search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா வழக்கில் கைதான 72 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்
    X

    கஞ்சா வழக்கில் கைதான 72 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்

    • கஞ்சா வழக்கில் கைதான 72 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டன.
    • கடந்த ஜனவரி முதல் இதுவரை 516 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்மண்டல காவல்துறை தலைவா் அஸ்ராகா்க் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்ற 157 பேரின் பெயா்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதனடிப்படையில் 53 கஞ்சா வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட 85 போ் கைது செய்யப்பட்டனா்.

    கைதான 72 பேரின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்றதாக கடந்த ஜனவரி முதல் இதுவரை 516 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து ரூ.25.33 லட்சம் மதிப்புள்ள 2,598 கிலோ போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

    கஞ்சா, குட்கா போன்றவை விற்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் 7603846847 அல்லது ஹலோ போலீஸ் மொபைல் எண் 8300031100 ஆகியவற்றிக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர் பெயர் மற்றும் தகவல்களில் ரகசியம் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×