என் மலர்
ஈரோடு
- ஈரோடு மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமை குறித்து புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வைக்கின்றனர்.
ஈரோடு:
கடலூரை சேர்ந்த ஆயுத ப்படை போலீசார் சமீபத்தில் கந்துவட்டி கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் கந்துவட்டி சம்பந்தமான புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதனை உடனே விசாரித்து முடித்து வைக்க வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி உத்தரவிட்டார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட போலீசார் கந்துவட்டி கொடுமை குறித்த விசாரணையை தீவிரப்படுத்தினர்.ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வைக்கின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கந்துவட்டி புகார் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கந்து வட்டி சம்பந்தமாக ஈரோடு நேரு வீதியை சேர்ந்த கறி கடை நடத்தி வரும் மோகமத் ஷெரிப் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.
எனவே கந்து வட்டி சம்பந்தமாக யாராவது புகார் அளிக்க விருப்பமிருந்தால் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரடியாகவே, அல்லது போலீஸ் சூப்பிரண்டு வாட்ஸ்-அப் எண் 9655220100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
மேலும் போலீஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி ஆப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். இது குறித்து விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுப்பதுடன் தகவல் தருபவர்களின் பெயர், முகவரி ரகசியமாக வைக்கப்படும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- சென்னிமலை முருகன் கோவிலில் இன்று மாலை வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. இதையொட்டி அதிகாலை முதலே பக்தர்கர் மலை மீது குவிந்தனர்.
- அதிகாலை காங்கேயம் அருகே உள்ள வரதப்பம்பாளையம் கிராம மக்கள் காவடி தீர்த்த குடங்களுடன் வருகை தந்து முருகப்பெருமான வழிபட்டு சென்றனர்.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலில் இன்று மாலை வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. இதையொட்டி அதிகாலை முதலே பக்தர்கர் மலை மீது குவிந்தனர். 'கந்த சஷ்டி கவச' அரங்கேற்ற தலமாகவும், ஆதி பழனி என போற்றப்படும் சென்னிமலை முருகன் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை விசாக திருவிழா நடக்கிறது.
முருக பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத்தன்று முகப்பெருமானை வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். 66-வது வருட வைகாசி விசாக பெரு விழாவினை முன்னிட்டு ஊஞ்சலூர் அருகே காவிரியில் தீர்த்தம் எடுத்து சென்னிமலை வந்தடைந்தது இன்று காலை 11 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க காவிரி திருமஞ்சன தீர்த்தம் ஊர்வலமாக புறப்பட்டு மலை கோவிலை சென்று அடைந்தது.
மலை மீது முருகன் கோவிலில் மதியம் 3 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் தொடங்கி கலசஸ்தாபனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடக்கிறது தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு முருகப்பெருமானுக்கு பஞ்சாமிருதம், தேன், பழங்கள், பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் செய்து மாலை 6.30 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடக்கிறது.
அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடக்கிறது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மலை அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதர் மடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழு அன்பர்கள் செய்து வருகின்றனர்.
வைகாசி விசாகத்தினை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் மலை கோவிலில் குவிய தொடங்கினர். அதிகாலை காங்கேயம் அருகே உள்ள வரதப்பம்பாளையம் கிராம மக்கள் காவடி தீர்த்த குடங்களுடன் வருகை தந்து முருகப்பெருமான வழிபட்டு சென்றனர்.
- பவானி வட்டாரம், மயிலம்பாடி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப, மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.
- இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை பவானி உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் நந்தினி, செல்வி, லட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
பவானி:
பவானி வட்டாரம், மயிலம்பாடி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப, மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சி பவானி வேளாண்மை உதவி இயக்குனர் வனிதா தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் அருண்குமார் மண்புழு படுக்கை அமைத்தல், மண்புழு உரம் தயாரித்தல் குறித்து மிக தெளிவாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
ஜே.கே.கே.எம். கோபி வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் ஹாதில்மோன் மண்புழு உரத்தின் நன்மைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து தெரிவித்தார்.
பவானி உதவி வேளாண்மை அலுவலர் சித்தையன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மானிய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தார்.
மேலும் இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை பவானி உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் நந்தினி, செல்வி, லட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
- கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை.
