search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூதலூர் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
    X

    பூதலூர் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

    • நந்தியம்பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அடுத்த திருக்காட்டு ப்பள்ளியில் உள்ள அக்னீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை யொட்டி நந்தியம்பெருமானுக்கு மஞ்சள், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    இதேபோல், கோயில்பத்து ஆபத்சகா யேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தியம் பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×