என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆலை விரிவாக்கத்தால் அடுத்த 6 ஆண்டுகளில் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • முதலீட்டுக்கான ஒப்பந்தம் சென்னையில் நாளை நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    ஓசூர்:

    ஐபோன் உதிரிப்பாகம் தயாரிப்பு தொழிற்சாலை விரிவாக்கம் செய்வதற்காக ஓசூரில் டாடா நிறுவனம் கூடுதலாக ரூ.7000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஓசூரில் உள்ள டாடா எலெக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆலை விரிவாக்கத்தால் அடுத்த 6 ஆண்டுகளில் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முதலீட்டுக்கான ஒப்பந்தம் சென்னையில் நாளை நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    • பாதுகாப்பு பணியில் பாரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகா மற்றும் சிவசந்திரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் இருந்தனர்.
    • வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, தாமோதரஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னபாறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதன் (வயது 75). விவசாயி.

    இவர் அனுபவத்தில் அதே பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 60 சென்ட் இடம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மாதன் உறவினரான சின்னசாமி (58) என்பவர் 60 சென்ட் இடம் தனக்கு சொந்தமானது என கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதில் சின்னசாமிக்கு சாதகமான தீர்ப்பு பெற்றுள்ளார்.

    இதுகுறித்து கோர்ட் உத்தரவின்படி நேற்று சம்மந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்ய வருவாய்த் துறையினர் சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் பாரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகா மற்றும் சிவசந்திரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் இருந்தனர்.

    இந்த நிலையில் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மாதன் மற்றும் அவரின் மகன் லட்சுமணன் வயது (33)மற்றும் மாதன் மகள்களான 4 பேர், ஒரு வயது குழந்தையுடன் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் நிலம் அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென்று உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தனர்.

    இதனை சற்றும் எதிர்பாராத போலீசார் உடனடியாக மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி தடுத்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போர்களமாக மாறியது.

    பின்னர் சின்னபாறையூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வருவாய்த் துறையினர், போலீசாரிடம் வருகிற 8-ந்தேதி நிலம் அளவீடு செய்ய வழிவகை செய்யும் விதத்தில் மாதன் மற்றும் சின்னசாமியிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் காண்பதாக உத்தரவாதம் அளித்தனர்.

    இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஷோரூம் நிர்வாகிகள் ஜிபிஎஸ் மூலமாக லாரி நிற்கும் இடத்தை கண்டறிந்தனர்.
    • போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ஓசூர்:

    ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான ஆனேக்கல் அடுத்துள்ள செட்டிஅள்ளி என்ற பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஷூ ஷோரூம் உள்ளது.

    இங்கு லாரி டிரைவராக வேலை பார்த்து வரும் அகமத் (வயது 30) என்பவர் ஷோரூமில் இருந்து ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்புள்ள 1,558 ஜோடி ஷூக்களை ஒரு லாரியில் ஏற்றி கொண்டு பெங்களூர் அருகே உள்ள அணுகுண்டன அள்ளி சௌக்கிய சாலையில் உள்ள மிந்த்ரா என்ற குடோனுக்கு சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியில் அகமத்தும் அவரது நண்பர்களும் ஏற்கனவே திட்டமிட்டபடி ஷூக்கள் இருந்த லாரியை குடோனுக்கு கொண்டு செல்லாமல் ராஜா பாளையம் என்ற பகுதியில் உள்ள ஒரு இடத்திற்கு கொண்டு சென்று அங்கு ஷூக்களை மறைத்து வைத்துள்ளனர்.

    ஷூக்கள் ஏற்றி சென்ற லாரியை அந்த பகுதியில் உள்ள ஒரு சாலையில் நிறுத்தி விட்டு அனைவரும் தப்பி சென்றுவிட்டனர். உரிய நேரத்தில் குடோனுக்கு ஷூக்கள் கொண்டு செல்லப்படாததால் ஷோரூம் நிர்வாகிகள் ஜிபிஎஸ் மூலமாக லாரி நிற்கும் இடத்தை கண்டறிந்தனர்.

