search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொட்டாம்பட்டி பகுதியில் கலெக்டர் ஆய்வு
    X

    எட்டிமங்கலம் அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார்.

    கொட்டாம்பட்டி பகுதியில் கலெக்டர் ஆய்வு

    • கொட்டாம்பட்டி பகுதியில் கலெக்டர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார்.
    • குழந்தைகளின் உயரம், எடை ஆகியவற்றை பரிசோதித்தார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த எட்டிமங்கலம், சென்னகரம் பட்டி, குன்னாரம்பட்டி, வலைச்சேரி பட்டி, கருங்காலக்குடி ஆகிய ஊராட்சிகளில் மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார்.

    அங்கன்வாடி மையங்களுக்கு சென்று ஆய்வு செய்த அவர் குழந்தைகளின் உயரம், எடை ஆகியவற்றை பரிசோதித்தார். எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு சத்துணவு வழங்க அமைப்பாளர்களுக்கு அறிவுரை கூறினார்.

    சென்னகரம்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையை பார்வையிட்டார். பின்னர் வேளாண் திட்டங்கள் மற்றும் மண்புழு தயாரிக்கும் திட்டம் குறித்தும் ஆய்வு செய்தார். கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற கலெக்டர் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் கொட்டாம்பட்டி ஒன்றிய ஆணையாளர் ராமமூர்த்தி, மேலூர் தாசில்தார் இளமுருகன், எட்டி மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பங்கஜம், சென்னகரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதர், குன்னாரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், வலைச்சேரி பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சத்திய பிரியா கண்ணன், கருங்காலக்குடி ஊராட்சி மன்ற தலைவர் பீர் முகமது, தி.மு.க நகர் இளைஞர் அணி செயலாளர் நாச்சிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×