என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தாய் தூக்குப்போட்டு தற்கொலை
- மதுரை அருகே மகள் இறந்த வீட்டில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மதுரை
மதுரை புது ஜெயில் ரோடு, ராம் நகரை சேர்ந்தவர் சுப்பையா. இவர் தனியார் மில் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கலாவதி (வயது 68). இவர்கள் இதற்கு முன்ப கீழ வைத்தியநாதபுரம் வீட்டில் வசித்து வந்தனர். அப்போது சரஸ்வதியின் மகள் அங்கு தூக்கு போட்டு இறந்தார். எனவே சுப்பையா அந்த வீட்டை காலி செய்து விட்டு, புது ஜெயில் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இருந்தபோதிலும் சரஸ்வதி தினமும் காலை கீழவைத்தியநாதபுரம் வீட்டுக்கு சென்று, அங்கு விளக்கு ஏற்றி வைத்து விட்டு மாலை நேரத்தில் வீடு திரும்புவது வழக்கம்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு நேரமாகியும் சரஸ்வதி வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கீழவைத்தியநாதபுரத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் சரஸ்வதி தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக செல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை புது ஜெயில் ரோடு, ராம் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (38). இவர் அங்கு உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மீனாட்சியும், அதே ஜவுளிக்கடையில் ஊழியராக உள்ளார்.
இந்த நிலையில் சக்திவேல் கடந்த 4 நாட்களாக வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து விட்டு ஊர் சுற்றி திரிந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வந்தது எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த சக்திவேல் நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்