என் மலர்
கிருஷ்ணகிரி
- சூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு செல்லக்கூடிய விஜய் கரூருக்கு தாமதமாக வந்தார்.
- கரூர் விஷயத்தில் இருபக்கமும் தவறு உள்ளது.
கிருஷ்ணகிரி:
தே.மு.தி.க. சார்பில் 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற தலைப்பில் விஜயகாந்த் ரத யாத்திரை - பொதுக்கூட்டம் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று இரவு நடந்தது. இதில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-
கரூரில் நடந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கொடுக்க தவறியதால் 41 பேர் உயிர் இழந்துள்ளனர். மக்களை சந்திக்க தாமதமாக வந்ததே விஜய் செய்த பெரிய தவறு. நாம் சொன்ன நேரத்திற்கு இங்கு வந்தோம். முதலில் விஜய் தாமதமாக வந்தது தவறு. கடமை உணர்வை தவறினார் விஜய்.
சூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு செல்லக்கூடிய விஜய் கரூருக்கு தாமதமாக வந்தார். கரூரில் பிரசார கூட்டம் நடந்த இடத்தில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்பட்டது. அதனாலேயே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதே நேரத்தில் தொண்டர்களுக்கு தண்ணீர், உணவு கொடுக்க வேண்டாமா? வாகனத்தில் உள்ளேயே அமர்ந்து இருக்க கூடாது.
விஜய் நீங்கள் விஜயகாந்த்தை அண்ணன் என்று கூறுகிறீர்கள். அண்ணன் என்ன செய்தார்? என பார்த்து நீங்கள் செயல்படுங்கள். விமானத்தில் ஏறி வீட்டிற்குள் சென்றவர் இதுவரை வெளியே வரவில்லை. அறியாமல் விபத்து நடந்து விட்டதாக கூறுங்கள். ஏன் மகாமகத்தில் இறக்கவில்லையா? கள்ளச்சாராயம் குடித்து சாகவில்லையா? யாரை கைது செய்தார்கள். கள்ளக்குறிச்சிக்கு இந்த முதலமைச்சர் சென்றாரா? இன்று கரூருக்கு தனி விமானத்தில் இரவோடு இரவாக ஓடோடி செல்கிறார். எல்லாம் அரசியல்.
யாரோ ஒருவர் செய்த தவறுக்காக தே.மு.தி.க.வை வஞ்சிக்கிறார்கள். இதுவரை தமிழ்நாட்டிலேயே ஒரு மாநாடு நடத்தி கின்னஸ் சாதனை படைத்த கட்சி தே.மு.தி.க. தான். தொண்டர்களை உண்மையில் நேசித்தவர் விஜயகாந்த். விஜய் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும். நிதியுதவியை நேரில் கொடுக்க வேண்டும்.
கரூர் விஷயத்தில் இருபக்கமும் தவறு உள்ளது. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அரசும் தவறி விட்டது. தொண்டர்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டிய விஜய்யும் தவறு செய்து விட்டார். இதில் மாற்று கருத்து இல்லை. புஸ்சி ஆனந்த் தலைமறைவு என்கிறார்கள். எதற்காக தலைமறைவாக வேண்டும், தூக்கிலா போட போகிறார்கள். நேரில் வந்து சந்திக்க வேண்டும்.
கர்நாடக மாநில தொழிற்சாலை கழிவுநீர் இந்த மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் கலக்கப்படுகிறது. இந்த தண்ணீரை கால்நடைகள் கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இந்த பகுதி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க வேண்டும். அதுவே அரசின் கடமை.
இவ்வாறு அவர் பேசினார்.
- காதல் ஜோடிகள் அத்துமீறும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.
- தமிழக அரசின் முத்திரை, காவல்துறையின் முத்திரை, காவல் உதவி எண் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தது.
காதல்... இரு மனங்கள் ஒன்றிணைவது காதல்.
புனிதமாக பார்க்கப்பட்ட காதல் இக்காலக்கட்டத்தில் பொது இடங்களில் முகம் சுளிக்கும் வகையில் எல்லைமீறும் செயல்களில் களமிறங்குகிறார்கள், இன்றைய பல காதல் ஜோடிகள்.
இதற்காக கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் கண்காணிப்பு கேமரா போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டாலும் பலனில்லை.