- சட்டவிரோத கருமுட்டை விற்பனை குறித்து தெரிய வந்தால் பொதுமக்கள் போலீசாரிடம் நேரடியாக புகார் அளிக்கலாம்.
ஈரோடு:
ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை போலி ஆதார் கார்டு மூலம் பெற்றோரே, பெண் புரோக்கர் மூலம் தனியார் ஆஸ்பத்திரிகளில் விற்பனை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் சிறுமியை வளர்ப்பு தந்தையே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும் இதற்கு உடந்தையாக அவரது தாய் இருந்ததும் தெரியவந்தது.
மேலும், சிறுமியின் கருமுட்டையை ஈரோடு, பெருந்துறை மட்டும் அல்லாது சேலம், ஓசூர், ஆந்திரா மாநிலம் திருப்பதி, கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் இயங்கும் தனியார் ஆஸ்பத்திரிகளில் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் சிறுமியின் தாய், வளா்ப்பு தந்தை, புரோக்கராக செயல்பட்ட மாலதி, போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்த டிரைவர் ஜான் உட்பட 4 பேர் மீது போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக தமிழக மருத்துவ பணிகள் இயக்குனரகத்தை சேர்ந்த உயர்மட்ட மருத்துவ குழுவினர் ஈரோடு வந்து, பாதிக்கப்பட்ட சிறுமியிடமும், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளிடமும் நேரடி விசாரணையாக நடத்தினர்.
இதற்கிடையில் மாவட்ட காவல் துறை சார்பில், ஈரோடு ஏ.டி.எஸ்பி. கனகேஸ்வரி தலைமையில் தனி விசாரணை நடந்து வருகிறது. ஈரோடு, பெருந்துறை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள், ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
இதில் பாதிக்கப்பட்ட சிறுமியை தவிர, போலி ஆதார் மூலம் வேறு ஏதேனும் சிறுமிகளிடம் சட்ட விரோதமாக கருமுட்டை பெறப்பட்டதா? என தனியார் மருத்துவமனைகளில் கருமுட்டை பெற்றவர்கள் பட்டியல், அவர்களது ஆதார் எண், முகவரி, அம்முட்டையால் கருவுற்றோர் விபரம், அவர்களது முகவரி போன்றவற்றை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, சிறுமியிடம் கருமுட்டை எடுத்தது தொடர்பாக சேலம், ஓசூர், கேரளா மாநிலம் திருவனந்தபுரம், ஆந்திரா மாநிலம் திருப்பதி ஆகிய இடங்களில் இயங்கும் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகிகள், மருத்துவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பினர்.
இந்நிலையில், ஓசூர், திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள், ஊழியர்கள் என 6 பேர் நேற்று சூரம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களை, ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினார்.
சிறுமியிடம் கருமுட்டை எடுத்தபோது, சிறுமி தரப்பில் கொடுத்த போலி ஆதார் அட்டை நகலினை ஆய்வு செய்தனர். தனியார் ஆஸ்பத்திரிகளில் இதுவரை எத்தனை முறை கருமுட்டை தானம் செய்யப்பட்டது.
எந்தெந்த நாட்களில் செய்யப்பட்டது என போலீசார் விசாரணை நடத்தினர். கருமுட்டை தானம் செய்யப்பட்டபோது அரசு அறிவித்துள்ள நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா?. என்பது குறித்து டாக்டர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
எந்த ஆவணங்கள் அடிப்படையில் சிறுமிக்கு கருமுட்டை எடுக்கப்பட்டது என்றும் டாக்டர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில் பல்வேறு தகவல் கிடைத்துள்ளன. பின்னர் விசாரணையை முடித்துக்கொண்டு மாலை மருத்துவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
இதுகுறித்து ஈரோட்டில் டி.ஐ.ஜி. முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை. பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. இதையடுத்து ஈரோடு போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து தாய், வளர்ப்பு தந்தை, பெண் புராக்கர் உட்பட 4 பேரை கைது செய்தனர்.
ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர், திருச்சியில் உள்ள 5 தனியார் மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பி உள்ளோம். ஈரோடு, பெருந்துறை தனியார் மருத்துவமனைகளில் விசாரணை நிறைவடைந்துள்ளது. மருத்துவ பணிகள் இயக்குனரக டாக்டர் வல்லுனர் குழுவினர் இவ்விவகாரம் தொடர்பாக மருத்துவ ரீதியாக விசாரிக்கின்றனர்.
தமிழக அரசு ஒரு மருத்துவ குழுவை அமைத்துள்ளது. முறைகேடு நடந்ததாக மருத்துவ குழுக்கள் அறிக்கை சமர்பிக்கும் பட்சத்தில் அதனடிப்படையில் போலீசார் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய முடியும். தவறு நடந்திருந்தால் அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். கருமுட்டை விவகாரத்தில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடக்கிறது. சட்டவிரோத கருமுட்டை விற்பனை குறித்து தெரிய வந்தால் பொதுமக்கள் போலீசாரிடம் நேரடியாக புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வழக்கில் போலீஸ் விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று மாலை அல்லது நாளை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி மருத்துவர்கள், நிர்வாக இயக்குனர்கள் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து சிறுமிக்கு கருமுட்டை எடுத்தது தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்க உள்ளனர்.
இதனால் இந்த வழக்கு விசாரணை மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
- கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், டாக்டர்கள், ஊழியர்களிடம் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
- தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், டாக்டர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரத்தில் ஏற்கனவே ஈரோட்டை சேர்ந்த 2 தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், டாக்டர்கள், ஊழியர்களிடம் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் சேலம், ஓசூர், ஆந்திர மாநிலம் திருப்பதி, கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஆகிய தனியார் ஆஸ்பத்திரிக்கும் விசாரணைக்கு நேரில் வந்து ஆஜராகுமாறு ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஓசூர் தனியார் ஆஸ்பத்திரியைச் சேர்ந்த நிர்வாக இயக்குனர்கள், டாக்டர்கள் ஒரு காரிலும், ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த தனியார் மருத்துவமனையை சேர்ந்த நிர்வாகிகள், டாக்டர்கள் ஒரு காரிலும் வந்தனர்.
பின்னர் அவர்கள் நேராக போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்திற்கு உள்ளே சென்றனர். அவர்கள் தங்களுடன் முக்கிய ஆவணங்களையும் எடுத்து சென்றனர். அவர்கள் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி முன்னிலையில் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
- ரூ.58 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சென்னிமலை முருகன் கோவில் புதிய அன்னதான கூடம் திறக்கப்பட்டது.
- அன்னதான கூடத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சென்னிமலை:
சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவிலில் புதிதாக ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதான கூடத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து சென்னிமலை முருகன் கோவில் புதிய அன்னதான கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு பூஜைகளை தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவாச்சாரியார் தலைமையில் அர்ச்சகர்கள் செய்தனர்.
இதில் இந்து அறநிலையத்துறை ஈரோடு மாவட்ட ஆணையர் பரஞ்ஜோதி, செயல் அலுவலர் அருள்குமார், மாவட்ட கவுன்சிலர் தமிழ்செல்வம், சென்னிமலை யூனியன் சேர்மேன் காயத்திரி இளங்கோ, சென்னிமலை வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் செங்கோட்டையன், சென்னிமலை பேரூர் செயலாளர் ராமசாமி, சென்னிமலை டவுன் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீதேவி அசோக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நேற்று மதியம் முதல் புதிய அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை கொள்முதல் அடுத்த மாதம் 31-ந் தேதி வரை செய்யப்படுகிறது
- இக்கொள் முதல் மக்கள் பங்கு பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈரோடு:
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் விவசாயிகள் விளைவித்த விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக விளை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
தற்போது ஈரோடு மாவட்டத்தில் 2022-ம் மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின் கீழ் ஈரோடு விற்பனைக்குழுவில் செயல்படும் சத்தியமங்கலம், அவல்பூந்துறை, எழுமாத்தூர் மற்றும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை கொள்முதல் அடுத்த மாதம் 31-ந் தேதி வரை செய்யப்படவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட வுள்ள கொப்பரையானது அரசு நிர்ணயிக்கப்பட்டுள்ள தரத்தில் இருக்க வேண்டும். மேலும் ஒரு கிலோ பந்து கொப்பரை ரூ.110 மற்றும் அரவை கொப்பரை ரூ.105.90 வீதம் கொள்முதல் செய்யப்படவுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரைக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த ப்படும்.
