search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Orderly"

    • ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை கொள்முதல் அடுத்த மாதம் 31-ந் தேதி வரை செய்யப்படுகிறது
    • இக்கொள் முதல் மக்கள் பங்கு பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஈரோடு:

    தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் விவசாயிகள் விளைவித்த விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக விளை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    தற்போது ஈரோடு மாவட்டத்தில் 2022-ம் மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின் கீழ் ஈரோடு விற்பனைக்குழுவில் செயல்படும் சத்தியமங்கலம், அவல்பூந்துறை, எழுமாத்தூர் மற்றும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை கொள்முதல் அடுத்த மாதம் 31-ந் தேதி வரை செய்யப்படவுள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட வுள்ள கொப்பரையானது அரசு நிர்ணயிக்கப்பட்டுள்ள தரத்தில் இருக்க வேண்டும். மேலும் ஒரு கிலோ பந்து கொப்பரை ரூ.110 மற்றும் அரவை கொப்பரை ரூ.105.90 வீதம் கொள்முதல் செய்யப்படவுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரைக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த ப்படும்.

    எனவே இத்திட்டத்தில் பங்கு பெற விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதார்அ ட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முகப்பு, சிட்டா, அடங்கல் ஆகியவற்றின் நகல்களுடன் சத்திய மங்க லம், அவல்பூ ந்துறை, எழுமாத்தூர் மற்றும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்க ப்படுகிறது.

    இக்கொள் முதல் திட்டத்தில் ஈரோடு மாவட்ட த்தை சேர்ந்த தென்னை சாகுபடி செய்துள்ள வேளாண் பெருங்குடி மக்கள் பங்கு பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஆர்டர்லி முறை தமிழகத்தில் ஒழிக்கப்பட்டு விட்டதாக டி.ஜி.பி. பொய் சொல்வதாகவும், ஓய்வுபெற்ற போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வீட்டில் இப்போதும் ஆர்டர்லிகளாக 4 போலீஸ்காரர்கள் பணி செய்கின்றனர் என்றும் ஐகோர்ட்டில் வக்கீல் வாதிட்டார்.
    சென்னை:

    போலீசாரின் பணி நேரத்தை வரையறை செய்வது தொடர்பான வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது வக்கீல் யானை ராஜேந்திரன் ஆஜராகி, தமிழகத்தில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டு விட்டதாக தமிழக டி.ஜி.பி. பதில் மனுவை இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். ஆனால், சென்னை போலீஸ் கமிஷனராக பணியாற்றி ஓய்வுபெற்ற கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் வீட்டில் இப்போதும் 4 போலீஸ்காரர்கள் ‘ஆர்டர்லி’ வேலை செய்கின்றனர் என்று கூறி பெயர், புகைப்பட ஆதாரத்துடன் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

    இதையடுத்து அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், போலீஸ்காரர்களுக்கு வார விடுமுறை வழங்குவது குறித்து தமிழக அரசு முடிவுக்கு கால அவகாசம் வேண்டும் என்றார்.

    இதையடுத்து நீதிபதி, தமிழக அரசு ஊழியர்களுக்கு இணையாக போலீசாருக்கு ஊதியம் வழங்கப்படுகிறதா? இதில் வித்தியாசம் உள்ளதா? அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாட்கள் விடுமுறை வழங்குவது போல, போலீசாருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறையும், மற்றொரு நாள் பணியாற்றுவதற்கு கூடுதல் ஊதியமும் வழங்கினால் என்ன? இதுகுறித்து தமிழக அரசு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

    மேலும் வழக்கு விசாரணையின்போது, அண்மையில் போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடலுக்கு எம்.எல்.ஏ. ஒருவர் அஞ்சலி செலுத்தியுள்ளார். இதற்கு முந்தைய ஆட்சியில், குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்த கைதியை அமைச்சர் நேரில் சென்று பார்த்த சம்பவம் நடந்தது. அரசியல்வாதிகள், இதுபோன்று ரவுடிகளை ஊக்குவிப்பதால் தான் சமுதாயத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார். 
    ×