என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெருநாய் கடி"

    • கடந்த மாதம் 27-ந்தேதி இரவு தோட்டத்தின் அருகில் இருந்த நாயை அடிக்க முற்பட்டார்.
    • சம்பவம் குறித்து தளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த நாட்றம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முனி மல்லப்பா (வயது 50) கூலி தொழிலாளி. இவர் முன்ராஜ் என்பவரின் தோட்டத்தில் கடந்த 3 வருடங்களாக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில், கடந்த மாதம் 27-ந்தேதி இரவு தோட்டத்தின் அருகில் இருந்த நாயை அடிக்க முற்பட்டார். அப்போது அந்த நாய் முனி மல்லப்பாவை கடித்ததாக கூறப்படுகிறது.

    பின்னர், முனி மல்லப்பாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டர். அங்கு முனி மல்லப்பாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் முனி மல்லப்பா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து தளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த 6 மாதங்களில் 1,67,437பேர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • திருவனந்தபுரத்தில் குழந்தைகளை கடித்த தெருநாய்க்கு ரேபிஸ் தொற்று இருப்பது இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகும் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. தினமும் ஏராளமானோர் தெருநாய்களின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

    மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் 25 ஆயிரம் பேர் வரை தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாகவும், கடந்த 6 மாதங்களில் 1,67,437பேர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் திருவனந்தபுரத்தில் குழந்தைகளை கடித்த தெருநாய்க்கு ரேபிஸ் தொற்று இருப்பது இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த நாயால் பாதிக்கப்பட்டவர்கள் ரேபிஸ் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    இதனால் நாய் கடியால் பாதிக்கப்பட்ட திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×