எனவே இத்திட்டத்தில் பங்கு பெற விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதார்அ ட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முகப்பு, சிட்டா, அடங்கல் ஆகியவற்றின் நகல்களுடன் சத்திய மங்க லம், அவல்பூ ந்துறை, எழுமாத்தூர் மற்றும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்க ப்படுகிறது.
இக்கொள் முதல் திட்டத்தில் ஈரோடு மாவட்ட த்தை சேர்ந்த தென்னை சாகுபடி செய்துள்ள வேளாண் பெருங்குடி மக்கள் பங்கு பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.
- கொடுமுடி அருகே இடிக்கப்பட்ட பாலம் மீண்டும் கட்டி தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மேலும் பாலம் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என இப்பகுதி கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே சுள்ளிமடை பகுதியில் இருந்து குதிரைக்கல் மேடு பகுதி வரை கீழ்பவானி வாய்க்கால் செல்கின்றது. இந்த வாய்க்காலில் சுமார் 12 அடியில் ஒரு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை கடந்து தான் விவசாய நிலங்களுக்கு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சென்று பாசனம் செய்து வந்தார்கள்.
மேலும் பள்ளக்காட்டூர், வெட்டுக்காட்டூர், ராசா ம்பாளையம், பழனியாண்ட வர் கோவில் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாய நிலத்துக்கு செல்பவர்கள் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொது மக்கள் பயன்படுத்தி வந்த பாலத்தின் அடியில் தண்ணீர் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டது. இதனை தெடர்ந்து பொதுப்பணித் துறை ஊழியர்கள் பாலத்தை ஜே.சி.பி. எந்திரம் கொண்டு இடித்து அடைப்பை எடுத்து சரி செய்து விவசாயத்திற்கு தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்தனர்.
இடிக்கப்பட்ட பாலத்தை மீண்டும் கட்டித் தர இப்பகுதி மக்களும், விவசாயிகளும் பல முறை தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் இதுவரை இந்த பாலம் கட்ட எவ்வித முயற்சியும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.
இதனால் பொது மக்களும், விவசாயிகளும் நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது.
இதனால் பொதுமக்கள் தொடர்ந்து அவதி அடைந்து வருகிறார்கள். எனவே உடனடியாக இடிக்கப்பட்ட பாலத்தை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வைத்து உள்ளனர்.
மேலும் பாலம் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என இப்பகுதி கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
- மொடக்குறிச்சி அருகே வீட்டில் இருந்த பிளஸ்-1 மாணவி மாயமானார்.
- இதையடுத்து காணாமல் போன மகளை கண்டு பிடித்து தருமாறு தந்தை மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி கஸ்தூரிபாய் காலனியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (49). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு கவுசிகா (16), ஹர்சிதா என்ற 2 மகள்கள் உள்ளனர்.
இவரது மகள் கவுசிகா மொடக்குறிச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் தனது 2 மகள்களையும் வீட்டில் விட்டுவிட்டு உறவினர்கள் திருமணத்துக்காக நாமக்கல் சென்று விட்டார்.
இந்நிலையில் ஹர்சிதா தனது அக்காள் கவுசிகா வீட்டில் இல்லாததால் தேடி பார்த்து உள்ளார். இதையடுத்து இரவு 7 மணிக்கு ஹர்சிதா தனது பெற்றோருக்கு போன் செய்து கவுசிகாவை காணவில்லை என்று கூறி உள்ளார்.
இதையடுத்து பாலகிருஷ்ணன் அக்கம்பக்கம் கவுசிகாவை தேடி பார்த்தும் விசாரித்தும் கிடைக்காததால் தனது மகளை கண்டு பிடித்து தருமாறு மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவி கவுசிகாவை தேடி வருகின்றனர்.
- கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மனைவி பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்திற்கு கணவன் உடலை ஆம்புலன்சில் கொண்டு சென்று புகார் அளித்தார்.
