என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க. ஆட்சி மீது வயிற்றெரிச்சலில் எதிர்க்கட்சியினர் பொய்களை பரப்புகின்றனர்- மு.க.ஸ்டாலின்
    X

    தி.மு.க. ஆட்சி மீது வயிற்றெரிச்சலில் எதிர்க்கட்சியினர் பொய்களை பரப்புகின்றனர்- மு.க.ஸ்டாலின்

    • 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியை விட நான்கரை ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் நெல்கொள்முதல் அதிகம்.
    • ஓசூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் ரூ.2,885 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    * ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி வரும் வரை வழிநெடுக ஏராளமான மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    * மக்களின் அன்பால் நிகழ்ச்சிக்கு உரிய நேரத்தில் வர இயலாமல் போனது.

    * தி.மு.க. ஆட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

    * தி.மு.க. ஆட்சியில் தான் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    * மக்களை தேடி மருத்துவம் திட்டம் கிருஷ்ணகிரியில் தான் தொடங்கப்பட்டது.

    * 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியை விட நான்கரை ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் நெல்கொள்முதல் அதிகம்.

    * ஊரக பகுதிகள் போல் நகரப் பகுதிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது தி.மு.க. ஆட்சியில் தான்.

    * ஓசூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    * கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும்.

    * கெலமங்கலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.

    * கெலமங்கலத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்படும்.

    * ஓசூரில் எல்சி 104 ரெயில்வே கேட் பகுதியில் புதிய ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.

    * ஓரில் NH 44, 844 சாலைகளை இணைக்க புதிய சாலை அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.

    * தி.மு.க. ஆட்சி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் பொய் பரப்புகின்றனர்.

    * சொல்லாத வாக்குறுதிகள் பலவற்றை தி.மு.க. ஆட்சி நிறைவேற்றியுள்ளது.

    * தி.மு.க. ஆட்சி மீது வயிற்றெரிச்சலில் எதிர்க்கட்சியினர் பொய்களை பரப்புகின்றனர்.

    * மலிவான அரசியல் செய்யும் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றார்.

    Next Story
    ×