search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை தனியார் ஏஜென்சியில் ரூ.3.50 லட்சம் மோசடி
    X

    தஞ்சை தனியார் ஏஜென்சியில் ரூ.3.50 லட்சம் மோசடி

    • பிஸ்கட் விற்பனை செய்த வகையில் ரூ.3.50 லட்சத்தை ஒப்படைக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
    • பணத்தை கொடுக்குமாறு கேட்ட நிறுவன ஊழியர்களை அவர் மிரட்டி உள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை இந்திராநகரை சேர்ந்தவர் ராகினி (வயது 26).

    இவர் சொந்தமாக பிஸ்கட் ஏஜென்சி எடுத்து நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக விற்பனையாளராக தஞ்சை ஞானம் நகரை சேர்ந்த தேவேந்திரன்(42) என்பவர் பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் தேவேந்திரன் கடைகளில் பிஸ்கட் விற்பனை செய்த வகையில் அதன் மூலம் வசூலான ரூ.3.50 லட்சத்தை ஒப்படைக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த பணத்தை கொடுக்குமாறு கேட்ட நிறுவன ஊழியர்களை அவர் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி உள்ளார்.

    இது குறித்து ராகினி தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவேந்திரனை கைது செய்தனர்.

    Next Story
    ×