என் மலர்
கோயம்புத்தூர்
- தமிழ்நாட்டின் திறமைகளை திமுக அரசு புறக்கணித்து வருகிறது.
- திமுக எப்போதும் பிரித்தாளும் கொள்கையை பின்பற்றுகிறது.
பிரதமர் மோடி இன்று மதியம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
* திமுக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியன் மூலம் நெசவாளர்களின் துன்பம் அதிகரித்தது.
* தமிழ்நாட்டின் திறமைகளை திமுக அரசு புறக்கணித்து வருகிறது.
* திமுக சுய லாபத்திற்காக தமிழ்நாட்டிற்கு அதிக தீமைகளை செய்தார்கள்.
* காங்கிரஸ் அரசு மாநில அரசுகளை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்த்தது.
* பிரித்தாளும் சூழ்ச்சியை காங்கிரஸ் பின்பற்றுகிறது. அதையே திமுக தமிழகத்தில் பின்பற்றுகிறது. திமுக எப்போதும் பிரித்தாளும் கொள்கையை பின்பற்றுகிறது.
* திமுக அரசு நமது குழாய் மூலம் குடிநீர் திட்டத்தை திமுக-வினருக்கு மட்டும் வழங்குகிறார்கள்.
* தமிழகத்தின் வளர்ச்சியை திமுக பார்ப்பதில்லை.
* திமுக, இந்தியா கூட்டணியின் கொள்கை சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவது மட்டுமே.
* அயோத்தி ராமர் கோவிலை திமுக எதிர்க்கிறது.
* சனாதன தர்மத்தை அழிப்போம் என்று மிரட்டுகிறார்கள்.
* நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டபோது திமுக அதை எதிர்த்தது.
* இன்று நாடு 5ஜி-யில் சாதனை படைக்கிறது. ஆனால் திமுக 2ஜி-யில் ஊழல் செய்தது.
* நான் ஊழலை ஒழியுங்கள் என்று சொல்கிறேன். அவர்கள் ஊழல்வாதிகளை காப்பாற்றுங்கள் என்கிறார்கள்.
* திமுக அதிகார மமதையில் மூழ்கிக் கிடக்கும் கட்சி.
* திமுக-வின் ஆணவம் தமிழக கலாச்சாரத்திற்கு எதிரானது.
* திமுக தலைவர் ஒருவர் மோடி தேர்தலுக்கு பின் இந்தியாவை விட்டு ஓடிவிடுவார் எனச் சொன்னார். ஆனால் இந்த தேர்தல் இந்தியாவை எதிர்ப்பவர்களை நாட்டை விட்டு விரட்டுவதற்கான தேர்தல். குடும்ப ஆட்சி, ஊழல், போதைப்பொருட்களை நாட்டை விட்டு விரட்டுவதற்கான தேர்தல்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
- மோடியின் வெற்றிக்காக வீடு வீடாக செல்லுங்கள்.
- தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும்.
மேட்டுப்பாளையம்:
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று மாலை சென்னை வந்தார்.
சென்னை பாண்டி பஜாரில் நடந்த பிரமாண்ட ரோடு- ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
இதனை தொடர்ந்து இன்று காலை பிரதமர் மோடி சென்னையில் இருந்து விமானம் மூலமாக வேலூர் சென்றார். வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவு திரட்டி பேசினார்.
வேலூர் கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி கோவை மேட்டுப்பாளையத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அரக்கோணத்தில் இருந்து விமானம் மூலமாக பிற்பகல் கோவை விமான நிலையம் வந்தார். கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க.வினர் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் மோடி வந்தார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், பா.ஜ.க. மாநில தலைவருமான அண்ணாமலை,
* ஒரு பறவை போல் பாசமாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.
* தமிழ்நாட்டில் முதலமைச்சருடைய செயல்பாடு என்பதே இல்லை. பொம்மையாக ஒரு முதலமைச்சர் உட்கார்ந்து இருக்கார்.
* தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் செயல்படாத ஒரு அரசு இருக்கிறது என்றால் முதல் தங்கப்பதக்கம் திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசுக்கு கொடுக்கணும்.
