search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்கள்.
    X
    போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்கள்.

    போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

    புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்கவிழா நேற்று நடைபெற்றது.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வருங்காலங்களில் தேர்வு எழுத இருக்கின்ற மாணவ, மாணவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கவிழா நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். கல்லூரி வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிமைய ஒருங்கிணைப்பாளர் குமார் வரவேற்றார். நிகழ்சியில் பயிற்சியாளர்கள் குணசெல்வன் பிரபு மற்றும் பயிற்றுனர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

    வணிகவியல் துறை தலைவர் நாராயணசாமி, கணினி அறிவியல் துறை தலைவர் பிரியா, ஆங்கிலத்துறை உதவிபேராசிரியர் சத்தியமூர்த்தி, உதவிபேராசிரியர்கள் தம்பிஞானதயாளன், சுரேஷ், வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் வணிக நிர்வாகவியல் துறை உதவிபேராசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×