என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திராவிடம்"

    • நான் கோட்டாவில் வந்தவன் அல்ல என அண்ணாமலை சொல்வது பொய். பிற்படுத்தப்பட்டோர் சமுதாய ஒதுக்கீட்டில் தான் அண்ணாமலை படித்து, ஐபிஎஸ் அதிகாரியாக வந்தார்
    • அண்ணாமலை ஏழையான குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை. அவரை பண்ணையார் என சொல்ல வேண்டும்

    கோவையில் தி.மு.க சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, "1974 ல் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது கொங்கு பகுதியை சேர்ந்த 24 சமுதாயங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்து வழங்கப்பட்டது. அருந்தினர் இன மக்களுக்கு 3 சதவீத உள் கட ஒதுக்கீட்டை திமுக வழங்கியது. இப்பகுதி இளைஞர்களுக்கு ஆபத்தாக அண்ணாமலை வந்துள்ளார்.

    நான் கோட்டாவில் வந்தவன் அல்ல என அண்ணாமலை சொல்வது பொய். பிற்படுத்தப்பட்டோர் சமுதாய ஒதுக்கீட்டில் தான் அண்ணாமலை படித்து, ஐபிஎஸ் அதிகாரியாக வந்தார். ஆடு மேய்த்தவரை அதிகாரியாக்கி அழகு பார்த்தது திராவிடம். அதிகாரியை ஆடு மேய்ப்பவராக மாற்றியது ஆரியம்.

    அண்ணாமலை ஏழையான குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை. அவரை பண்ணையார் என சொல்ல வேண்டும். அண்ணாமலையை வைத்தே தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை அறிந்து கொள்ள முடியும். அண்ணாமலை நண்பர்களிடம் இருந்து வாங்கிய பணத்திற்கு வரி காட்டுகிறாரா என வருமான வரித்துறை சோதனை செய்ய வேண்டும்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து இந்தியா கூட்டணி வெற்றி பெறும். அண்ணாமலை வண்டி டெல்லிக்கு போகாது. இங்கு தாமரை மலராது. மோடி ஆட்சி முடிவுக்கு வர உள்ளது.

    பாஜக மனித குல எதிரி என தென்னிந்திய மக்களுக்கு தெரியும். வாந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு, பாஜகவிற்கு வாழ்வு தர மாட்டார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்களை இழக்க வேண்டி இருக்கும். திராவிட கட்சிகளுக்கு 85 சதவீதம் வாக்குகள் உள்ளது. திராவிட சித்தாந்ததிற்கு எப்போதும் ஆபத்து வராது" எனத் தெரிவித்தார்.

    • தமிழகத்தில் பிஏ, எம்.ஏ. வரலாறு, அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இந்திய சுதந்திரப் போராட்டம் முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
    • வள்ளலார், அய்யா வைகுண்டர், சுவாமி சகஜானந்தா போன்றோர் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளனர்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் மாநாடு இரண்டு நாட்களாக (நேற்று, இன்று) நடைபெற்றது.

    இன்றைய மாநாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசும்போது கூறியதாவது:-

    தமிழகத்தில் பிஏ, எம்.ஏ. வரலாறு, அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இந்திய சுதந்திரப் போராட்டம் முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. தேவகோட்டை, பெருங்காமநல்லூரில் விடுதலை வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

    தமிழக கல்லூரிகளின் பாடத்திட்டம் திராவிட இயக்க கதைகளால் நிரம்பியுள்ளது. வள்ளலார், அய்யா வைகுண்டர், சுவாமி சகஜானந்தா போன்றோர் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளனர்.

    நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் இணைந்தனர். சுதந்திர போராட்ட இருட்டடிப்பு தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் இருந்து பிரித்துவிடும்.

    இவ்வாறு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.

