search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu Global Investors Meet"

    • மாநாட்டில் 30 ஆயிரத்துக்கம் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.
    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் செம்கார்ப், டாடா பவர் நிறுவனம் முதலீடு செய்கிறது.

    சென்னை:

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை தொடங்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உலக முதலீட்டாளர் மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் என இரு தினங்கள் நடைபெற உள்ளது.

    மாநாட்டில் 30 ஆயிரத்துக்கம் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். வெளிநாட்டு பிரதிநிதிகள் 450-க்கும் மேற்பட்டோர் பங்கு பெறுகின்றனர்.

    மாநாடு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஓசூரில் 7000 கோடி ரூபாய் அளவுக்கு டாடா நிறுவனம் முதலீடு செய்கிறது. இதனால் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் செம்கார்ப், டாடா பவர் நிறுவனம் முதலீடு செய்கிறது. கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, பெரம்பலூர், மாவட்டங்களில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைய உள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாநாட்டில் கையெழுத்தாகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆலை விரிவாக்கத்தால் அடுத்த 6 ஆண்டுகளில் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • முதலீட்டுக்கான ஒப்பந்தம் சென்னையில் நாளை நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    ஓசூர்:

    ஐபோன் உதிரிப்பாகம் தயாரிப்பு தொழிற்சாலை விரிவாக்கம் செய்வதற்காக ஓசூரில் டாடா நிறுவனம் கூடுதலாக ரூ.7000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஓசூரில் உள்ள டாடா எலெக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆலை விரிவாக்கத்தால் அடுத்த 6 ஆண்டுகளில் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முதலீட்டுக்கான ஒப்பந்தம் சென்னையில் நாளை நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது.
    • வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வருகிற 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

    தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக நடத்தப்படும் இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழில் அதிபர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது.

    இதையொட்டி வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக இன்று ஆலோசனை நடத்தினார்.

    தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில்துறை செயலாளர் அருண்ராய் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.

    ×