    அதனைத்தொடர்ந்து அவர்கள் அங்கு சென்று லாரியை திறந்து பார்த்த போது லாரிக்குள் ஷூக்கள் ஏதும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஷோரூம் நிர்வாகத்தினர், அத்திப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் போலீசார் ஷூக்களை கடத்தி சென்றவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் ஷூக்களை கடத்திய சுபான் பாஷா (30) மன்சூர் அலி (26) மற்றும் சஹீத்துல் ரகுமான் (20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்கள் ராஜாபாளையம் பகுதியில் ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த ஷூக்கள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான லாரி டிரைவர் அகமத் மற்றும் தலைமறைவாக உள்ள மேலும் சிலரையும் அத்திப்பள்ளி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கடந்தாண்டு தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளனர்.
    • ஆயிரக்கணக்கானோர் மாத தவணையாக, 50 கோடி ரூபாய்க்கும் மேல் கட்டி ஏமாந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த ஒருவர், தனது சகோதரி மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோருடன் இணைந்து திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் நிதி நிறுவனம் நடத்தினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை பகுதிகளில் கடந்த, 2021-ம் ஆண்டு முதல், 7 கிளைகளுடன், போச்சம்பள்ளியை தலைமையிடமாக கொண்டு நிதி நிறுவனம் நடத்தி உள்ளனர். இதில், கடந்தாண்டு தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளனர்.

    இதை நம்பி, போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை உள்ளிட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள், ஆந்திர மாநிலம் குப்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட, ஆயிரக்கணக்கானோர் மாத தவணையாக, 50 கோடி ரூபாய்க்கும் மேல் கட்டி ஏமாந்துள்ளனர்.

    இது தொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி, போச்சம்பள்ளி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 100-க்கும் மேற்பட்டோர் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டத்தை முடித்து திரும்பிய அமைச்சர் சக்கரபாணியிடம் பொது மக்கள் புகார் தெரிவித்து மனு கொடுத்தனர்.

    அந்த நேரம் காரில் இருந்து இறங்கி வந்த அமைச்சர் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் கூறி உள்ளேன். உங்கள் பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • 15 பேர் கொண்ட கும்பல் இருவரையும் வெட்டி படுகொலை செய்தது.
    • கொலை வழக்கில் ஈடுபட்டவர்களை மேலும் சிலரை ஓசூர் டவுன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பிஸ்மில்லா நகரை சேர்ந்தவர் பர்கத் (வயது31).

    அதேபோல ஓசூர் பழைய வசந்த நகர் பகுதியை சேர்ந்தவர் பொன்வண்ணன் என்ற சிவா (வயது.27). இவர்கள் தமிழக வாழ்வுரிமை கட்சியில் முன்னாள் நிர்வாகிகளாக இருந்தனர்.

    இந்நிலையில் கடந்த 19-ந் தேதி நள்ளிரவில் அதே பகுதியைச் சேர்ந்த பக்கா பிரகாஷ் என்பவரை சேலம் மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே எடுத்து வந்து ஓசூருக்கு அழைத்து வந்தனர். அப்போது அவர்கள் 3பேரும் பார்வதி நகர் என்ற இடத்தில் வந்தபோது பர்கத் மற்றும் சிவா ஆகிய 2 பேரை 15 பேர் கொண்ட கும்பல் இருவரையும் வெட்டி படுகொலை செய்தது. இதில் இவர்களது நண்பர் பக்கா பிரகாஷ் என்பவர் தப்பித்து ஓடியதில் உயிர் தப்பினார்.

    இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், இந்த சம்பவத்தின்போது தப்பித்த பக்கா பிரகாஷ் என்பவர் ஓசூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில்

    முன்விரோதம் காரணமாக ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த நாகராஜ், ராம்நகரை சேர்ந்த நவாஸ், சாந்தி நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், கனிஞ்சூர் கிராமத்தை சேர்ந்த முனிராஜ், ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த முனியப்பா மற்றும் கூச்சன் உள்ளிட்ட 15 பேர் தங்களை கொலை செய்ய வந்ததும் இதில் தான் தப்பியதாகவும், இவர்கள் தான் தன்னுடைய நண்பர்கள் பர்கத் மற்றும் பொன்வண்ணன் ஆகியோரை கொலை செய்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

    அதன் அடிப்படையில் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் கன்ஞ்சூர் கிராமத்தை சேர்ந்த முனிராஜ் (49) என்பவரை கைது செய்தனர். அதனை தொடர்ந்து அவரை நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று மதியம் ஓசூர் ராம் நகர் பகுதியைச் சேர்ந்த நவாஸ் (37), சீதாராம்மேடு பகுதியைச் சார்ந்த ஹமித் (24) ஆகிய 2 பேரும் பாலக்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

    2 பேருக்கும் 15 நாள் சிறை அடைப்பு காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து போலீசார் அவர்களை தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர். பாலக்கோட்டில் சரண அடைந்த 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க ஓசூர் டவுன் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில இரட்டைக் கொலையில் தொடர்புடைய ஓசூர் பெரியார் நகரை சேர்ந்த முபாரக்(27), சானசந்திரம் ஆரிப் (22) மற்றும் ஓசூர் சீதாராம் மேடு பகுதியை சேர்ந்த நிஜாம் (26) ஆகிய 3 பேரை ஓசூர் டவுன் போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரையும் நேற்று இரவு ஓசூருக்கு போலீசார் அழைத்து வந்தனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் இதுவரை ஓசூரில் கைதான முனிராஜ், முபாரக், ஆரிப் நிஜாம் மற்றும் கோர்ட்டில் சரணடைந்த நவாஸ், ஹமித் ஆகிய 5 பேரும் சிக்கி உள்ளனர். இந்த கொலை வழக்கில் ஈடுபட்டவர்களை மேலும் சிலரை ஓசூர் டவுன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • நான் தூத்துக்குடிக்கு சென்ற பொழுது தூத்துக்குடியில் கிட்டத்தட்ட 10 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
    • ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு தி.மு.க. அரசு.

    காவேரிப்பட்டிணம்:

    முன்னாள் அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஅள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமியின் தந்தை மறைவையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

    வானிலை ஆய்வு மையம் ஒரு வாரத்துக்கு முன்பாகவே சென்னையில் அதிக கனக மழை பெய்யும் என வலியுறுத்தியது. தற்போதுள்ள அரசுக்கு அந்த செய்தி தெரிந்தும் பொருட்படுத்தவில்லை.

    சரியான நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் சென்னையில் உள்ள பொதுமக்கள் இவ்வளவு துன்பத்திற்கு ஆளாகி இருக்க மாட்டார்கள்.

    அ.தி.மு.க. அரசின்போது ஒரு மாதத்திற்கு முன்பாகவே நடவடிக்கை எடுத்திருக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது உள்ள அரசு எந்தவித முன்னெச்சரிக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னையில் 1300 மின்மோட்டார்கள் அ.தி.மு.க. அரசில் வைத்திருந்தோம். தாழ்வான இடங்களில் கனரக ராட்சத மின் மோட்டார் வைத்து உடனடியாக மழை நீரை அகற்றினோம். ஒவ்வொரு வார்டுகளிலும் அம்மா உணவகத்தில் தரமான உணவை மக்களுக்கு வழங்கினோம். தற்போது அரசின் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா உணவகத்தை மூடிவிட்டனர்.

    இதேபோன்று தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிக கனமழை பொழியும் என்று வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழக அரசுக்கு தெரியும்.

    நான் தூத்துக்குடிக்கு சென்ற பொழுது தூத்துக்குடியில் கிட்டத்தட்ட 10 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

    இங்குள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை பால், தண்ணீர், உணவு ஆகிவற்றை இந்த அரசு எதுவும் அந்த பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை.