    • கொள்கை அளவுல திராவிடத்தையும் தமிழ்தேசியத்தையும் நாம பிரித்து பாக்க போறது இல்ல.
    • மதச்சார்பற்ற கொள்கையை நமது கொள்கை கோட்பாடாக முன்னிறுத்தி செயல்பட போகிறோம்.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணியளவில் தொடங்கியது. தவெக மாநாடு நடைபெறும் திடலுக்கு விஜய் வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதனையடுத்து மக்களிடையே உரையாற்றிய விஜய், "கொள்கை அளவுல திராவிடத்தையும் தமிழ்த்தேசியத்தையும் நாம பிரித்து பாக்க போறது இல்ல. திராவிடமும் தமிழ்த்தேசியமும் இந்த மண்ணுடைய இரு கண்கள். நாம் எந்தவொரு குறிப்பிட்ட அடையாளத்திற்குள்ளும் நம்மை சுருக்கி கொள்ளாமல் தமிழ்நாட்டுக்கு உரிமைகளை சார்ந்த மதச்சார்பற்ற கொள்கையை நமது கொள்கை கோட்பாடாக முன்னிறுத்தி செயல்பட போகிறோம்.

    ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம், சமய நல்லிணக்கம், பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், பகுத்தறிவு சிந்தனை மனப்பான்மை, மாநில தன்னாட்சி, இருமொழி ஆட்சி கொள்கை, இயற்கை வளப்பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற வளர்ச்சி, உற்பத்தித் திறன், போதையில்லா தமிழகம் என்கிற கொள்கையின் அடைப்படையில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற புரட்சிகர தத்துவத்தின் அடிப்படையில் சமத்துவ சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவது தான் நமது நோக்கம். கால மாறுதலுக்கு ஏற்ப கொள்கையில் மாற்றமும் மாறுதலும் வந்துதான் தீரும். அதை தவிர்க்க முடியாது" என்று தெரிவித்தார்.

    • பிளவுவாத அரசியல் செய்பவர்கள் தான் எங்கள் கட்சியில் முழுமுதல் கொள்கை எதிரி.
    • திராவிடமும் தமிழ்த்தேசியமும் இந்த மண்ணுடைய இரு கண்கள்.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணியளவில் தொடங்கியது. தவெக மாநாடு நடைபெறும் திடலுக்கு விஜய் வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மாநாட்டில் விஜய் பேசிய முக்கியமான பாயிண்ட்ஸ்:

    1. பெரியார் எங்கள் முதல் கொள்கை தலைவர். ஆனால் பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப்போவது இல்லை. அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அறிஞர் அண்ணா கூறிய ஒன்றே குலம் ஒருவனே தேவன் தான் எங்களின் நிலைப்பாடு. ஆனாலும் பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், சமீக நீதி, பகுத்தறிவு சிந்தனை ஆகிய எல்லாவற்றையும் நாம் முன்னெடுத்து செல்ல போகிறோம்.

    2. பிளவுவாத அரசியல் செய்பவர்கள் தான் எங்கள் கட்சியில் முழுமுதல் கொள்கை எதிரி. அடுத்ததாக திராவிட மாடல் என்று சொல்லி கொண்டு பெரியார், அண்ணா பேரை பயன்படுத்திக்கொண்டு தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கும் குடும்ப சுயநல கூட்டம் தான் நம்முடைய இரண்டாவது எதிரி

    3. என்னுடைய சொந்த தங்கை வித்யா இறந்தபோது எனக்கு ஏற்பட்ட அதே பாதிப்பு தான் தங்கை அனிதா இருந்தபோதும் எனக்கு ஏற்பட்டது. தகுதி இருந்தும் தடையா இருக்கிறது நீட் தேர்வு.

    4. கொள்கை அளவில் திராவிடத்தையும் தமிழ்த்தேசியத்தையும் நாங்கள் பிரித்து பார்க்கப்போவது கிடையாது. திராவிடமும் தமிழ்த்தேசியமும் இந்த மண்ணுடைய இரு கண்கள்.

    5. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற புரட்சிகர தத்துவத்தின் அடிப்படையில் சமத்துவ சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவது தான் நமது நோக்கம்.

    6. எங்களோடு சேர்ந்து பயணிக்க விரும்பும் அரசியல் கட்சிகளை நாங்கள் வரவேற்கிறோம். ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு வழங்கப்படும், அதிகாரப் பகீர்வு வழங்கப்படும்,

    7. இந்த மாற்று அரசியல் மாற்று சக்தி, அதை செய்யுறேன், இதை செய்யுறேன் என்று சொல்லி ஏமாற்று வேலை செய்ய நான் இங்கு வரவில்லை. ஏற்கனவே இருக்கும் 11-12 இருக்குற அரசியல் கட்சிகளில் நானும் ஒரு ஆளாக மாற்று அரசியல் என்று சொல்லிக்கொண்டு இருக்க நான் இங்கு வரவில்லை. மாற்று அரசியல் மாற்று சக்தி என ஏமாற்றுவது எங்கள் வேலை இல்லை. ஏமாற்று சக்திகளிடம் இருந்து மக்களை பாதுகாப்பது தான் எங்களது வேலை.

