search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    7 நாட்கள் பிரதமருக்காக அர்ப்பணிப்போம் - அண்ணாமலை
    X

    7 நாட்கள் பிரதமருக்காக அர்ப்பணிப்போம் - அண்ணாமலை

    • மோடியின் வெற்றிக்காக வீடு வீடாக செல்லுங்கள்.
    • தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும்.

    மேட்டுப்பாளையம்:

    தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று மாலை சென்னை வந்தார்.

    சென்னை பாண்டி பஜாரில் நடந்த பிரமாண்ட ரோடு- ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    இதனை தொடர்ந்து இன்று காலை பிரதமர் மோடி சென்னையில் இருந்து விமானம் மூலமாக வேலூர் சென்றார். வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவு திரட்டி பேசினார்.

    வேலூர் கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி கோவை மேட்டுப்பாளையத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அரக்கோணத்தில் இருந்து விமானம் மூலமாக பிற்பகல் கோவை விமான நிலையம் வந்தார். கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க.வினர் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் மோடி வந்தார்.

    பொதுக்கூட்டத்தில் பேசிய கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், பா.ஜ.க. மாநில தலைவருமான அண்ணாமலை,

    * ஒரு பறவை போல் பாசமாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

    * தமிழ்நாட்டில் முதலமைச்சருடைய செயல்பாடு என்பதே இல்லை. பொம்மையாக ஒரு முதலமைச்சர் உட்கார்ந்து இருக்கார்.

    * தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் செயல்படாத ஒரு அரசு இருக்கிறது என்றால் முதல் தங்கப்பதக்கம் திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசுக்கு கொடுக்கணும்.

    * 70 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதுபோன்ற ஒரு மோசமான ஆட்சியே பார்த்ததில்லை. மகளிர்களும், தாய்மார்களும் கொதித்து நின்று கொண்டுள்ளார்கள்.

    * தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் முதல் 10 நாட்கள் கூட்டணி வைத்து ட்ராமா, கடைசி 10 நாள் அவர்கள் சம்பாதிச்ச பாவ காச வெச்சு மக்களுக்கு கொடுக்கறது. இதை தான் 70 ஆண்டுகாலமாக திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

    * ஆனால் இந்த முறை அன்பு சகோதர, சகோதரிகளே திராவிட முன்னேற்ற கழகக்காரர்கள் யாராச்சு தன்னுடைய பக்கெட்டுல இருந்து ஓட்டுக்கு பணத்தை கொடுத்தா அது கஞ்சா மூலமாக வந்த பணம் என்பதை மறந்து விடாதீர்கள்.

    * உங்களுடைய குழந்தையின் எதிர்காலத்தை உறிஞ்சப்போகின்ற பணம் என்பதை மறந்து விடாதீர். அள்ளித்திண்ணிப்பதற்காக மூக்குத்தியோ, தோடோ கொடுத்தால் நம்மளுடைய ரத்தத்தையெல்லாம் உறிஞ்சி கசக்கி பிழிந்து 33 மாத காலமாக ஊழல் செய்த பணம் என்பதை மறந்து விடாதீர்கள்.

    * உலகில் எங்கு சென்றாலும், தமிழ் மொழி குறித்து பிரதமர் பேசுகிறார்.

    * அடுத்த 7 நாட்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

    * 7 நாட்கள் பிரதமருக்காக நாம் அர்ப்பணிப்போம், 5 ஆண்டு நமக்காக பிரதமர் உழைப்பார்.

    * மோடியின் வெற்றிக்காக வீடு வீடாக செல்லுங்கள்.

    * தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும் என்றார்.

    முன்னதாக, தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேட்டுப்பாளையம் ரெயில் பாதையை இரட்டை ரெயில் பாதையாக நடவடிக்கை எடுக்கப்படும். நிலக்கடலை, பாக்கு ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சரும் நீலகிரி பா.ஜ.க. வேட்பாளருமான எல்.முருகன், பிரதமர் மோடி முன்னிலையில் வாக்குறுதி அளித்தார்.

    Next Story
    ×