என் மலர்
நாகப்பட்டினம்
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை தொடர்ந்து நாகை மாவட்டத்திலும் இளம்பெண்ணை மயக்கி ஆபாச படமெடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:
நாகை வெளிப்பாளையம் பேட்டை தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் சுந்தர் (வயது23). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ஆழியூர் தெற்கு தெருவை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் நாகையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
சுந்தர் அந்த கடைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது சுந்தருக்கும் ஆழியூரை சேர்ந்த அந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் அவர்களை காதலர்களாக மாற்றி உள்ளது. இதையடுத்து இருவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் காதலன் சுந்தரின் நடவடிக்கையில் இளம்பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர் சுந்தரிடமிருந்து விலகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தர் இளம்பெண்ணை மீண்டும் தன்னுடன் பழக வைக்க ஒரு திட்டம் தீட்டியுள்ளார்.
இதையடுத்து சுந்தர் மீண்டும் தனது காதலியான அந்த இளம்பெண்ணை சந்தித்து சாமர்த்தியமாக மயக்குவது போல் பேசி நட்பை நீட்டித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் அவரின் நம்பிக்கைக்கு உரியவராக நடித்துள்ளார்.
இந்நிலையில் காதலியிடம் நாம் காரைக்கால் கோவிலுக்கு சென்று வருவோம் என்று கூறி அழைத்துள்ளார். காதலன் மேல் இருந்த நம்பிக்கையில் அந்த இளம்பெண்ணும் சுந்தருடன் வர சம்மதித்துள்ளார்.

இந்நிலையில் மயக்கம் தெளிந்து எழுந்த இளம்பெண் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்தாயா எனக் கேட்டு சத்தம் போட்டுள்ளார். அப்போது சுந்தர் தன் செல்போனில் பதிவு செய்த பதிவுகளை காட்டி மிரட்டியதோடு வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தால் இளம்பெண் மீண்டும் சுந்தரிடம் பேசுவதை நிறுத்தி விட்டாராம். ஆனால் தன் செல்போனில் தெரியாமல் எடுத்த படத்தை பற்றி இளம்பெண்ணிடம் கூறி அடிக்கடி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
கொலை மிரட்டலால் அதிர்ச்சியும், தன்னை ஆபாசமாக படம் எடுத்து வைத்துள்ளதை அறிந்து அவமானமும் அடைந்த இளம்பெண் உடனடியாக இதுபற்றி கீழ்வேளூர் போலீசில் புகார் அளித்தார்.
இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்களை வாலிபர் சுந்தர் கூறியதாக தெரியவருகிறது. பல பெண்களிடம் காதலிப்பது போல் நடித்து அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி சம்பவத்தால் தமிழகமே கொந்தளித்து போய் உள்ள நிலையில் இளம்பெண்ணை ஆபாச படமெடுத்து வாலிபர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #PollachiAbuseCase
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தென்னம் புலத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் அப்பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர் நேற்றும் அதே சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். இதுபற்றி அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட மாணவர் மீது வேதாரண்யம் மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட மாணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
ஏதும் அறியாத சிறுமியை 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் பலாத்காரம் செய்தது சமூக அவலத்தை வெளிப் படுத்துவதாக உள்ளது. இதுபோன்ற மனநிலை உருவாக என்ன காரணம்? என்பதை ஆய்வு செய்து மாணவர்கள் நல்லொழுக்கம் கடைபிடிக்க பாடதிட்டங்களில் மாற்றம் தேவை என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி நாகை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று தமிழக எல்லையான நாகையை அடுத்த வாஞ்சூர் சோதனைச்சாவடி அருகே தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். காரில் ரூ. 2½ லட்சம் மதிப்பிலான கவரிங் நகைகள் இருந்தது தெரியவந்தது.
அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அந்த கவரிங் நகைகளை பறிமுதல் செய்து, நாகை சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும், உரிய ஆவணங்கள் இல்லாமல் கவரிங் நகைகளை கொண்டு வந்த சிதம்பரத்தை சேர்ந்த கணேசன், சரவணன் ஆகிய 2 பேரிடம் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ராஜாமடம் சோதனை சாவடியில் மண்டல துணை தாசில்தார் கண்ணகி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேதாரண்யத்தில் இருந்து வந்த ஒரு காரை வழிமறித்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது காரில் 2 துப்பாக்கிகள் இருந்தன. அதில் ஒன்று இத்தாலி நாட்டில் தயாரிக்கப்பட்ட இரட்டைக்குழல் துப்பாக்கி ஆகும். மற்றொன்று இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒற்றைக்குழல் துப்பாக்கி ஆகும்.
இந்த 2 துப்பாக்கிகளுக்கு உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என்பதும், இவை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் கிராமத்தை சேர்ந்த குழந்தைவேல் என்பவருக்கு சொந்தமானது என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 2 துப்பாக்கிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து பட்டுக்கோட்டை தாசில்தார் அருள்பிரகாசம் முன்னிலையில் பட்டுக்கோட்டை கருவூலத்தில் ஒப்படைத்தனர். #LSPolls
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதை சுற்றியுள்ள கரியாப்பட்டினம், சேட்டாக்குடி உள்ளிட்ட பல கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரை பிடித்து குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், பெண்கள், முதியவர்களுக்கு திடீரென வயிற்று போக்கு ஏற்பட்டது. இதனால் அவர்கள் கடுமையாக அவதியடைந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம், கரியாப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது:- எங்கள் பகுதிக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் சுகாதாரமான முறையில் இல்லை. இதனால் அசுத்தமாக கலங்கலாக வரும் தண்ணீரை குடித்தவர்கள் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடைய பீதியை ஏற்படுத்தி உள்ளது.
நாகை பாராளுமன்ற தொகுதியில் 12 லட்சத்து 92 ஆயிரத்து 658 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.
நாகை பாராளுமன்ற தொகுதி 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடங்கியது. இதில் நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளும், திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளடக்கியது.
இதில் கடந்த ஜனவரி 31-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த இறுதி வாக்காளர் பட்டியலின்படி 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் விவரம் வருமாறு:-
நாகை சட்டமன்ற தொகுதியில் 91 ஆயிரத்து 422 ஆண் வாக்காளர்களும், 96 ஆயிரத்து 390 பெண் வாக்காளர்களும், 5 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 1 லட்சத்து 87 ஆயிரத்து 817 வாக்காளர்கள் உள்ளனர்.
கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் 82 ஆயிரத்து 966 ஆண் வாக்காளர்களும், 85 ஆயிரத்து 710 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேர் என மொத்தம் 1 லட்சத்து 68 ஆயிரத்து 678 வாக்காளர்கள் உள்ளனர். வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் 90 ஆயிரத்து 228 ஆண் வாக்காளர்களும், 92 ஆயிரத்து 731 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1 லட்சத்து 82 ஆயிரத்து 959 வாக்காளர்கள் உள்ளனர்.
திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 716 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 35 ஆயிரத்து 421 பெண் வாக்காளர்களும், 22 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 159 வாக்காளர்கள் உள்ளனர். நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 379 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 27 ஆயிரத்து 991 பெண் வாக்காளர்களும், 7 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 377 வாக்காளர்கள் உள்ளனர்.
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 15 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 15 ஆயிரத்து 652 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலின வாக்காளர் என மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 668 வாக்காளர்கள் உள்ளனர்.
நாகை பாராளுமன்றத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 6 லட்சத்து 38 ஆயிரத்து 726 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 53 ஆயிரத்து 895 பெண் வாக்காளர்களும், 37 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 12 லட்சத்து 92 ஆயிரத்து 658 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் ஆண்களை விட 15 ஆயிரத்து 169 பெண்கள் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
இத்தகவலை நாகை மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார். #LSPolls
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நேற்று சமாஜ்வாதி கட்சியின் மாநில ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இதில் மாநில தலைவர் இளங்கோ யாதவ் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் 20 இடங்களில் எங்களது கட்சி போட்டியிடும்.