    8. பாண்டிய மன்னன் தலையாலங்கானத்து நெடுஞ்செழியன் பற்றிய கதையை குட்டி ஸ்டோரியாக விஜய் சொன்னார். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர், சிறு வயதிலேயே முடிசூட்டப்பட்ட பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் ஈடுபட்ட தலையாலங்கானத்து போரின் மூலம் அவரது வீரம் போற்றப்பட்டது. விஜய் புதிதாக அரசியலுக்கு வந்துள்ளதால் சிறுவன் பாண்டிய நெடுஞ்செழியன் சூழலில் தற்போது தான் இருப்பதாக விஜய் கூறியுள்ளார்.

    • இருமொழிக் கொள்கை தான் முக்கியம்..
    • பைக்கில் டூர் போவதை பற்றி வீடியோவில் கூறியிருந்தார்.

    சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியின் நடிகர் சத்யராஜ் பங்கேற்று பேசியதாவது:-

    அஜித் குமார் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். பைக்கில் டூர் போவதை பற்றி வீடியோவில் கூறியிருந்தார். சம்பந்தமே இல்லாத ஒரு மனிதனுக்கு கோபம் வருகிறது என்றால் அதற்கு காரணம் மதம் தான். ஏதோ ஒரு நாட்டுக்கு போகும் போது ஒருவரை பார்க்கிறோம். எந்த வாய்க்கால் வரப்பு சண்டையும் கிடையாது. ஆனால் அந்த மதம் தான். தேவையில்லாமல் ஒரு வெறுப்பை உருவாக்குகிறது என்று அழகான பதிவினை வெளியிட்டிருந்தார் அஜித். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

    ஆரியம் திராவிடத்தை எதிர்ப்பது ஓகே. தமிழ் தேசியம் என்ற பெயரில் எதிர்த்து ஆரியத்திற்கு துணை போவது ரொம்ப ஆபத்தானது. ஆரியம் வந்து திராவிடத்தை எதிர்க்கலாம். தந்தை பெரியார் சொல்லியிருக்கிறார் இதை பற்றி.. அவரிடம் நான் பேசுவது எல்லாம் சரியா என்று கேட்டால்.. நீ பேசுவதை பார்த்து அவர்கள் கோபப்பட்டால்.. நீ பேசுவது சரி என்றார்.

    ஆனால் அவர்கள் சந்தோஷப்பட்டால் நீ தப்பா பேசுகிறாய் என்று அர்த்தம் என்று தெளிவாக சொல்லிக் கொடுத்துவிட்டு போயிருக்கிறார். டெக்னாலஜி வளர்ந்து வரும்போது, நமக்கு இருமொழிக் கொள்கைதான் முக்கியம்.

    மும்மொழிக் கொள்கை எதற்காக. மாணவனுக்கு நேரம் என்பது மிகவும் முக்கியம். பள்ளிக்கு போய் வர வேண்டும். அதன்பிறகு விளையாட்டு, கொஞ்ச நேரம் டிவி பார்க்கணும். அப்படித்தானே வாழ்க்கையை நடத்த முடியும். ஏற்கனவே என்னை மாதிரி சரியாக படிக்காதவர்களுக்கு ஆங்கிலம், கணக்கு படிப்பதே பெரிய தலைவலியாக இருக்கிறது. இதில் இந்தியையும் படிக்க வேண்டும் என்று சொன்னால் கோபம் வரத்தானே செய்யும்.

    திராவிடம்தான் தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பானது. இந்த வடமாநில தொழிலாளர்கள் நிறைய வருகிறார்கள். அவங்க மாநிலத்தில் வந்து ஜாதிய ஒடுக்குமுறையை அனுபவித்திருப்பார்கள். உயர்ஜாதி என்று கருதப்படுபவர்கள் யாரும் இங்கு வேலைக்கு வந்திருக்கமாட்டார்கள்.

