search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபரிடம் செல்போன் பறிப்பு
    X

    வாலிபரிடம் செல்போன் பறிப்பு

    • வாலிபரிடம் செல்போன் பறிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பொன்மேனி பகத்சிங் தெருவை சேர்ந்த வெள்ளையன் மகன் முத்துகண்ணன் (வயது 21). இவர் நேற்று இரவு பழங்காநத்தம் பைபாஸ் ரோடு வ.உ.சி பாலத்தில் நடந்து சென்றார்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், கத்தியை காட்டி மிரட்டி முத்துகண்ணன் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றார். இதுதொடர்பாக முத்துகண்ணன் சுப்பிரமணியபுரம் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×