என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேதாரண்யம் அருகே நள்ளிரவு 3 வீடுகளில் தீ விபத்து
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அரச்சர கட்டளையை சேர்ந்தவர் பாலுச்சாமி (வயது 58). கூலிதொழிலாளி. இவரது கூரை வீட்டில் மின்கசிவு காரணமாக நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் தீபிடித்தது. இதனை கண்ட பாலுச்சாமி குடும்பத்தினர் அவசர அவசரமாக வெளியேறி உயிர் தப்பினர். அவர்களும், அப்பகுதி மக்களும் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. அது அருகில் உள்ள சித்திரை வேல் மற்றும் கண்ணன் ஆகியோர் வீடுகளிலும் பரவியது. இதில் 3 வீடுகளில் இருந்த பொருட்களும் முற்றிலும் எரிந்து சேமானது.
இந்த தீ விபத்தில் ரூ.2 லட்சம் ரொக்கம், 25 பவுன் நகை ஆகியவையும் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
3 வீடுகளிலும் வீட்டு உபயோக பொருட்கள், ஆவணங்கள், ஆடைகள் உள்பட அனைத்து பொருட்களும எரிந்து விட்டன.
தீயை கட்டுபடுத்த முடியாததால் இதுபற்றி வேதாரண்யம் தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் அருகில் உள்ள வீடுகளில் தீ பரவுவது தடுக்கப்பட்டு அவை தீ விபத்தில் இருந்து தப்பின.
நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்