அந்தவகையில் ஓசூரில் பூங்கா முன்பு விளம்பர பதாகை (பேனர்) ஒன்று வைக்கப்பட்டதில் பெரும் சர்ச்சையை கிளம்பியது. அதன் விவரம் வருமாறு:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் ராமநாயக்கன் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையில் மாநகராட்சி சார்பில் குழந்தைகள் பூங்கா அமைந்துள்ளது.
இந்த பூங்காவில் நடைப்பயிற்சி பாதை, உடற்பயிற்சி மேற்கொள்வதற்கான கருவிகள், தியான மண்டபம், மரப்பூங்கா, சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஏரிக்கரையையொட்டி உட்காருவதற்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஓசூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் வந்து, பூங்காவில் பொழுது போக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் பூங்காவில் பகல் நேரத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் வந்து செல்வதும் மற்றும் பிறந்தநாள் கொண்டாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இது ஒருபுறம் இருந்தாலும், இங்கு காதல் ஜோடிகள் அத்துமீறும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இந்த பூங்காவில் இரவு நேர காவலாளி இல்லாததால் சமூக விரோத செயல்களும் நடந்து வந்தன. இதனால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் காலை மற்றும் மாலையில் மட்டும் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். தொடர்ந்து பூங்காவை பகலில் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனிடையே பூங்காவின் நுழைவு வாயிலில் திருமணம் ஆகாதவர்களுக்கு பூங்காவிற்குள் அனுமதி இல்லை என நேற்று பேனர் வைக்கப்பட்டது. அதில் தமிழக அரசின் முத்திரை, காவல்துறையின் முத்திரை, காவல் உதவி எண் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக திருமணம் ஆகாத இளைஞர்களும், இளம்பெண்களும் பேனரை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களின் எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்தனர்.
இதனிடையே இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானதால் அந்த பேனர் அகற்றப்பட்டது. இந்த பேனரை காவல்துறை சார்பில் வைக்கவில்லை என போலீசார் தெரிவித்த நிலையில், பேனரை கட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது யார்? என விசாரணை நடந்து வருகிறது.
- விபத்தில் சிக்கிய அனைத்து வாகனங்களின் முன்பகுதி, பின்பகுதி கடுமையாக சேதமானது.
- வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்கு பலர் வேலைக்கு சென்று வருகின்றனர்.
தினமும் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் ஒன்று விபத்தில் சிக்கியது.

வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை படத்தில் காணலாம்.
அப்போது எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதியது. விபத்தில் சிக்கிய அனைத்து வாகனங்களின் முன்பகுதி, பின்பகுதி கடுமையாக சேதமானது. இந்த விபத்தில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினர். பின்னர் போக்குவரத்து நெரிசல் சீரானது. இந்த விபத்தால் சாலையில் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
- ரேபிஸ் நோய் தாக்குதலில் சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நந்தலால். இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு மூன்றரை வயது சிறுவன் சத்யா.
இவர்கள் மாசி நாயக்கன பள்ளி கிராமத்தில் ராம மூர்த்தி என்பவருக்கு சொந்தமான பசுமை குடிலில் அங்கேயே தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 31-ந்தேதி சிறுவன் விளையாடி கொண்டிருந்த பொழுது தெருநாய் முகம், கை ஆகிய பகுதிகளில் அவனை கடித்து குதறியதால் காயங்கள் ஏற்பட்டது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அவரை மீட்ட பெற்றோர், சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனை யில் சிறுவன் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை முடிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய நிலையில் நேற்று மாலை கழிவறைக்கு செல்லும் போது சிறுவன் மயங்கி விழுந்தார்.
அவரை மீட்டு மருத்து வமனைக்கு அழைத்து சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார். 21 நாட்களுக்கு பிறகு ரேபிஸ் நோய் தாக்குதலில் சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.
கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அணையின் பாதுகாப்பு கருதி வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டுள்ளது.
- கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் 49.75 கனஅடி நீர் இருப்பு உள்ளது.
அணைக்கு வினாடிக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 126 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டுள்ளது.
அணை பூங்காவுக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் சாத்தனூர் அணை வரை உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் மற்றும் தாழ்வானப்பகுத களில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் வெள்ள அபாய எச்சாரிக்கை விடப்படுகிறது. பெரியமுத்தூர், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டிணம், கால்வேஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சௌட்ட ஹள்ளி, தளி ஹள்ளி ஆகிய கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களுக்கு தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.