    தூத்துக்குடி நான் சென்ற பொழுது அங்கு எந்த அமைச்சரும் வரவில்லை என மக்கள் குற்றம்சாட்டினர். இந்த அரசு செயலாற்ற அரசாக காட்சியளிக்கிறது.

    இந்தியா கூட்டணி குழப்பத்தில் உள்ளது. அடுத்த கூட்டம் நடக்குமா? இல்லையா? என தெரியவில்லை. அக்கூட்டணியில் ஒருவர் தற்போது இந்தியில் பேச வேண்டும் என கூறுகிறார். வெவ்வேறு கருத்துக்களுடைய கட்சிகள் கூட்டணி அமைப்பது நீடிக்குமா என தெரியவில்லை.

    தற்போது 2 அமைச்சர்கள் சிறைக்கு செல்கின்றனர். ஆனால் இன்னும் எத்தனை பேர் சிறைக்கு செல்வார்கள் என பொறுத்திருந்து பாருங்கள். ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு தி.மு.க. அரசு.

    இவர்கள் சாதனை செய்தது ஊழல் தான். அனைத்து இடங்களிலும் கமிஷன், கரப்சன், இதுதான் அவர்களின் தாரக மந்திரம். அ.தி.மு.க. அரசு 10 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியாக செயல்பட்டது. கடந்த 2½ ஆண்டு காலமாக தமிழகத்தை படுபாதாள இடத்தில் இந்த அரசு தள்ளிவிட்டுள்ளது. இந்த அரசு எதற்கெடுத்தாலும் குழு போட்டு செயல்படுகிறது. ஆகவே இந்த அரசு குழு அரசாங்கமாக செயல்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமி மறைந்த பூங்காவனத்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
    • முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமிக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.

    காவேரிப்பட்டிணம்:

    கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தந்தை மறைவையொட்டி எடப்பாடி பழனிசாமி காவேரிப்பட்டிணத்தில் உள்ள அவரது இல்லத்தில் கே.பி முனுசாமி சந்தித்து ஆறுதல் கூறினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. அவருடைய தந்தை பூங்காவனம் (வயது103) கடந்த 18-ந் தேதி வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார்.

    இதைத்தொடர்ந்து இன்று காவேரிப்பட்டிணத்திற்கு வருகை புரிந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, மறைந்த பூங்காவனத்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    இதில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன், பாலகிருஷ்ணரெட்டி, அ.தி.மு.க. கொறடா எஸ்.பி. வேலுமணி, உள்ளிட்டோரும் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமிக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஊத்தங்கரை எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்று உள்ளனர்.

    • மலையின மக்களின் சுகாதார தேவைகள் குறித்து அறிந்து கொண்டேன்.
    • மலை கிராமங்களில் இளம்பிள்ளைகள் திருமணத்தை தடுக்க வேண்டும்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள குடகரை பகுதியில் இன்று காலை 7 மணியளிவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் பயன்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளரிகளிடம் கூறியதாவது;-

    கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தேன்கனிக்கோட்டையில் உள்ள மலை கிராமங்களில் நான் ஆய்வு மேற்கொண்ட போது மலையின மக்களின் சுகாதார தேவைகள் குறித்து அறிந்து கொண்டேன். அந்த அடிப்படையில் உருவானது தான் மக்களை தேடி மருத்துவ திட்டம். இதில் தற்போது 1.67 கோடி பேர் பயன் அடைந்து வருகின்றனர். தற்போது நான் ஆய்வு வகையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளில் மலை கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த வீடுகள் மோசமான நிலையில் உள்ளன. அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் மலை கிராம மக்கள் பயன்பெறும் வகையில் குடகரை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து சோதனை, மற்றும் கண் பரிசோதனை செய்யப்படும். முதலமைச்சர் கொண்டு வந்துள்ள காலை உணவு திட்டத்துக்கு பிறகு மலை கிராம மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்க வருகிறார்கள் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். மலை கிராமங்களில் இளம்பிள்ளைகள் திருமணத்தை தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவிலில் மர்ம நபர்கள் பணம், நகை திருடி சென்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    மத்தூர் அருகே கும்பாபிஷேகம் நடந்த சில நாட்களிலேயே திரவுபதி அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கவுண்டனூர் ஊராட்சி, கோடிப்பதி பகுதியில் பழமை வாய்ந்த திரவுபதியம்மன் கோவில் புணரமைக்கபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனையடுத்து மகா பாரத சொற்பொழிவு விழாவும் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று இரவு கோவிலை பூசாரி பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

