என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஓசூரில் நாளை பா.ம.க பொதுக்குழு கூட்டம்: ராமதாஸ் பங்கேற்கிறார்
- கூட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
- ராமதாஸ் வருகையையொட்டி ஓசூர் நகரில் வழியெங்கும் கட்சி கொடிகள் கட்டப்பட்டுள்ளன.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் ஓசூரில் உள்ள சூடப்பா திருமண மண்டபத்தில் நடக்கிறது.
இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் மருத்துவர் ராமதாஸ் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.
இந்த கூட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
ராமதாஸ் வருகையையொட்டி ஓசூர் நகரில் வழியெங்கும் கட்சி கொடிகள் கட்டப்பட்டுள்ளன.
Next Story