குறிப்பாக மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிதம்பரம், சிவகங்கை, திருவண்ணாமலை, வேலூர் உள்பட 20 இடங்களில் போட்டியிடும்.
இந்த தொகுதிகளில் நடைபெறும் பிரச்சாரத்தில் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்வார். தமிழகத்தில் மதசார்பற்ற கட்சிகள் எங்களை கூட்டணி அமைக்க அழைத்தால் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்.
தமிழகத்தில் மதசார்பற்ற தி.மு.க. எங்களை அழைத்து பேசவில்லை. தமிழகத்தில் ஒரு தொகுதியில் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளோம்.
உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், மேற்குவங்கம், உத்ரகாண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் மதசார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். #SamajwadiParty
சீர்காழி:
சீர்காழி பகுதியை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் ரமேஷ்பாபு கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிடாரி வடக்கு வீதியில் தனியார் பஸ் அதிபரை பார்ப்பதற்காக அவரது வீட்டுவாசலில் காரில் காத்துக்கொண்டிருந்த போது கூலிப்படையினர் நாட்டுவெடிகுண்டை வீசி அரிவாளால் வெட்டி அவரை கொலை செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய சீர்காழியை அடுத்த புதுத்துறை ராமகிருஷ்ணன் மகன் பார்த்தீபன் (வயது 29). திருவாரூர் ஆதனூர் மண்டபம் பகுதியை சேர்ந்த கட்டபிரபு என்கிற அருண்பிரபு ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார்த்தீபன், அருண்பிரபு ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில் சீர்காழி பகுதியில் உள்ள முக்கிய தொழில் அதிபர்களை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.
இதுகுறித்து சீர்காழி போலீசில் தொழிலதிபர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் தொழிலதிபர்களுக்கு பணம் கேட்டு மிரட்டல் விடுத்தது அ.தி.மு.க பிரமுகர் கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பார்த்தீபன் என தெரியவந்தது.
அதனை தொடர்ந்து போலீசார் பார்த்தீபனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று இரவு தென்பாதி உப்பனார் பாலம் அருகே சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் வாகனதணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை கைகாட்டி தடுத்தனர்.
அப்போது கார் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை விரட்டி சென்று மடக்கினர். அப்போது காரில் பயங்கர ஆயுதங்களுடன் பிரபல ரவுடிகளான பார்த்தீபன் மற்றும் அருண்பிரபு ஆகியோர் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து கார் மற்றும் அவர்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா கரியாப்பட்டினத்தில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கரியாப்பட்டினத்தில் 7-வது நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டம் திருகாரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஏல அறிவிப்பு செய்துள்ளது.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் விளைநிலங்கள் மற்றும் தண்ணீர் பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கரியாப்பட்டினம் அரசு மருத்துவமனை சாலையில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழுவினர் மற்றும் கரியாப்பட்டினம், செட்டிப்புலம், வடமலை மணக்காடு, தென்னம்புலம், மருதூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து 7-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வேதாரண்யம் தாலுக்கா முழுவதும் இன்று 1000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வர்த்தகர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடத்தப்படும் ‘பாராளுமன்ற தேர்தல் 2019 பிரச்சனைகளும், தீர்வுகளும் - விவசாயிகள் சந்திப்பு என்ற தமிழகம் தழுவிய பரப்புரை பிரச்சார பயணத்தை கடந்த 1-ந் தேதி தேனி மாவட்டம் பென்னிகுயிக் மணிமண்டபத்தில் இருந்து தொடங்கப்பட்டது.
