என் மலர்tooltip icon

    சென்னை

    • பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு ஜூலை மாதம் 25-ந்தேதி பிறந்த தினம் ஆகும்.
    • முதல் கட்டமாக வடமாவட்டங்களில் தொகுதி வாரியாக அவர் நடைபயணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

    சென்னை :

    பா.ம.க.வில் தந்தை- மகனுக்கு இடையேயான மோதல் தற்போது வரை முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், சட்டமன்ற தொகுதி வாரியாக உரிமை மீட்பு நடைபயணம் செல்ல அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு ஜூலை மாதம் 25-ந்தேதி பிறந்த தினம் ஆகும். அன்றைய தினம் டாக்டர் அன்புமணி நடைபயணத்தை தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    முதல் கட்டமாக வடமாவட்டங்களில் தொகுதி வாரியாக அவர் நடைபயணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நடைபயணத்தின் போது ஒவ்வொரு தொகுதியிலும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை அவர் சந்தித்து பேச இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    • இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
    • நான்கு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், வடகரை கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை சுமார் 9.00 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் காரியாட்டி வட்டம், கல்குறிச்சியை சேர்ந்த சவுண்டம்மாள் மற்றும் தண்டியளேந்தலைச் சேர்ந்த கருப்பையா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும், இவ்விபத்தில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவரும் காரியாபட்டியைச் சேர்ந்த கணேசன், திருமுருகன், மாரியம்மாள் மற்றும் பேச்சியம்மாள் ஆகிய நான்கு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    • அனைவரும் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும்.
    • மாலையில் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று முதல் 4 நாட்களுக்கு நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த கூட்டம் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை என 2 பிரிவாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. முதல் நாளான இன்று காலையில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனையில் ஈடுபட்டார்.

    மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி என 7 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற இன்றைய கூட்டத்தில் தேர்தல் பணி, கட்சி வளர்ச்சி பணி, தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, கிளைக் கழகங்களை வலுப்படுத்துவது, சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றியம், நகரம், வார்டு, பகுதி, வட்டம் பேரூர் வார்டுகளுக்கு சார்பு அணி நிர்வாகிகள் தேர்வு செய்வது, பூத் முகவர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் பிரேமலதா பேசியதாவது:-

    இன்று முதலே நீங்கள் அனைவரும் உங்களுக்கான பணிகளை தொடங்க வேண்டும். நாம் மேற்கொள்ளும் அனைத்து பணிகளும் 2026 தேர்தலுக்கான பணியாகவே இருக்க வேண்டும்.

    போனில் பேசி நான் அதைச் செய்துவிட்டேன், இதை செய்து விட்டேன் என்று கூறாமல் களத்திற்கு சென்று ஒவ்வொருவரும் வெற்றி வீரர்களாக பணியாற்ற வேண்டும்.

    உங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியை முழுமையாக ஆராய்ந்து அனைவரும் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும்.

    பூத் கமிட்டி நிர்வாகிகள், கிளைக் கழக தொண்டர்கள் வரை அனைவரையும் நிர்வாகிகள் சந்தித்து பேச வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவே இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை அனைவரும் தெரிவியுங்கள். எங்கள் கருத்துக்களையும் கேட்டுக்கொள்ளுங்கள். நமது பணிகள் அனைத்தும் தேர்தலில் வெற்றி பெறும் வகையிலேயே அமைய வேண்டும்.

    இவ்வாறு பிரேமலதா பேசினார்.

    இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் அனைவரும் சட்டமன்றத் தேர்தலில் அதிகமான தொகுதிகளை கேட்டு போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    இது தொடர்பாக கூட்டத்தில் பேசிய மூத்த நிர்வாகி ஒருவர், வருகிற சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 10 எம்.எல்.ஏ.க்களாவது வெற்றி பெற்று சட்டசபைக்குள் செல்ல வேண்டும்.

    அதற்கேற்ப நாம் செயல்பட வேண்டும் என்று ஆவேசமாக தனது கருத்தை தெரிவித்தார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் (சுமார் 4 ஆயிரம் ஓட்டுகள்)தோல்வியை தழுவிய விஜயபிரபாகரனை மீண்டும் அதே மாவட்டத்தில் களமிறக்குவதற்கு அம்மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அருப்புக்கோட்டை தொகுதியில் தான் விஜயபிரபாகரனுக்கு மற்ற சட்டமன்ற தொகுதிகளை விட அதிக அளவில் வாக்குகள் கிடைத்துள்ளது.

