search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் அமலாக்கத்துறையை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
    X

    தூத்துக்குடியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.


    தூத்துக்குடியில் அமலாக்கத்துறையை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

    • தூத்துக்குடியில் அமலாக்கத்துறையை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

    தூத்துக்குடி:

    ராகுல்காந்தியை விசாரணைக்கு அழைத்த அமலாக்கதுறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் தலைமையில் வருமானவரி அலுவலகம் முன்பு 150-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கையில் மூவர்ண கொடியேந்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி, கவுன்சிலர்கள் சந்திரபோஸ்,எடிண்டா, கற்பககனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஐ.என்.டி.யூ.சி. மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ், மாநில செயலாளர் சுடலை, மண்டல தலைவர்கள் ஜசன்சில்வா, சேகர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சகாயராஜ்,

    வடக்கு மாவட்ட தலைவர் ராகுல், மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் நடேஷ்குமார், மாநகர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் பிரவீன்துரை,ஊடக பிரிவு மாவட்ட தலைவர் முத்துமணி, அமைப்பு சாரா தொழிற்சங்க மாவட்ட தலைவர் ராஜன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி தனலெட்சுமி,

    மாவட்ட சேவாதளம் பிரிவு தலைவர் ராஜா, மாவட்ட நிர்வாகிகள் கோபால், சேவியர் மிஷியர், குமாரமுருகேசன், அபுதாங்கீர், மைக்கேல், சின்னகாளை, மைக்கேல், நிர்மல் கிறிஸ்டோபர், பிரபாகர், கனியம்மாள், பெட்டின்,அந்தோணிசாமி, ஜான்சன், சசிபர்னாந்து, நீயூமன், கிருஷ்ணன், சுந்தர்ராஜன்,

    ஜெயகிங்ஸ்டன், மகாலிங்கம், ராஜரத்தினம், சேகர், சீனியப்பன், மகேந்திரன், மெர்லின், பாக்கியராஜ், ஐ.என்.டி.யூ.சி. ராஜா, சாந்தி, வால்டர், யூஜின், பெருமாள்,கனகராஜ்,கமலேசன், சுப்பையா, பட்டு, நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர் .

    Next Story
    ×