒரு காலியிடம் மட்டுமே உள்ளது. கலந்தாய்வில் மொத்தமுள்ள 1,443 இடங்களில் 1,188 இடங்கள் நிரம்பியுள்ளன. எஞ்சியுள்ள இடங்களும் அடுத்தகட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.


    முதல்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்ததை அடுத்து முதலாம் ஆண்டு இளங்கலை, இளம் அறிவியல் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கியது. முதல் சுழற்சியில் மாணவர்களுக்கு காலை 8.45 மணி முதல் பிற்பகல் 1.35 மணி வரையிலும், இரண்டாம் சுழற்சி மாணவர்களுக்கு பிற்பகல் 1.45 மணி முதல் மாலை 6.45 மணி வரையிலும் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 2 நாட்கள் நடைபெறுகிறது.
    • 500 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு 3,300 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    பல்லடம் :

    பல்லடம் அரசு கலைக்கல்லூரியில்,2022--23ம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று நாளையும் 2 நாட்கள் நடைபெறுகிறது. பல்லடம் அரசு கலைக்கல்லுாரியில் மொத்தம் உள்ள 500 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் 3,300 பெறப்பட்டுள்ளன.இளங்கலை மாணவர்களுக்கான கவுன்சிலிங் இன்று கல்லுாரி வளாகத்தில் நடைபெறுகிறது.

    இதில் காலை 9.30 மணி முதல் 10.30வரை மாற்றுத்திறனாளி, தேசிய மாணவர் படை, விளையாட்டுத்துறை என, சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.இதைத்தொடர்ந்து பி.ஏ.தமிழ்,பி.ஏ ஆங்கிலம் தவிர மற்ற பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 6-ந் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை பி.ஏ.தமிழ்,பி.ஏ ஆங்கிலம் தவிர மற்ற பாடப்பிரிவுகளுக்கும்,தொடர்ந்து பி.ஏ.தமிழ்,பி.ஏ ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.குறிப்பிட்ட கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. மாணவர்கள் தங்கள் தரவரிசை அறிந்து கொள்ள, கல்லூரி இணையதள முகவரியை பார்வையிடலாம்.

    சேர்க்கை பெற வரும் மாணவர்கள், அசல் டிசி,மதிப்பெண் பட்டியல், ஆதார் அட்டை,பாஸ்போர்ட் அளவு போட்டோ,ஜாதிச்சான்றிதழ், இணைய தளத்தில் பதிவு செய்த விண்ணப்ப நகல், தரவரிசை உள்ள கல்லூரி இணையதள பக்கத்தின் நகல், மூலச்சான்றிதழ் நகல் எடுத்து வர வேண்டும் இவ்வாறு கல்லூரி முதல்வர் முனியன் தெரிவித்தார்.

    • கோவை அரசு கலைக்கல்லூரியில் நடப்பாண்டில் 26 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,466 இடங்கள் நிரப்பப்பட உள்ளது
    • 170 ஆண்டுகளில், இந்த ஆண்டு தான் முதல் முறையாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

    கோவை:

    தமிழகத்தில் 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளது.

    நடப்பாண்டில், கல்லூரியில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கியது.

    இதையடுத்து பி.ஏ, பி.காம், பி.எஸ்.சி உள்ளிட்ட படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பம் அளித்து வந்தனர். மாணவர்கள் விண்ணப்ப ங்களை சமர்ப்பிக்க 7-ந் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகாத காரணத்தினால், மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி சி.பி.எஸ்.இ பள்ளிகள் தேர்வு முடிவுகள் வந்த 5 நாட்கள் வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட் டுள்ள நிலையில், நேற்றும் பலர் விண்ணப்பித்தனர்.

    கோவை அரசு கலைக்கல்லூரியில் நடப்பாண்டில் 26 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,466 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த இடங்களுக்கு நேற்று வரை சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    கோவை அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்ட 170 ஆண்டுகளில், இந்த ஆண்டு தான் முதல் முறையாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • செஞ்சியில் அரசு கலைக்கல்லூரி இந்த வருடமே கல்லூரியை தொடங்குவதற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
    • அரசு வெளியிட்டுள்ள இணையதள விண்ணப்பத்தில் அரசு கலைக்கல்லூரி செஞ்சி என்ற விலாசமும் இடம்பெற்றுள்ளது.

    விழுப்புரம்:

    செஞ்சி பகுதியில் அரசு கலைக் கல்லூரி இல்லாததால் செஞ்சி பகுதியை சேர்ந்தவர்கள் திண்டிவனம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு சென்று படித்து வந்தனர்.

    இது குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு இப்பகுதி மக்கள் மனு அளித்தனர். அதனை ஏற்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தமிழக முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததின் பேரில் தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் செஞ்சிக்கு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்தார். அதற்காக செஞ்சி அருகே சிட்டாம்பூண்டி அருகே இடமும் தேர்வு செய்யப்பட்டு அமைச்சர் மற்றும் அதிகாரிகளால் பார்வையிடப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

    இந்நிலையில் இந்த வருடமே கல்லூரியை தொடங்குவதற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தற்போது அரசு வெளியிட்டுள்ள இணையதள விண்ணப்பத்தில் அரசு கலைக்கல்லூரி செஞ்சி என்ற விலாசமும் இடம்பெற்றுள்ளது.

    அதன்படி 2022 - 2023-ம் ஆண்டுக்கு கடந்த 22-ம் தேதி முதல் அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கேட்டு க்கொள்ளப்பட்டுள்ளது. இணையதளம் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் நேரில் விண்ணப்பிப்பது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடமே அரசு கலை அறிவியல் கல்வி கல்லூரியை தொடங்கி நடத்த தனியார் இடம் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.



    • கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • பல்லடம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பல்லடம்,

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பல்லடம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணமூர்த்தி, குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சித்ரா, அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனியன், பல்லடம் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சக்திவேல், மற்றும் வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×