search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுகளில் ஆழமான பகுதியில் யாரும் குளிக்கக்கூடாது
    X

    கலெக்டர் தீபக்ஜேக்கப்

    ஆறுகளில் ஆழமான பகுதியில் யாரும் குளிக்கக்கூடாது

    • அபாயகரமான இடங்களில் பொதுமக்கள் யாரும் இறங்கி செல்பி எடுக்க கூடாது.
    • விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர்நிலைகள் வழியாக அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கல்லணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் திறப்பால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மற்றும் அதன் கிளை ஆறுகளில் ஆழமான பகுதிகளில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன் பிடிக்கவோ மற்றும் இதர பொழுது போக்கு நடவடிக்கையில் ஈடுபட கூடாது.

    தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள அபாயகரமான இடங்களில் பொதுமக்கள் யாரும் செல்பி எடுக்க கூடாது.

    நீர் வரத்து அதிகமாக உள்ள இடங்களில் குழந்தைகளை விளையாட விடக்கூடாது. விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர்நிலைகள் வழியாக அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×