search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணி விழிப்புணர்வு முகாம்
    X

    விழிப்புணர்வு முகாம்

    தூய்மை பணி விழிப்புணர்வு முகாம்

    • தூய்மை பணி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • பேரூராட்சி தலைவர் பால் பாண்டியன் தலைமை தாங்கினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூராட்சி 5-வது வார்டு தாதப்பநாயக்கன்பட்டியில் தூய்மைக்கான மக்கள் இயக்க தீவிர தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. பேரூராட்சி தலைவர் பால் பாண்டியன் தலைமை தாங்கினார்.

    செயல் அலுவலர் சண்முகம் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் சரசுராம் வரவேற்றார். தூய்மைப் பணி விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து கொடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தி செயல்முறை விளக்கத்துடன் எடுத்துக் கூறப்பட்டது. கவுன்சிலர் ஜெயகாந்தன் நன்றி கூறினார்.

    Next Story
    ×