* 70 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதுபோன்ற ஒரு மோசமான ஆட்சியே பார்த்ததில்லை. மகளிர்களும், தாய்மார்களும் கொதித்து நின்று கொண்டுள்ளார்கள்.
* தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் முதல் 10 நாட்கள் கூட்டணி வைத்து ட்ராமா, கடைசி 10 நாள் அவர்கள் சம்பாதிச்ச பாவ காச வெச்சு மக்களுக்கு கொடுக்கறது. இதை தான் 70 ஆண்டுகாலமாக திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
* ஆனால் இந்த முறை அன்பு சகோதர, சகோதரிகளே திராவிட முன்னேற்ற கழகக்காரர்கள் யாராச்சு தன்னுடைய பக்கெட்டுல இருந்து ஓட்டுக்கு பணத்தை கொடுத்தா அது கஞ்சா மூலமாக வந்த பணம் என்பதை மறந்து விடாதீர்கள்.
* உங்களுடைய குழந்தையின் எதிர்காலத்தை உறிஞ்சப்போகின்ற பணம் என்பதை மறந்து விடாதீர். அள்ளித்திண்ணிப்பதற்காக மூக்குத்தியோ, தோடோ கொடுத்தால் நம்மளுடைய ரத்தத்தையெல்லாம் உறிஞ்சி கசக்கி பிழிந்து 33 மாத காலமாக ஊழல் செய்த பணம் என்பதை மறந்து விடாதீர்கள்.
* உலகில் எங்கு சென்றாலும், தமிழ் மொழி குறித்து பிரதமர் பேசுகிறார்.
* அடுத்த 7 நாட்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
* 7 நாட்கள் பிரதமருக்காக நாம் அர்ப்பணிப்போம், 5 ஆண்டு நமக்காக பிரதமர் உழைப்பார்.
* மோடியின் வெற்றிக்காக வீடு வீடாக செல்லுங்கள்.
* தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும் என்றார்.
முன்னதாக, தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேட்டுப்பாளையம் ரெயில் பாதையை இரட்டை ரெயில் பாதையாக நடவடிக்கை எடுக்கப்படும். நிலக்கடலை, பாக்கு ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சரும் நீலகிரி பா.ஜ.க. வேட்பாளருமான எல்.முருகன், பிரதமர் மோடி முன்னிலையில் வாக்குறுதி அளித்தார்.
- கொங்கு, நீலகிரி எப்போதுமே பா.ஜனதாவுக்கு சிறப்பான இடம்.
- இந்த பகுதியில் இருந்துதான் வாஜ்பாய் காலத்தில் எம்.பி.யை தேர்ந்தெடுத்து அனுப்பினீர்கள்.
பிரதமர் மோடி இன்று மதியம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
* என் அன்பார்ந்த தமிழக சகோதர, சகோதரிகளே வணக்கம்.
* கோவை கோணியம்மன், மருதமலை முருகனுக்கு என் வணக்கம்.
* அழகான தேயிலை தோட்டங்கள் இருக்கும் பகுதிக்கு வருவதற்கு ஒரு டீக்கடைகாரருக்கு சந்தோசமாக இருக்காதா என்ன?.
* அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
* கொங்கு, நீலகிரி எப்போதுமே பா.ஜனதாவுக்கு சிறப்பான இடம். இந்த பகுதியில் இருந்துதான் வாஜ்பாய் காலத்தில் எம்.பி.யை தேர்ந்தெடுத்து அனுப்பினீர்கள்.
* தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பா.ஜனதா ஆதிக்கம் தெளிவாக தெரிகிறது.
* தமிழகம் முழுவதும் சொல்கிறது மீண்டும் ஒருமுறை மோடியின் ஆட்சி.
* எங்களுடைய அரசு 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளது.
* ஏதாவது பொய்களை சொல்லி அரசு அதிகாரத்தில் இருப்பதே காங்கிரஸ், திமுக-வின் நோக்கம்.
* திராவிட கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை.
