என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சட்டசபை தேர்தலில் பா.ம.க. யாருடன் கூட்டணி?- ராமதாஸ் பதில்
- ஓசூர், வேப்பனஹள்ளி மற்றும் தளி ஆகிய மூன்று தொகுதிகளை சேர்த்து ஒரு புதிய மாவட்டமாக உருவாக்க வேண்டும்.
- தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிறைய தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். அதனை பா.ம.க. வரவேற்கிறது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று நடைபெற உள்ள மேற்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள கட்சியின் மாநில தலைவர் டாக்டர் ராமதாஸ் நேற்று ஓசூர் வந்தார். பின்னர், ஓசூர் மூக்கண்ட பள்ளி பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஓசூர், வேப்பனஹள்ளி மற்றும் தளி ஆகிய மூன்று தொகுதிகளை சேர்த்து ஒரு புதிய மாவட்டமாக உருவாக்க வேண்டும், ஓசூர் மாநகராட்சியாக உள்ளது.
ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பல்வேறு காலகட்டத்தில் பா.ம.க. சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.
ஓசூரில் ஒரு விமான நிலையம் அமைக்க வேண்டும். அதே போல், ஓசூர் நகரத்திற்கு மெட்ரோ ரெயில் கண்டிப்பாக தேவை. நாளுக்கு நாள் ஓசூர் நகரம் வளர்ந்து வருகிறது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிறைய தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். அதனை பா.ம.க. வரவேற்கிறது.
தந்தை, மகன் பிரச்சனை குறித்த கேள்விக்கு கடந்த 10, மற்றும் 11-ந் தேதியுடன் தீர்ந்து விட்டது. நல்லவை மேலே போகும். தீயவை கீழே போகும் என்ற அவர், அதனை தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் மொழி பெயர்த்து கூறுமாறு ஜி.கே.மணி மற்றும் முனிராஜிடம் கூறினார்.
தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி வளர்ந்து வருகிறது. எங்கள் கட்சி, யாருடன் கூட்டணி என்பது குறித்து நல்ல முடிவை விரைவில் அறிவிப்பேன். அதற்கான அதிகாரத்தை, கட்சியின் பொதுக்குழு எனக்கு அளித்துள்ளது.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.