    மார்கழி மாதம் என்பதால் இன்று அதிகாலையிலேயே கோவிலை திறக்க பூசாரி வந்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க தாலி, பீரோ உடைக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அக்கோவிலின் தர்மகர்த்தாவிடம் தெரிவித்தார்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து கோவில் தர்மகர்த்தா மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கோவிலில் கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கும்பாபிஷேகம் நடந்து சில நாட்களிலேயே கோவிலில் மர்ம நபர்கள் பணம், நகை திருடி சென்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    DPI0115122023: கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா தேசிய பூங்கா வனப்பகுதியில் இருந்து, தமிழக எல்லையான ஜவளகிரி வனப்பகுதிக்கு 100-க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்துள்ளன. இந்த யானைகள் பல பிரிவுகளாக பிரிந்து நொகனூர். தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்கம் வனப்பகுதி வழியாக ஓசூர்-சானமாவு

    தேன்கனிக்கோட்டை,டிச.15-

    கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா தேசிய பூங்கா வனப்பகுதியில் இருந்து, தமிழக எல்லையான ஜவளகிரி வனப்பகுதிக்கு 100-க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்துள்ளன.

    இந்த யானைகள் பல பிரிவுகளாக பிரிந்து நொகனூர். தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்கம் வனப்பகுதி வழியாக ஓசூர்-சானமாவு வன பகுதிக்கு சென்றுள்ளன. வழி நெடுகிலும் ராகி, தக்காளி, பீன்ஸ், கோஸ், தென்னை, மா, பலா உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்தவாறு செல்வதால், விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

    கர்நாடக மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்து வரும் யானைகள் கூட்டத்தை, கடந்த சில ஆண்டுகளாகவே வனத்துறையினர் மாநில எல்லையான தளி, ஜவளகிரி வனப்பகுதியிலே முகாமிட்டு விரட்டி வந்தனர். ஆனால், தற்போது மீண்டும் காட்டு யானைகள் கூட்டம் ஜவளகிரி, நொகனூர், தேன்கனிககோட்டை, ஊடேதுர்கம் வனப்பகுதி வழியாக, ஓசூர் சானமாவு வனப்பகுதி, போடூர் பள்ளம் வனப்ப குதி வரை சென்றுள்ளன. இதன்மூலம் அதிகளவில் பயிர்கள் சேதமடைந் துள்ளது.

    இதனால், ராகி மற்றும் காய்கறி பயிரிட்டுள்ள விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுக ளாக காட்டு யானைகள் கூட்டத்தை மாநில எல்லை பகுதியிலே தடுத்து நிறுத் திய நிலையில், தற்போது வனத்துறை அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், ஓசூர் வரை செல்லும் நிலை காணப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதுக்குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கூறியதாவது:-

    விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் இணக்கத்துடன் கருத்துக்களை கேட்டு, வனத்துறை அதிகாரிகள் பணியாற்றாமல் அலட்சியப் போக்குடன் இருப்பதே, யானைகள் அட்டகாசத்திற்கு காரணம். இரவு நேரங்களில் பயிர்களை காவல் காக்க செல்லும் விவசாயிகளுக்கு டார்ச் லைட், பட்டாசுகள் போன்றவற்றை வழங்குவதில்லை.