    இதனை மையமாக வைத்து விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் இன்றைய கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தலில் விஜயபிரபாகரனை அருப்புக்கோட்டை தொகுதியில் களம் இறக்கினால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்கிற கருத்தையும் பதிவு செய்து இருக்கிறார்கள்.

    இதன்மூலம் அ.தி.மு.க. கூட்டணியில் அருப்புக்கோட்டை தொகுதியை அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டு பெறுவதற்கும் தே.மு.தி.க. தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மாலையில் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை செயலாளர் பார்த்தசாரதி, இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன் மற்றும் துணை செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.யூ.சந்திரன், சுபாரவி ஆகியோர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர்.

    தே.மு.தி.க.வில் மொத்தம் 84 மாவட்ட செயலாளர்கள் பொறுப்பில் உள்ளனர்.

    மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வருகிற 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள்.

    • தொகுதிவாரியாக 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • 4-ம் கட்ட பரிசளிப்பு விழாவும் இந்த வாரத்திலேயே நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    சென்னை:

    த.வெ.க. தலைவர் விஜய் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார்.

    2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 2 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. முதலிடத்தை பெற்ற மாணவிகளுக்கு வைரக் கம்மல் பரிசாக வழங்கப்பட்டது.

    தொகுதிவாரியாக 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    அடுத்ததாக 3-ம் கட்ட பரிசளிப்பு விழா நாளை மறுதினம் நடைபெற இருக்கிறது. விழாவில் பங்கேற்போருக்கு அந்தந்த மாவட்ட செயலாளர் வாரியாக டிஜிட்டல் அடையாள அட்டைகளை கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் இன்று வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து 4-ம் கட்ட பரிசளிப்பு விழாவும் இந்த வாரத்திலேயே நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    அடுத்த வாரம் நடைபெறும் விழாவில் விடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. அனைத்து விழாக்களிலும் கட்சி தலைவர் விஜய் பங்கேற்று பரிசுகள் வழங்கி மாணவ, மாணவிகளை கவுரவிக்க இருக்கிறார்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்து வருகிறார்.

    • ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக மானாமதுரையில் இருந்து மாலை 4.55-க்கு புறப்பட்டு திருச்சி செல்லும்.
    • திருச்சி செல்லும் விரைவு ரெயில் (எண்:16850), ராமேசுவரம்-மானாமதுரை இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லையில் இருந்து குஜராத் மாநிலம் ஹப்பாவுக்கு செல்லும் விரைவு ரெயில் (வண்டி எண்-19577) ஜூன் 15-ல் இருந்து காலை 5.05-க்கு புறப்படும். அதே போல, நெல்லையில் இருந்து புறப்பட்டு குஜராத் காந்திதாம் செல்லும் விரைவு ரெயிலும் (எண்: 20923) காலை 5.05-க்கு புறப்படும். கோவையில் இருந்து அரியானா மாநிலம் ஹிசார் செல்லும் விரைவு ரெயில் (எண்:22476) பிற்பகல் 1.30-க்கு கோவையில் இருந்து புறப்படும்.

    இதே போல, மும்பை தாதரில் இருந்து நெல்லை செல்லும் விரைவு ரெயில் (எண்:22629), நெல்லையில் இருந்து புறப்பட்டு தாதருக்கு செல்லும் ரெயில் (எண்:22630) உள்பட 37 விரைவு ரெயில்களின் நேரமும் மாற்றப்பட்டு உள்ளன.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் சத்திரக்குடி ரெயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில விரைவு ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி திருச்சியில் இருந்து ஜூன் 12, 14, 16, 21, 23 மற்றும் ஜூலை 4 ஆகிய தேதிகளில் காலை 7.05-க்கு புறப்பட்டு ராமேஸ்வரம் செல்லும் விரைவு ரெயில் வண்டி எண்.16849 மானாமதுரை, ராமேசுவரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு, மானாமதுரையில் நிறுத்தப்படும்.

    மறுமார்க்கமாக ராமேசுவரத்தில் இருந்து அதே தேதியில் மாலை 3-க்கு புறப்பட்டு திருச்சி செல்லும் விரைவு ரெயில் (எண்:16850), ராமேசுவரம்-மானாமதுரை இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக மானாமதுரையில் இருந்து மாலை 4.55-க்கு புறப்பட்டு திருச்சி செல்லும்.

