என் மலர்
உள்ளூர் செய்திகள்

50 ஆண்டுகளாக நடு ரோட்டில் இடையூறாக இருந்த மின்கம்பம் அகற்றம்
- சாலையில் 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது.
- மின் கம்பம் மாற்ற ரூ1.30லட்சம் பணம் கட்டணமாக செலுத்தப்பட்டது.
தேன்கனிக்கோட்டை,
தேன்கனிக்கோட்டை பேரூராட்சி, 12வது வார்டில் 50வருடங்களாக சாலையில் நடுவே போக்குவரத்திற்கு இடையூராக இருந்த மின் கம்பத்தை அகற்றியதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை பேரூராட்சி 12வது வார்டில் பாண்டு ரங்கன் கோவில் அருகே கடந்த 50ஆண்டுகளாக சாலையில் நடுவே உயர் அழுத்த மின்கம்பம் உள்ளது. அச்சாலையில் 4 சக்கர வாகனங்கள் செல்ல முடி யாத நிலை இருந்தது.
மின்கம்பத்தை அகற்று மாறு தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன்யிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தி ருந்தனர்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 12வது வார்டில் சாலை பணிகளுக்கு பூமி பூஜை செய்ய வந்த கிருஷ்ண கிரி மேற்கு மாவட்ட செயலா ளரும் ஒசூர் சட்டமன்ற உறுப்பினருமான பிரகாஷ் கவனத்துக்கு பேரூராட்சி தலைவர் சீனிவாசன், வார்டு கவுன்சிலர் பிரேமாசேகர் ஆகியோர் தகவல் தெரிவித் தனர். பிரகாஷ் எம்.எல்.ஏ மின்வாரிய உயர் அதிகாரி களிடம் பேசி உயர் மின்அழுத்த கம்பத்தை மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.
இதனையடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பாக மின் கம்பம் மாற்ற ரூ1.30லட்சம் பணம் மின்வாரியத்திற்கு கட்டண மாக செலுத்தப்பட்டது. அதன் பேரில் நேற்று மின்வாரிய அதிகாரிகள் பாண்டுரங்கள் கோவில் அருகே இருந்து உயர் மின்அழுத்த மின் கம்பத்தை மாற்றி மாற்று இடத்தில் மின் கம்பம் அமைத்தனர். பணி களை பேரூராட்சி தலைவர்.சீனிவாசன், பேரூராட்சி செயலாளர் மனோகரன், வார்டு கவுன்சி லர் பிரேமா சேகர், கௌரி சென்னீ ரா, மாவட்ட பிரதி நிதி சக்திவேல், பொருளாளர் வெங்கடேஷ், சந்தோஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பார்வை யிட்டனர்.