    கடந்த சில நாட்களுக்கு முன், மரக்கட்டா வனப்பகுதியில் வனத்துறையினரின் ஒருங்கிணைப்பு இல்லாததாலும், அலட்சியப் போக்கு காரணமாகவும். யானை தாக்கி ஒரு வாலிபர் உயிரிழந்தார் எனவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    மேலும், பயிர் சேதங்களை தடுக்கவும், யானைகள்-மனித மோதல்களை தவிர்க்கவும், பேவநத்தம் மற்றும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 60 க்கும் மேற்பட்ட யானைகளை, உடனடியாக கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டியடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    • யானைகள் புகுந்து அப்பகுதியில், 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதம்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் பதுங்கியிருந்த 60 காட்டுயானைகளை வனத்துறையினர் ஊடே துர்க்கம் வனப்பகுதிக்கு விரட்டியிருந்த நிலையில், அவை மீண்டும் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதிக்கு திரும்பின.

    இந்த நிலையில், சானமாவு காட்டில் 40 யானைகள் மற்றும் 20 யானைகள் என 2 குழுக்களாக 60 யானைகள் பிரிந்துள்ளன.

    மேலும் இவை தனித்தனியாக அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து நடமாடும் அபாயம் உள்ளது. எனவே, சானமாவு, போடூர், ஆழியாளம், ராமாபுரம், பீர்ஜேப்பள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்கு அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும், யானைகளை கோபப்படுத்தும் விதமாகவோ, பொதுமக்கள் செல்பி எடுக்க முயற்சிக்க கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் அந்த யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் ஆழியாளம் கிராமத்திற்குள் 40 யானைகள் புகுந்து அப்பகுதியில், 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    • சாலையில் 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது.
    • மின் கம்பம் மாற்ற ரூ1.30லட்சம் பணம் கட்டணமாக செலுத்தப்பட்டது.

    தேன்கனிக்கோட்டை, 

    தேன்கனிக்கோட்டை பேரூராட்சி, 12வது வார்டில் 50வருடங்களாக சாலையில் நடுவே போக்குவரத்திற்கு இடையூராக இருந்த மின் கம்பத்தை அகற்றியதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை பேரூராட்சி 12வது வார்டில் பாண்டு ரங்கன் கோவில் அருகே கடந்த 50ஆண்டுகளாக சாலையில் நடுவே உயர் அழுத்த மின்கம்பம் உள்ளது. அச்சாலையில் 4 சக்கர வாகனங்கள் செல்ல முடி யாத நிலை இருந்தது.

    மின்கம்பத்தை அகற்று மாறு தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன்யிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தி ருந்தனர்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 12வது வார்டில் சாலை பணிகளுக்கு பூமி பூஜை செய்ய வந்த கிருஷ்ண கிரி மேற்கு மாவட்ட செயலா ளரும் ஒசூர் சட்டமன்ற உறுப்பினருமான பிரகாஷ் கவனத்துக்கு பேரூராட்சி தலைவர் சீனிவாசன், வார்டு கவுன்சிலர் பிரேமாசேகர் ஆகியோர் தகவல் தெரிவித் தனர். பிரகாஷ் எம்.எல்.ஏ மின்வாரிய உயர் அதிகாரி களிடம் பேசி உயர் மின்அழுத்த கம்பத்தை மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.

    இதனையடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பாக மின் கம்பம் மாற்ற ரூ1.30லட்சம் பணம் மின்வாரியத்திற்கு கட்டண மாக செலுத்தப்பட்டது. அதன் பேரில் நேற்று மின்வாரிய அதிகாரிகள் பாண்டுரங்கள் கோவில் அருகே இருந்து உயர் மின்அழுத்த மின் கம்பத்தை மாற்றி மாற்று இடத்தில் மின் கம்பம் அமைத்தனர். பணி களை பேரூராட்சி தலைவர்.சீனிவாசன், பேரூராட்சி செயலாளர் மனோகரன், வார்டு கவுன்சி லர் பிரேமா சேகர், கௌரி சென்னீ ரா, மாவட்ட பிரதி நிதி சக்திவேல், பொருளாளர் வெங்கடேஷ், சந்தோஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பார்வை யிட்டனர்.

    ×