search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியங்குடியில் சைக்கிள் மீது ஆட்டோ மோதல்-தொழிலாளி சாவு
    X

    புளியங்குடியில் சைக்கிள் மீது ஆட்டோ மோதல்-தொழிலாளி சாவு

    • சாலையை கடக்க முயன்றபோது பின்னால் வந்த லோடு ஆட்டோ கணேசன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
    • புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியங்குடி:

    புளியங்குடியை அடுத்த டி.என்.புதுக்குடி வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன்(வயது 67). கூலி தொழிலாளி. இவர் நேற்று புளியங்குடி பள்ளிவாசல் பஸ் நிறுத்தம் அருகே சைக்கிளில் சென்றார். அங்கு சாலையை கடக்க முயன்றபோது பின்னால் வந்த லோடு ஆட்டோ அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் இறந்தார். இதுதொடர்பாக புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×