தென் பெண்ணை யாற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை கொண்டு செல்லவோ தடை விதிக்கப்படுகிறது என நீர்வளத்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- பன்றி வளர்ப்பில் ஈடுபட்ட ரவிசங்கரை மர்மநபர்கள் 2 பேர் வெட்டிக்கொன்று தப்பிச் சென்றனர்.
- தொழில் போட்டி காரணமாக ரவிசங்கர் கொல்லப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கிழக்கு ஒன்றிய பொருளாளர் ரவிசங்கர் (35) ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். பன்றி வளர்ப்பில் ஈடுபட்ட ரவிசங்கரை மர்மநபர்கள் 2 பேர் வெட்டிக்கொன்று தப்பிச் சென்றனர்.
தொழில் போட்டி காரணமாக ரவிசங்கர் கொல்லப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சூளகிரி காவல்துறையினர் விசாரணை நடத்தி, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- கடந்த மாதம் 27-ந்தேதி இரவு தோட்டத்தின் அருகில் இருந்த நாயை அடிக்க முற்பட்டார்.
- சம்பவம் குறித்து தளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த நாட்றம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முனி மல்லப்பா (வயது 50) கூலி தொழிலாளி. இவர் முன்ராஜ் என்பவரின் தோட்டத்தில் கடந்த 3 வருடங்களாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் 27-ந்தேதி இரவு தோட்டத்தின் அருகில் இருந்த நாயை அடிக்க முற்பட்டார். அப்போது அந்த நாய் முனி மல்லப்பாவை கடித்ததாக கூறப்படுகிறது.
பின்னர், முனி மல்லப்பாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டர். அங்கு முனி மல்லப்பாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் முனி மல்லப்பா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து தளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கையெழுத்தான முதலீடுகளில் பாதி அளவு கூட தமிழ்நாட்டிற்கு வரவில்லை.
- தெற்காசிய அளவில் தமிழ்நாட்டை நிச்சயம் முன்னணி மாநிலமாக மாற்றி காட்டுவேன்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டை விட்டு அண்டை மாநிலங்களுக்கு முதலீட்டாளர்கள் ஓடினர்.
* எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கையெழுத்தான முதலீடுகளில் பாதி அளவு கூட தமிழ்நாட்டிற்கு வரவில்லை.
* நமது அரசன் சாதனைகள் பற்றி வடமாநில Youtube சேனல்களில் பேசுகின்றனர்.
* தெற்காசிய அளவில் தமிழ்நாட்டை நிச்சயம் முன்னணி மாநிலமாக மாற்றி காட்டுவேன்.
* நீட் விலக்கு வாக்குறுதியை இப்போது நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் அதில் விலக்கு பெற முயற்சிக்காமல் இல்லை.
* நீட் தேர்வுக்கு தடை வாங்க முடியவில்லை என்பதை மறுக்கவில்லை. தமிழ்நாட்டுக்கான நீதி தரும் ஆட்சியில் மத்தியில் அமையும்
* மத்தியில் ஒருநாள் தமிழ்நாட்டுக்கான நீதியை தரும் ஆட்சி அமையத்தான் போகிறது.
* அடுத்து வருவதும் நமது திராவிட மாடல் ஆட்சிதான் என்றார்.
- 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியை விட நான்கரை ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் நெல்கொள்முதல் அதிகம்.
- ஓசூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் ரூ.2,885 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
* ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி வரும் வரை வழிநெடுக ஏராளமான மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
* மக்களின் அன்பால் நிகழ்ச்சிக்கு உரிய நேரத்தில் வர இயலாமல் போனது.
* தி.மு.க. ஆட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
* தி.மு.க. ஆட்சியில் தான் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
* மக்களை தேடி மருத்துவம் திட்டம் கிருஷ்ணகிரியில் தான் தொடங்கப்பட்டது.
* 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியை விட நான்கரை ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் நெல்கொள்முதல் அதிகம்.
* ஊரக பகுதிகள் போல் நகரப் பகுதிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது தி.மு.க. ஆட்சியில் தான்.
* ஓசூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும்.
* கெலமங்கலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.
* கெலமங்கலத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்படும்.
* ஓசூரில் எல்சி 104 ரெயில்வே கேட் பகுதியில் புதிய ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
* ஓரில் NH 44, 844 சாலைகளை இணைக்க புதிய சாலை அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.
* தி.மு.க. ஆட்சி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் பொய் பரப்புகின்றனர்.
* சொல்லாத வாக்குறுதிகள் பலவற்றை தி.மு.க. ஆட்சி நிறைவேற்றியுள்ளது.
