என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் பொறுப்பேற்பு
கோவை:
கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனராக பணியாற்றியவர் செந்தில்குமார். இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக நெல்லையில் ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றிய மதிவாணன் நியமிக்கப்பட்டார்.
அவர் இன்று காலை கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனராக பதவியேற்றுக் கொண்டார். அப்போது அவர் கூறும்போது, கோவை மாநகரில் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது கண்காணிக்கப்பட்டு அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பெற்றோர்கள் பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி தருவதை தவிர்க்க வேண்டும். விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட போக்குவரத்து துணை கமிஷனருக்கு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் உயரதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்