இந்த குழுவின் தலைவரும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான பி.ஆர்.பாண்டியன் நேற்று மாலை நாகை மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் பி.ஆர்.பாண்டியன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
காவிரி டெல்டா மாவட்டங்களில் ரிலையன்ஸ் நிறுவனம் 47 வருவாய் கிராமங்களில் 47 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை அபகரித்து பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைத்தால் மனிதன் வாழ தகுதியற்ற இடமாக மாறி வரும். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதியை மத்திய மோடி அரசு வழங்கி விட்டு தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி பொதுக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்கிறார். தமிழக முதல்வர் பிரதமரிடம் மேகதாது அணை கட்டக்கூடாது என வலியுறுத்தி பேசவில்லை.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் விளை நிலங்கள் வழியாக உயர் கோபுரங்கள் அமைக்கப்படுகிறது. இதனை எதிர்த்து விவசாயிகள் போராட் டம் நடத்தியும் எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை.
கஜா புயலின் போது 1 கோடி தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டன. இதற்கு இன்னும் நிவாரணம் வழங்க வில்லை. இதே போல் வர்தா, தானே புயல் இழப்பிற்கும் எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை.
திருவாரூர் மாவட்டத்தில் திருக்காரவாசலை மையமாக வைத்து 474.19 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப் பட்டால் பேராபத்து ஏற்படும். மத்திய அரசு 18 கோடி விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது. தற்போது தகுதியானவர்கள் ஒரு கோடி பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1.25 லட்சம் பேர் ரூ.2000 வாங்க தகுதியானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 16 லட்சம் பேர் மனு செய்துள்ளனர்.
விவசாயிகளின் 46 கோரிக்கைகளை யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுடன் சேர்ந்து செயல்படுவோம். பணம் கொடுத்து விவசாயிகளின் வாக்குகளை வாங்க முடியாது. அவ்வாறு நினைத்தால் விவசாயிகள் திருப்பி அடிப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #prpandian #centralgovernment #tnfarmers
திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சி கோட்டப்பாடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டி பழுதாகி சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்தது. மேலும் தொட்டியின் தூண்கள் உடைந்து காணப்பட்டது. இந்த தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து ஆபத்து ஏற்படும் நிலையில் இருந்தது.
இதனை இடித்து விட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தம், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், பொதுமக்கள் பள்ளி முன்பு மறியலில் ஈடுபட ஒன்று திரண்டனர். தொட்டியை இடித்து அப்புறப்படுத்தும் வரை தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறி மறியல் போராட்டம் செய்ய முயன்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருமருகல் ஒன்றிய கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரமூர்த்தி மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து கடந்த 26-ந்தேதி “தினத்தந்தி” நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை இடித்து அப்புறப்படுத்தினர். உடனே நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட “தினத்தந்தி” நாளிதழுக்கும் அப்பகுதி பெற்றோர்கள், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அரச்சர கட்டளையை சேர்ந்தவர் பாலுச்சாமி (வயது 58). கூலிதொழிலாளி. இவரது கூரை வீட்டில் மின்கசிவு காரணமாக நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் தீபிடித்தது. இதனை கண்ட பாலுச்சாமி குடும்பத்தினர் அவசர அவசரமாக வெளியேறி உயிர் தப்பினர். அவர்களும், அப்பகுதி மக்களும் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. அது அருகில் உள்ள சித்திரை வேல் மற்றும் கண்ணன் ஆகியோர் வீடுகளிலும் பரவியது. இதில் 3 வீடுகளில் இருந்த பொருட்களும் முற்றிலும் எரிந்து சேமானது.
இந்த தீ விபத்தில் ரூ.2 லட்சம் ரொக்கம், 25 பவுன் நகை ஆகியவையும் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
3 வீடுகளிலும் வீட்டு உபயோக பொருட்கள், ஆவணங்கள், ஆடைகள் உள்பட அனைத்து பொருட்களும எரிந்து விட்டன.
தீயை கட்டுபடுத்த முடியாததால் இதுபற்றி வேதாரண்யம் தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் அருகில் உள்ள வீடுகளில் தீ பரவுவது தடுக்கப்பட்டு அவை தீ விபத்தில் இருந்து தப்பின.
நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