    மிகவும் ஒடுக்கப்பட்ட தலித் சகோதரர்களின் குடும்பங்கள்தான் இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களும் கிட்டத்தட்ட 10, 15 வருடங்களாக வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. அவர்களிடம் நாம் புரிய வைக்க வேண்டும்.

    ஏன் உங்கள் மாதிரி எங்கள் மாநிலம் இல்லை. திராவிட சித்தாந்தம்தான் காரணம் என்று புரிய வைக்க வேண்டும். நாம் சிங்கப்பூர் போய்விட்டு வந்தால், சிங்கப்பூரை போய் பாருங்க என்று சொல்வோம்.. அமெரிக்கா போய் வந்தால், அமெரிக்காவை போய் பாருங்க என்று கூறுவோம். அதுபோல் வடமாநில தொழிலாளர்கள், அவங்க மாநிலத்திற்கு போய் தமிழ்நாட்டை பாருங்க..

    அப்படி சொல்லும் நிலையை உருவாக்க வேண்டும். அவர்களுக்கு இந்தியில் திராவிடம் குறித்து மொழி பெயர்த்து கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர் ஊரில் போய் தமிழ்நாடு பற்றி சொல்வார்.

    இங்கு ஒரு மதக்கலவரமும் இல்லை. நன்றாக போகிறது வாழ்க்கை என்று பெருமையாக கூறுவார்கள். எங்களை பிரியமாக வைத்துக் கொள்கிறார்கள் என்று கூறுவார்கள். அங்கிருந்து இங்கு ஆட்கள் வருகிறார்கள் என்றால், நம்மாட்கள் அதைவிட மேலே சென்றுவிட்டார்கள் என்று அர்த்தம்.. நம்மாட்கள் வேலை செய்ய வரவில்லை என்று அர்த்தம் இல்லை.

    திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என பிரபாகரனே கூறியுள்ளார். ஒருமுறை பேரறிவாளன் ஜாமினில் வெளியில் வந்திருந்தார். அவரை பார்க்க அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது அவர் வீட்டுக் கதவை திறந்த உடன் அங்கு சுவரில் பெரியார், பிரபாகரன் படம் இருந்தது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.

    விடுதலை ராஜேந்திரன் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில், 1975-ல் கியூபாவில் உலகப் பேராளிகள் மாநாடு நடந்துள்ளது. இதற்கு பிரபாகரன் அழைக்கப்பட்டிருந்தார். அவர் சூழ்நிலைகள் காரணமாக செல்லவில்லை. இதற்கு பதில் அவர் கியூபாவிற்கு கடிதம் அனுப்புகிறார். அதில், தமிழ் இந்தியாவிலேயே பழமையான மொழி என்றும் திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என்னும் வகையில் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ் மொழி பேசுகிற திராவிடர்கள் ஆகிய நாங்கள் என்று பிரபாகரன் எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ், தமிழ் தேசியத்தின் அரண் திராவிட இயங்கங்கள். திராவிட இயக்கம் ஆட்சியில் இருக்கும் வரை அந்த அரண் வெறும் கற்கோட்டையாக இல்லாமல் இரும்புக்கோட்டையாக இருக்கிறது.

    விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் திராவிடம், தமிழ்தேசியம் இரண்டும் இரு கண்கள். இது எங்கள் கொள்கை என அறிவித்திருந்தார். தமிழ்தேசியம், திராவிடம் என்பது எப்படி ஒன்றாகும் என சீமான் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர்.

    இந்த நிலையில் திராவிடமும், தமிழ்தேசியம் இரண்டும் ஒன்றுதான். இரண்டையும் வெவ்வேறாக பிரித்து பார்ப்பது சரியாகாது என பிரபாகரன் கூறியதை மேற்கோள் காட்டி விஜயின் கொள்கையை தவறு என்ற வகையில் சத்யராஜ் முறைமுகமாக விமர்சித்ததாக பார்க்கப்படுகிறது.

    பொதுவாக சினிமா தொடர்பாக விஜய்- அஜித் ரசிகர்கள் இடையே மோதல் இருந்து வருகிறது. விஜயை விமர்சிப்பவர்கள் அஜித்தை பாராட்டி பேசுவார்கள். அஜித்தை விமர்சிப்பவர்கள் விஜயை பாராட்டி பேசுவார்கள்.