* இந்திய கூட்டணியில் உள்ள கட்சிகள் எஸ்.சி., எஸ்டி, ஓபிசி மக்களுக்கு வீடு, மின்சாரம் கிடைக்கக் கூடாது என நினைத்தது. ஆனால் எங்களுடைய ஆட்சியில் வீடுகள் கட்டிக் கொடுத்தோம். குடிநீர் வழங்கினோம். மின்சாரம் வழங்கினோம்.
* குடும்ப அரசியல் நடத்தும் இந்த கட்சிகள் தலித் மக்கள் பதவிக்கு வரக் கூடாது என நினைத்தார்கள். நாங்கள் பட்டியலினத்தை சேர்ந்தவரை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்தோம். அதையும் அவர்கள் எதிர்த்தார்கள்.
* இந்திய கூட்டணி இந்தியாவின் திறமையை நம்பவில்லை. கொரோனா தடுப்பூசி தயாரிப்போம் என்றபோது எள்ளி நகையாடினார்கள். ஆனால் தடுப்பூசி தயாரித்து சவால் விடுத்தோம். எதை முடியாது என்றார்களோ, அதை செய்து காட்டினோம்.
- பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இன்று மாலை 5 மணியளவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.
- பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் அப்புசாமி என்ற கார்த்திகேயனை ஆதரித்து பேசுகிறார்.
பொள்ளாச்சி:
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி நீலகிரி, கோவை பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசாரம் மேற்கொண்டார். நீலகிரி, காரமடை, கோவை கொடிசியா மைதானத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
அதனை தொடர்ந்து இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இன்று மாலை 5 மணியளவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் அப்புசாமி என்ற கார்த்திகேயனை ஆதரித்து பேசுகிறார்.
இதனையொட்டி அங்கு பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. கட்சியினர், பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கை வசதி உள்ளிட்டவையும் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி வரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும் அ.தி.மு.க.வினர் தயாராகி வருகிறார்கள்.
- அதேபோல விசாரணை அமைப்புகளை கொண்டு என்னை மிரட்டினாலும் எங்கள் கட்சி அதை எதிர்கொள்ளும்.
- நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கவிட்டாலும் பரவாயில்லை. நச்சை விதைப்பவர்களுக்கு வாக்களித்து விடக்கூடாது.
கோவை:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கோவையில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ் மொழிக்கு தேசிய அளவில் இதுவரை உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இது தமிழகத்துக்கு மத்திய அரசு செய்யும் துரோகமாகும். இந்த பிரச்சி னையில் தி.மு.க.வினருக்கும், எந்த கொள்கையும் இல்லை. தமிழகத்தில் வடமாநிலத்தி னரின் எண்ணிக்கை தொட ர்ந்து அதிகரித்து வருவது தமிழக நலனுக்கு ஏற்றதல்ல. இதேநிலை நீடித்தால் நாடே எதிர்பார்க்காத ஒரு புரட்சி உருவாகும்.
சின்னத்தை முடக்கினாலும் நாம் தமிழர் கட்சியை எதுவும் செய்து விட முடியாது. அதேபோல விசாரணை அமைப்புகளை கொண்டு என்னை மிரட்டினாலும் எங்கள் கட்சி அதை எதிர்கொள்ளும்.
பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவ டிக்கைகளால் இந்தியாவின் பொருளாதாரமே சீர்குலைந்து விட்டதாக உலக வங்கி கருத்து தெரி வித்துள்ளது. ஆனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருவதாக மக்களை ஏமாற்று கின்றனர். வாக்குப்பதிவு முடிந்து முடிவுகளை அறிவிப்பதற்கு 44 நாள் தாமதப்படுத்துவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
மேகதாது அணை விவகாரத்தில் அண்ணாமலையின் கருத்து என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதே போல தமிழக நதி நீர் உரிமையை பாதுகாப்பதில் பாரதிய ஜனதாவின் நிலை என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் தேசியம் பேசுகிறவர்கள் கர்நாடகத்தில் மாநில உரிமைகள் குறித்து பேசுகின்றனர். எனவே ஒரு சொட்டு கூட தண்ணீர் தர முடியாது என்பவர்களுக்கு ஒரு வாக்கு கூட கிடையாது என மக்கள் முடிவெடுக்க வேண்டும். கர்நாடகத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியபோது கன்னடராக இருப்பது தனக்கு பெருமை என பேசிய அண்ணாமலை, கர்நாடகத்தில் தேர்தலில் போட்டியிடாமல் தமிழகத்தில் எதற்கு போட்டியிட வேண்டும். நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கவிட்டாலும் பரவாயில்லை. நச்சை விதைப்பவர்களுக்கு வாக்களித்து விடக்கூடாது.
- இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் பிரமாண்ட பிரசார கூட்டம் நடைபெற உள்ளது.
- காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் சொல்வதை நம்பத் தேவையில்லை.
கோவை:
கோவை செட்டிப்பாளையம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் நாளை மறுநாள் (12-ந் தேதி) பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்று பேச உள்ளனர்.
பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் பிரமாண்ட பிரசார கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய பிரகடனம் செய்யப்பட உள்ளது. இந்த கூட்டத்துக்கு பிறகு பெரிய திருப்பம் ஏற்படும்.
சென்னையில் பிரதமரின் வாகன பிரசாரத்துக்கான விளம்பர பதாகை அகற்றப்பட்டது குறித்து கேட்கிறீர்கள். தற்போது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் அரசு உள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி தான் நடக்க வேண்டும். எங்கள் தலைவர்கள் எல்லாம் மக்களை எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி சந்திக்கின்றனர். ஆனால் பிரதமர் தமிழ்நாட்டில் ஏதாவது சாதித்து விடலாம், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விடலாம் என ரோடு ஷோ நடத்துகிறார்.
தமிழக மக்களுக்கு இவரது உண்மை முகம் தெரியும். அதனால் தமிழக மக்கள் பிரதமரை ஆதரிக்க மாட்டார்கள். இந்தியாவிலேயே பெரிய ஊழலான தேர்தல் பத்திர ஊழல் ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் குறித்து சி.ஏ.ஜி. அறிக்கையில் குறிப்பிட்டது போன்றவை தொடர்பாக பிரதமர் பேச மறுக்கிறார். தேர்தல் நன்கொடை பத்திர விவகாரம் குறித்து மேட்டுப்பாளையத்தில் பிரதமர் பேச வேண்டும். பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்தபோது காவிரி விவகாரத்தில் அ.தி.மு.க. என்ன செய்தது? சி.ஏ.ஏ., என்.சி.ஆர். வேளாண் சட்டம் ஆகிய மசோதாக்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அ.தி.மு.க. உறுதுணையாக இருந்துள்ளது.
காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் சொல்வதை நம்பத் தேவையில்லை. அனைத்துக்கட்சி தலைவர்களுடன் இணைந்து நாங்கள் செயல்படுவோம். சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி இல்லாமல் காவிரி விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது. காவிரியில் அணை கட்டுவதற்கு வாய்ப்பில்லை. கட்டுவதற்கு ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒருவர் விலை பட்டியல் (ரேட் கார்டு) உடன் பெண் அரசியல் தலைவரை ஒப்பிட்டு பேசுகிறார்.
- இன்னொருவர் 75 வயது பெண்மணி குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசுகிறார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் பெண் அரசியல் தலைவர்களுக்கு எதிராக அருவருக்கதக்க வகையில் அசிங்கமாக பேசும் நபர்களுக்கு சத்குரு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த 'கருத்துருவாக்கத்தை' மாற்ற வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "கடந்த 2 வாரங்களாக, பொது வெளியில் பெண்களுக்கு எதிராக என்னென்ன மாதிரியான வார்த்தைகள் எல்லாம் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நான் கவனித்து வருகிறேன்.
ஒருவர் 'விலை பட்டியல்' (ரேட் கார்டு) உடன் பெண் அரசியல் தலைவரை ஒப்பிட்டு பேசுகிறார். இன்னொருவர் 75 வயது பெண்மணி குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசுகிறார். மற்றொருவர் 60 வயதை கடந்த பெண் அரசியல் தலைவரின் பிறப்பு குறித்து அசிங்கமாக பேசுகிறார்.
