search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி பலியான விவசாயி குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதிஉதவி - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
    X

    விவசாயி குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் கீதாஜீவன் வழங்கிய காட்சி. அருகில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளனர்.

    விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி பலியான விவசாயி குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதிஉதவி - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

    • சோலை ராஜ் கடந்த 9-ந் தேதி காட்டு பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • இச்சம்பவம் அறிந்து அமைச்சர் கீதாஜீவன் முதல்-அமைச்சர் பேரிடர் நிவாரண நிதி ரூ. 4 லட்சத்திற்கான காசோலையை வழங்கி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் சோலை ராஜ். ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் கடந்த 9-ந் தேதி காட்டு பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இச்சம்பவம் அறிந்து அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உள்ளி ட்டோர் முதல்-அமைச்சர் பேரிடர் நிவாரண நிதி ரூ. 4 லட்சத்தி ற்கான காசோ லையை வழங்கி பாதிக்க ப்பட்ட குடும்பத்தி ற்கு ஆறுதல் தெரிவித்தனர்.விளாத்திகுளம் தாசில்தார் சசிகுமார், புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், புதூர் ஒன்றிய செய லாளர்கள் செல்வ ராஜ், ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×