    விஜய் மாநில மாநாட்டிற்குப் பிறகு கார் ரேசில் கலந்து கொள்ள இருந்த அஜித்திற்கு உதயநிதி வாழ்த்து தெரிவித்திருந்தார். மாநாடு நடத்திய விஜய்க்கு எதிர்ப்பை இவ்வாறு மறைமுகமாக தெரிவிப்பதாக பேசப்பட்டது.

    இவ்வாறு நடிகர் சத்யராஜ் பேசினார்.

    • கிளையில் அமர்ந்து கொண்டு அடி மரத்தை வெட்டுவது போல் என்ன பேசுவது என்று தெரியாமல் ஒரு கூட்டம் இருக்கிறது.
    • திராவிடம் என்ன செய்தது என்று கேட்டால் உன் முகத்திரையை கிழித்தது என்று கூறுங்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் நடந்த சமூகநீதி மற்றும் பகுத்தறிவு பாசறை மண்டல கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது :-

    அறிவோடு சிந்தித்து செயல்பட வேண்டும் என சொல்லி கொடுத்தது தி.மு.க. தான். படையை திரட்டி கொண்டு கொள்கை எதிரியை நோக்கி வாருங்கள் போவோம் என கூறியபோது நமக்கு பின்னால் இருந்து கொண்டு நம் மீது அம்பை விடுகிறான். கொள்கை எதிரி இதை பார்த்து சிரிப்பான் என்று குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் மைக் போட்டு உலர்கிறான்.

    கிளையில் அமர்ந்து கொண்டு அடி மரத்தை வெட்டுவது போல் என்ன பேசுவது என்று தெரியாமல் ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்களை பார்க்க பரிதாபமாக உள்ளது. அவர்களுக்கும் சேர்த்து தான் தி.மு.க. உழைக்கிறது. திராவிடம் என்பது அடிமைத்தனத்தை உடைத்தது, பெண்ணடிமைத்தனத்தை கிழித்து எறிந்தது, மூடநம்பிக்கையை கிழித்து எறிந்தது.

    இதையும் மீறி எவனாவது திராவிடம் என்ன செய்தது என்று கேட்டால் உன் முகத்திரையை கிழித்தது என்று கூறுங்கள். சிலர் சங்கீகளா அல்லது சங்கீகள் போர்வை போர்த்தியவர்களா அல்லது நேரடியாக, மறைமுகமாக சங்கீகளுடைய ஆதரவு பெற்றவர்களாக என்று தெரியாமல் சாம்பார், வடை, பாயாசம் என்று பேசுகின்றனர். அறிவு ஆயுதத்தை சிந்திக்க கற்று கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்பதுபோல் ஒரு கருத்து பரப்பப்படுகிறது.
    • இந்தி திணிப்பு இருக்கும் வரை வைகோ தேவை.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் ம.தி.மு.க. தலைமை செயலாளர் துரை வைகோ இயக்கத்தில் உருவான "மாமனிதன் வைகோ" ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட ஷா நவாஸ் எம்.எல்.ஏ பேசியதாவது:-

    வைகோ பற்றிய ஆவணப்பட த்தை துரை வைகோ சிறப்பாக உருவாக்கியுள்ளார்.

    50 ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான வைகோவை பற்றி இன்றைய இளைஞர்களிடம் சரியான புரிதல் இல்லை வைகோவை பற்றி இன்றைய இளைஞர்களிடம் சரியான புரிதல் இல்லை.

    அவர்கள் இந்த ஆவணப்படத்தை பார்க்க வேண்டும்.

    திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்பதுபோல் ஒரு கருத்து பரப்பப்படுகிறது.

    அது தவறான கருத்து என்பதற்கு வைகோவின் வாழ்க்கையே சான்று.

    அவர் திராவிட இயக்கவாதியாகவும் தமிழ் தேசியவாதியாகவும் பெரும் பங்களிப்புகளை செய்துள்ளார். வைகோவின் போராட்டம் முடிந்துவிடவில்லை.

    இந்தி திணிப்பு இருக்கும் வரை வைகோ தேவை. சமூக நீதியை காப்பாற்ற வைகோ தேவை. இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில், ம.தி.மு.க. தலைமை செயலாளர் துரை வைகோ, நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் கவுதமன், ம.தி.மு.க. நாகை மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், நாகை மாலி எம்.எல்.ஏ, நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, வி.சி.க. மாவட்ட பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×