search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துமலை அருகே குடிநீர் சரியாக வரவில்லை என கூறியவரை தாக்கிய துணை பஞ்சாயத்து தலைவர்
    X

    ஊத்துமலை அருகே குடிநீர் சரியாக வரவில்லை என கூறியவரை தாக்கிய துணை பஞ்சாயத்து தலைவர்

    • சசிகுமார் வீட்டிற்கு குடிநீர் செல்வதில் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.
    • பாரதிராஜா, சசிகுமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் யூனியன் மேலமருதபுரம் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட அண்ணாமலைபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவரது வீட்டிற்கு குடிநீர் செல்வதில் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சிமன்ற அலுவலகத்தில் பணிபுரிந்த பணியாளர்களிடம் அவர் கூறி உள்ளார். இதனை அலுவலர்கள் மேலமருதபுரம் ஊராட்சிமன்ற துணைத்தலைவராக இருந்து வரும் பாரதிராஜாவிடம் கூறியுள்ளனர்.

    இதனால் கோபமடைந்த பாரதிராஜா, சசிகுமாரை கன்னத்தில் அறைந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சசிகுமார் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சசிகுமார் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இச்சம்பவம் குறித்து அறிந்த ஊத்துமலை போலீசார் சசிகுமார் அளித்த வாக்குமூலம் மற்றும் புகாரின் அடிப்படையில் மேலமருதபுரம் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×