- மேலும் இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது. அதன் பின்னரே இறப்பு குறித்த சந்தேகம் விலகும் என்று போலீசார் தெரிவித்தனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அரச மரம் பஸ் நிறுத்தம் சென்னியப்பன் சந்து பகுதியை சேர்ந்தவர் சூரியகுமார் (50). லாரி டிரைவர். இவருக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி மனைவி ராஜேஸ்வரி (45), ஒரு மகள் உள்ளார்.
சூரியகுமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படும் நிலையில் கடந்த 7 வருடங்களாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சரிவர உணவு ஏதும் சாப்பிடாமல் அடிக்கடி மது அருந்தி வந்த சூரியகுமார் சம்பவத்தன்று வீட்டில் இறந்து கிடந்தார். உடனே இறந்து கிடந்த சூரியகுமாரை அவரது உறவினர்கள் அடக்கம் செய்வதற்காக கோபி மின் மயானத்திற்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் உறவினர்களுடன் வந்த ராஜேஸ்வரி தனது கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்திற்கு சூரியகுமார் உடலை ஆம்புலன்சில் கொண்டு சென்று புகார் அளித்தார்.
இதனையடுத்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி சூரியகுமார் உடலை பிரேதபரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ேமலும் இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது. அதன் பின்னரே இறப்பு குறித்த சந்தேகம் விலகும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- திருமணமான 4-வது நாளில் மனைவி பிரிந்து சென்றதால் ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள குட்டிமணியகாரனூரை சேர்ந்தவர் செல்வராஜ். ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மகன் சங்கர் (32). இவர் சென்னை ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு கடந்த 13.3.22 அன்று திருச்சியை சேர்ந்த பிரியதர்ஷினி (27) என்பருடன் திருமணம் நடந்தது. கணவன்- மனைவி திருமணம் முடிந்து பிரியதர்ஷினியின் வீட்டுக்கு திருச்சி சென்றனர். இதையடுத்து பிரிய தர்ஷினி மீண்டும் கணவ னுடன் கொடுமுடி வர மறுத்து விட்டார். திருமணமாகி 4 நாளில் மனைவி பிரிந்து சென்றதால் சங்கர் மன வேதனையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று உறவினர் வீட்டு விசேஷத்திற்காக சங்கரின் தந்தை செல்வராஜ் குடும்ப த்துடன் சென்று விட்டார். வீட்டில் சங்கர் தனியாக இருந்தார்.
வெளியே சென்று இருந்த அவரது பெற்றோர் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது சங்கர் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சங்கரை வீடு முழுவதும் தேடி பார்த்தனர்.
தொடர்ந்து வீட்டின் மொட்டை மாடியில் உள்ள அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு சங்கர் பேனில் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மனைவி பிரிந்து சென்றதால் மனவேதனையில் சங்கர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சத்தியமங்கலம் காம தேனு கலை அறிவியல் கல்லூரியில் பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது.
- கல்லூரி நிறுவனத்தலைவர் பெருமாள்சாமி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் காம தேனு கலை அறிவியல் கல்லூரியில் புதிய கைப்பந்து ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நடை பெற்றது.
பாரதியார் பல்கலைக்கழக ஆட்சி குழு உறுப்பினரும் கல்லூரியின் செயலருமான அருந்ததி தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக காமதேனு கல்வி குழுமத்தின் நிறுவனர் பெருமாள்சாமி கலந்து கொண்டு புதிய ஆடுகளத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து "காமதேனு டிராபி 2022" என்ற பெயரில் பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி கள் நடைபெற்றது.
இதில் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு கல்லூரிகளின் கைப்பந்து அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
இறுதிப்போட்டிக்கு 4 அணிகள் தேர்வு பெற்றன. இதில் ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி முதல் இடத்தையும், கோவை ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அணி 2-ம் இடத்தையும், கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரி அணி 3-ம் இடத்தையும், கோவை குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 4-ம் இடத்தையும் பெற்றது.
வெற்றி பெற்ற அணி களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பை, 2-ம், 3-ம் மற்றும் 4-ம் பரிசுகள் முறையே ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
கல்லூரி நிறு வனத்தலைவர் பெருமாள்சாமி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு கல்லூரி செயலர் அருந்ததி, இணைச் செயலர் மலர்செல்வி, கல்லூரி முதல்வர் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் வாழ்த்தி பேசினர்.