நீங்கள் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் இதுபோன்ற நபர்களுக்கு தடைவிதியுங்கள். பெண்களுக்கு எதிரான அசிங்கமான, அவதூறு பேச்சுகள் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து இடங்களிலும் நிகழ்ந்து கொண்டே வருகின்றன. நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான இந்த 'கருத்துருவாக்கத்தை' மாற்றாவிட்டால், வேறு எதையும் உங்களால் மாற்ற முடியாது" என கூறியுள்ளார்.
In the last two weeks, the language used about women in the political discourse has included "rate card", questions about parentage and disgusting comments about a 75-year-old lady. What is wrong with us? I request the media and influencers, please ban such people for good. We… pic.twitter.com/MXpPK9saEC
— Sadhguru (@SadhguruJV) April 8, 2024
இது தொடர்பாக வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ள சத்குரு, "ஊடக நிறுவனங்கள், சமூக வலைதள பிரபலங்கள் உட்பட அனைவருக்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். பெண்களுக்கு எதிராக அசிங்கமாக பேசும் நபர்களுக்கு தடைவிதியுங்கள்" என தெரிவித்துள்ளார்.
- அண்ணாமலைக்கு ஆதரவாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்
- குக்கரும் தாமரையும் ஒரே கூட்டணியில் உள்ள சின்னங்கள் தான் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை - டிடிவி தினகரன்
கோவை மாவட்டம் சூலூரில் பாஜக கோவை வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வாக்கு சேகரிக்க, கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் தாமரை சின்னம் என கூச்சலிட்டனர்.
அதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன், நேற்று நான் போட்டியிடும் தேனி தொகுதியில் குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரித்தேன். அதே நியாபகத்தில் குக்கர் சின்னம் என கூறிவிட்டேன் என்று விளக்கம் அளித்தார்.
குக்கரும் தாமரையும் ஒரே கூட்டணியில் உள்ள சின்னங்கள் தான் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிய அவர் பின்பு அண்ணாமலைக்கு தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
மோடி அவர்களின் நம்பிக்கைக்கு உரிய அண்ணாமலையை வெற்றி செய்வதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல தீய சக்தியையும் துரோக சக்தியையும் "தாமரையை வீழ்த்த" நீங்கள் துணை புரிய வேண்டும் அவர் பேசினார்.
அதன் பின்னர் சுதாரித்து கொண்ட டிடிவி தினகரன், தாமரை வெற்றி பெற்றது என்ற செய்தி தமிழகம் முழுவதும் பறை சாற்ற வேண்டும் என பேசி சமாளித்தார்.
- டீக்கடை முன்பு கூடியிருந்த பொதுமக்களிடம் தாமரை சின்னத்துக்கு அவர் வாக்கு சேகரித்தார்.
- பால் உற்பத்தியாளர்களுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர் எல்.முருகன், அன்னூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கரியாக்கவுண்டனூர் கிராமத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த தொண்டர் பழனிசாமி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அவர் தனது கடைக்கு தேநீர் அருந்த வருமாறு எல்.முருகனுக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று எல்.முருகன் அந்த கடைக்கு சென்று டீ குடித்தார். சிறிது நேரம் டீக்கடைக்காரருடன் உரையாடி விட்டு தேநீருக்கு உரிய காசை கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் டீக்கடை முன்பு கூடியிருந்த பொதுமக்களிடம் தாமரை சின்னத்துக்கு அவர் வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து மத்திய மந்திரி எல். முருகன் அன்னூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட குன்னத்தூ ராம்பாளையம், கஞ்சப் பள்ளி, அல்லப்பாளையம், அ.மேட்டுப்பாளையம், பசூர், பட்டக்காரன்புதூர், மூக்கனூர், குப்பனூர், அக்கரை செங்கப்பள்ளி, கணுவக்கரை, ஆம்போதி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
