search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் அருகே  நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்- பால் வியாபாரி பலி
    X

    சங்கரன்கோவில் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்- பால் வியாபாரி பலி

    • பால் வியாபாரி மாடசாமி டீக்கடையில் பால் ஊற்றிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி உள்ளார்.
    • காயமடைந்த மாடசாமி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள நைனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி (வயது 32). பால் வியாபாரி.

    இவர் இன்று காலை சங்கரன்கோவில் - ராஜபாளையம் சாலையில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள டீக்கடையில் பால் ஊற்றிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி உள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த லாரி மீது அவரது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் காயமடைந்த மாடசாமி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மாடசாமிக்கு ராம சீதா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×