* தி.மு.க. ஆட்சி மீது வயிற்றெரிச்சலில் எதிர்க்கட்சியினர் பொய்களை பரப்புகின்றனர்.
* மலிவான அரசியல் செய்யும் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றார்.
- கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள விழா மேடைக்கு முதலமைச்சர் வந்தார்.
- பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் 85 ஆயிரத்து 711 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
கிருஷ்ணகிரி:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆய்வு பயணத்தின் போது முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதுடன், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரோடு ஷோ நடத்தி மக்களை சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கிருஷ்ணகிரி வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலமாக காலை ஓசூர் தனேஜா விமான ஓடு தளத்தை வந்தடைந்து அங்கிருந்து கார் மூலமாக கிருஷ்ணகிரிக்கு வந்தார்.
அங்கு சுங்கச்சாவடி அருகில் தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராயக்கோட்டை மேம்பாலம் முதல் அண்ணா சிலை, பெங்களூரு சாலை, 5 ரோடு, சென்னை பை-பாஸ் சாலை வரையில் முதலமைச்சரின் ரோடு ஷோ நிகழ்ச்சி நடந்தது. அப்போது பொதுமக்களிடம் இருந்து மனுக்களை அவர் பெற்று கொண்டார்.
இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள விழா மேடைக்கு முதலமைச்சர் வந்தார். அங்கு காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து விழா மேடை அருகில் அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
அங்கு நடைபெற்ற அரசு விழாவில் கலெக்டர் தினேஷ்குமார் வரவேற்று பேசினார். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2,885 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் 85 ஆயிரத்து 711 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
விழாவில் மாவட்டத்தின் திட்டப்பணிகள் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பேசினார்.
- ஓசூர், வேப்பனஹள்ளி மற்றும் தளி ஆகிய மூன்று தொகுதிகளை சேர்த்து ஒரு புதிய மாவட்டமாக உருவாக்க வேண்டும்.
- தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிறைய தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். அதனை பா.ம.க. வரவேற்கிறது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று நடைபெற உள்ள மேற்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள கட்சியின் மாநில தலைவர் டாக்டர் ராமதாஸ் நேற்று ஓசூர் வந்தார். பின்னர், ஓசூர் மூக்கண்ட பள்ளி பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஓசூர், வேப்பனஹள்ளி மற்றும் தளி ஆகிய மூன்று தொகுதிகளை சேர்த்து ஒரு புதிய மாவட்டமாக உருவாக்க வேண்டும், ஓசூர் மாநகராட்சியாக உள்ளது.
ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பல்வேறு காலகட்டத்தில் பா.ம.க. சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.
ஓசூரில் ஒரு விமான நிலையம் அமைக்க வேண்டும். அதே போல், ஓசூர் நகரத்திற்கு மெட்ரோ ரெயில் கண்டிப்பாக தேவை. நாளுக்கு நாள் ஓசூர் நகரம் வளர்ந்து வருகிறது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிறைய தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். அதனை பா.ம.க. வரவேற்கிறது.
தந்தை, மகன் பிரச்சனை குறித்த கேள்விக்கு கடந்த 10, மற்றும் 11-ந் தேதியுடன் தீர்ந்து விட்டது. நல்லவை மேலே போகும். தீயவை கீழே போகும் என்ற அவர், அதனை தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் மொழி பெயர்த்து கூறுமாறு ஜி.கே.மணி மற்றும் முனிராஜிடம் கூறினார்.
தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி வளர்ந்து வருகிறது. எங்கள் கட்சி, யாருடன் கூட்டணி என்பது குறித்து நல்ல முடிவை விரைவில் அறிவிப்பேன். அதற்கான அதிகாரத்தை, கட்சியின் பொதுக்குழு எனக்கு அளித்துள்ளது.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
- கூட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
- ராமதாஸ் வருகையையொட்டி ஓசூர் நகரில் வழியெங்கும் கட்சி கொடிகள் கட்டப்பட்டுள்ளன.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் ஓசூரில் உள்ள சூடப்பா திருமண மண்டபத்தில் நடக்கிறது.
இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் மருத்துவர் ராமதாஸ் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.
இந்த கூட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
ராமதாஸ் வருகையையொட்டி ஓசூர் நகரில் வழியெங்கும் கட்சி கொடிகள் கட்டப்பட்டுள்ளன.