மத்திய அரசு சார்பில் கிராமப்புற மக்களுக்கு உஜ்வாலா திட்டத்தில் ரூ.400 மானியத்தில் விலையில்லா எரிவாயு இணைப்புகள் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தி.மு.க.அரசு விவசாயிகளை ஒழிக்க வேண்டும், அவர்களது வாழ்வாதாரத்தை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டு தோறும் முப்பொழுதும் விளையும் நிலங்களை தாரை வார்க்க முயற்சி செய்கிறது. இதனை எதிர்த்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு தடுக்கப்பட்டது. அன்னூரில் சிப்காட் அமைக்க தி.மு.க. மீண்டும் முயற்சித்தால் பா.ஜ.க. சார்பில் ஒவ்வொரு தொண்டரும் தனது உயிரை கொடுத்தாவது தடுத்து நிறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நான் கோட்டாவில் வந்தவன் அல்ல என அண்ணாமலை சொல்வது பொய். பிற்படுத்தப்பட்டோர் சமுதாய ஒதுக்கீட்டில் தான் அண்ணாமலை படித்து, ஐபிஎஸ் அதிகாரியாக வந்தார்
- அண்ணாமலை ஏழையான குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை. அவரை பண்ணையார் என சொல்ல வேண்டும்
கோவையில் தி.மு.க சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "1974 ல் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது கொங்கு பகுதியை சேர்ந்த 24 சமுதாயங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்து வழங்கப்பட்டது. அருந்தினர் இன மக்களுக்கு 3 சதவீத உள் கட ஒதுக்கீட்டை திமுக வழங்கியது. இப்பகுதி இளைஞர்களுக்கு ஆபத்தாக அண்ணாமலை வந்துள்ளார்.
நான் கோட்டாவில் வந்தவன் அல்ல என அண்ணாமலை சொல்வது பொய். பிற்படுத்தப்பட்டோர் சமுதாய ஒதுக்கீட்டில் தான் அண்ணாமலை படித்து, ஐபிஎஸ் அதிகாரியாக வந்தார். ஆடு மேய்த்தவரை அதிகாரியாக்கி அழகு பார்த்தது திராவிடம். அதிகாரியை ஆடு மேய்ப்பவராக மாற்றியது ஆரியம்.
அண்ணாமலை ஏழையான குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை. அவரை பண்ணையார் என சொல்ல வேண்டும். அண்ணாமலையை வைத்தே தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை அறிந்து கொள்ள முடியும். அண்ணாமலை நண்பர்களிடம் இருந்து வாங்கிய பணத்திற்கு வரி காட்டுகிறாரா என வருமான வரித்துறை சோதனை செய்ய வேண்டும்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து இந்தியா கூட்டணி வெற்றி பெறும். அண்ணாமலை வண்டி டெல்லிக்கு போகாது. இங்கு தாமரை மலராது. மோடி ஆட்சி முடிவுக்கு வர உள்ளது.
பாஜக மனித குல எதிரி என தென்னிந்திய மக்களுக்கு தெரியும். வாந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு, பாஜகவிற்கு வாழ்வு தர மாட்டார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்களை இழக்க வேண்டி இருக்கும். திராவிட கட்சிகளுக்கு 85 சதவீதம் வாக்குகள் உள்ளது. திராவிட சித்தாந்ததிற்கு எப்போதும் ஆபத்து வராது" எனத் தெரிவித்தார்.
- தமிழகத்தில் பிரதமர் செல்லாத புதிய இடங்களுக்கு அழைத்து செல்வது பற்றி 12-ந்தேதிக்கு பிறகு தெரிவிக்கப்படும்.
- பிரதமர் தமிழகத்திற்கு வருவதில் தி.மு.க.வுக்கு என்ன பயம் என்று தெரியவில்லை.
கோவை:
கோவை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை இன்று கோவை சரவணம்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். நாளை மாலை தென்சென்னை, மத்திய சென்னை வேட்பாளர்களை ஆதரித்து நடக்கும் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்று ஆதரவு திரட்ட உள்ளார்.
அதன்பிறகு மறுநாள் காலை வேலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர், மதியம் கோவை மேட்டுப்பாளையத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
தமிழகத்தில் பிரதமர் செல்லாத புதிய இடங்களுக்கு அழைத்து செல்வது பற்றி 12-ந்தேதிக்கு பிறகு தெரிவிக்கப்படும்.
