search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கே.பி.முனுசாமியின் தந்தை மறைவு: எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல்
    X

    கே.பி.முனுசாமியின் தந்தை மறைவு: எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல்

    • எடப்பாடி பழனிசாமி மறைந்த பூங்காவனத்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
    • முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமிக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.

    காவேரிப்பட்டிணம்:

    கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தந்தை மறைவையொட்டி எடப்பாடி பழனிசாமி காவேரிப்பட்டிணத்தில் உள்ள அவரது இல்லத்தில் கே.பி முனுசாமி சந்தித்து ஆறுதல் கூறினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. அவருடைய தந்தை பூங்காவனம் (வயது103) கடந்த 18-ந் தேதி வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார்.

    இதைத்தொடர்ந்து இன்று காவேரிப்பட்டிணத்திற்கு வருகை புரிந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, மறைந்த பூங்காவனத்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    இதில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன், பாலகிருஷ்ணரெட்டி, அ.தி.மு.க. கொறடா எஸ்.பி. வேலுமணி, உள்ளிட்டோரும் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமிக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஊத்தங்கரை எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்று உள்ளனர்.

    Next Story
    ×