search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது
    X

    வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது

    • வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    • தப்பி ஓடிய ரத்தின ஈஸ்வரன் என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 39). இவர் அதே பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருடன் கள்ள தொடர்பு வைத்து இருந்தார். இதனை அந்த பெண்ணின் சகோதரர் தட்டி கேட்டார். இருந்த போதிலும் ராமமூர்த்தி அந்த பெண்ணுடன் தொடர்ந்து பழக்கத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் ராம மூர்த்தி நேற்று மாலை வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர், கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றனர். இது தொடர்பாக ராமமூர்த்தி, சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் கொடுத்தார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமமூர்த்தியை கத்தியால் குத்தியதாக, முத்துப்பட்டி நாகேந்திரன் மகன் வெற்றி வேல் (வயது 22) என்பவரை கைது செய்தனர். தப்பி ஓடிய ரத்தின ஈஸ்வரன் என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×