பிரதமர் தமிழகத்திற்கு வருவதில் தி.மு.க.வுக்கு என்ன பயம் என்று தெரியவில்லை.
தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு கடந்த 33 மாதங்களில் எத்தனை கிராமங்களுக்கு சென்று இருக்கிறார் என்று தி.மு.கவினரால் சொல்ல முடியுமா?. அவர் வெளிநாடுகளுக்கு செல்வார். தமிழகத்தில் நகரங்களுக்கு சென்று கை காட்டி விட்டு சென்று விடுவார்.
தி.மு.க.வினர் தாங்கள் தான் ஏதோ காலை உணவு திட்டத்தை கொண்டு வந்ததாக கூறி வருகிறார்கள். ஆனால் இந்த திட்டமானது மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கை திட்டத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை இன்னும் 2 தினங்களில் வெளியிடப்படும். கோவைக்கு என்று தனியாகவும் தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளோம்.
ஜெயிலில் இருந்து கொண்டு ஒருவர் கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார். அவர் எழுதிய கதையை தான் இங்கு வந்திருக்க கூடிய அமைச்சர்கள் பேசி வருகிறார்.
ஜெயிலில் இருந்து கொண்டு, தங்கம், பணம் கொடுத்து மக்களின் வாக்குகளை பெற்று விடலாம் என நினைக்கின்றனர். ஆனால் அது இந்த முறை நடக்காது. எவ்வளவு தங்க சுரங்கத்தையே தோண்டி வந்து கொடுத்தாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். யார் வெற்றி பெறுவார்கள் என்பது ஜூன் 4-ந்தேதி சாமானியனின் குரல் மூலம் தெரிய வரும். எங்களுக்கு 60 சதவீத வாக்குகள் கிடைக்கும். நான் வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எப்படி இந்தியாவின் தலைநகரை நாக்பூருக்கு மாற்ற முடியும்.
- கமல்ஹாசன் சுய நினைவுடன், ஆரோக்கியமான கருத்துக்களை தான் பேசுகிறாரா?
சரவணம்பட்டி:
ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து அம்பத்தூரில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், "பாஜகவின் கற்பனைப்படி நாக்பூர் தலைநகர் ஆக வேண்டும். இந்தியா மத சார்புள்ள, ஒரே மதம் உள்ள நாடாக வேண்டும். இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக வேண்டும். பாடத்திட்டத்திலும், புராணமே சரித்திரமாக மாற வேண்டும். அனைத்து தொழிலும் ஒரு சிறு குழுவுக்கே போய் சேர வேண்டும். இதெல்லாம் நடந்தா இப்ப மட்டும் இல்ல, எப்பொழுதுமே நாம் எல்லோருமே தெருவில் நிற்க வேண்டும். அதை நடக்கவிடக் கூடாது என்று பேசினார்.
இதுகுறித்து கோவை சரவணம்பட்டியில் செய்தியாளர்கள் கேட்டதற்கு பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை கூறியதாவது:-

மெண்டல் ஹாஸ்பிடல் போய் மூளையை பரிசோதனை செய்ய வேண்டும். யார் சொன்னாலும் கூட மூளையை சோதனை செய்ய வேண்டும். உண்மையாலுமே நல்லா இருக்காங்களா? இரண்டு மூளையும் வேலை செய்கிறதா? சுயநினைவுடன் தான் இருக்காங்களா? சரியா சாப்பிடறாங்களா? என்று கமல்ஹாசனுக்கு மருத்துவ ஆலோசனை தரவேண்டும்.
எப்படி இந்தியாவின் தலைநகரை நாக்பூருக்கு மாற்ற முடியும். கமல்ஹாசன் சுய நினைவுடன், ஆரோக்கியமான கருத்துக்களை தான் பேசுகிறாரா? இல்லை தி.மு.க.வுக்கு தன்னுடைய கட்சியை ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக விற்கறதுக்காக இப்படி கூவ வேண்டும் என்று கமல்ஹாசன் நினைக்கிறாரா? என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.






