என் மலர்
நீங்கள் தேடியது "ரேபிஸ் தொற்று"
- கடந்த 6 மாதங்களில் 1,67,437பேர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- திருவனந்தபுரத்தில் குழந்தைகளை கடித்த தெருநாய்க்கு ரேபிஸ் தொற்று இருப்பது இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகும் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. தினமும் ஏராளமானோர் தெருநாய்களின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் 25 ஆயிரம் பேர் வரை தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாகவும், கடந்த 6 மாதங்களில் 1,67,437பேர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் குழந்தைகளை கடித்த தெருநாய்க்கு ரேபிஸ் தொற்று இருப்பது இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த நாயால் பாதிக்கப்பட்டவர்கள் ரேபிஸ் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இதனால் நாய் கடியால் பாதிக்கப்பட்ட திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.