    மேலும், ராமேசுவரத்தில் இருந்து ஜூன் 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 9.10-க்கு புறப்பட்டு செகந்திராபாத் செல்லும் சிறப்பு ரெயில் (எண்:07696) அதற்கு மாற்றாக ராமேசுவரத்தில் இருந்து இரவு 7-க்கு 19 மணி நேரம் 50 நிமிடம் தாமதம்) புறப்பட்டு செகந்திராபாத் செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஜூன் 12, 16, 19, 23, 26, 30 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.05-க்கு புறப்பட்டு விஜயவாடா செல்லும் பினாகினி விரைவு ரெயில் (வண்டி எண்.12712), வழக்கத்துக்கு மாறாக சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2.25-க்கு (20 நிமிடம் தாமதம்) புறப்பட்டு விஜயவாடா செல்லும்.

    இதேபோல, திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் விரைவு ரெயில் (வண்டி எண்.20606), பண்ருட்டி ரெயில் நிலையத்தில் காலை 6.04-க்கு வந்து செல்லும்.

    இன்று (புதன்கிழமை) முதல் 25 நிமிடம் தாமதமாக, அதாவது காலை 6.29-க்கு வரும். ஆனால், திருச்செந்தூர்- திருப்பாதிரிப்புலியூர் மற்றும் விழுப்புரம்-எழும்பூர் இடையேயான ரெயில் சேவையில் எந்த மாற்றமும் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள சார்பு அணிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
    • ஐ.டி. பிரிவில் மாநில, மண்டல வாரியாக பொறுப்பாளர்கள், வழக்கறிஞர் அணி, சட்ட ஆலோசனை அணிக்கான புதிய பொறுப்பாளர்களை நியமிக்கப்பட்டுள்ளனர்.

    த.வெ.க.வில் புதிய பொறுப்பாளர்கள் நியமித்து கட்சி தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

    தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள சார்பு அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், கழகத் தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் சமூக ஊடக அணியின் அதிகாரப்பூர்வ புதிய பொறுப்பாளர்கள் நியமித்து உள்ளார்.

    ஐ.டி. பிரிவில் மாநில, மண்டல வாரியாக பொறுப்பாளர்கள், வழக்கறிஞர் அணி, சட்ட ஆலோசனை அணிக்கான புதிய பொறுப்பாளர்களை நியமித்து உள்ளார்.

    • 2021-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த ஆய்வில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்தது.
    • தமிழகத்தில் தற்போது கொரோனா நோயின் தீவிர தன்மை மிகப்பெரும் அளவுக்கு குறைந்தே இருப்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதாக கடந்த 2 வாரங்களாக தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த வைரஸ் அதிக வீரியம் இல்லாதது என்பதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    இந்த நிலையில் தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வு தகவல் இன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகத்தில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மக்கள் மத்தியில் எப்படி உள்ளது? என்பது தொடர்பாக இதுவரை 5 கட்டங்களாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 2020 அக்டோபர் மாதம் முதல் கட்ட ஆய்வு நடந்த போது தமிழக மக்களில் 32 சதவீதம் பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த 2-ம் கட்ட ஆய்வில் 29 சதவீதம் பேருக்கும், மே மாதம் நடந்த ஆய்வில் 70 சதவீதம் பேருக்கும் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதியானது. 2021-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த ஆய்வில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரிய வந்தது.

    தற்போது (2025) கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழக மக்களில் 97 சதவீதம் பேருக்கு கொரோனா நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா நோயின் தீவிர தன்மை மிகப்பெரும் அளவுக்கு குறைந்தே இருப்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு பொது சுகாதாரம் இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது.

    • தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனையில் ஈடுபட்டார்.
    • த.வெ.க.வுடன் கூட்டணியா என்பதை விஜயிடம் தான் கேட்க வேண்டும்.

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் தே.மு.தி.க.வும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி உள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க.வுக்கு மேல்சபை எம்.பி. பதவியை தருவதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது காலியான மேல்சபை எம்.பி. பதவி இடம் அந்த கட்சிக்கு ஒதுக்கப்படாததால் அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.

    இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. நீடிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

    இதுபோன்ற சூழலில் இன்று முதல் 4 நாட்களுக்கு தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த கூட்டம் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை என 2 பிரிவாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.

    முதல் நாளான இன்று காலையில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:

    * 2026 சட்டசபை தேர்தலில் தேவைப்பட்டால் தனித்து போட்டியிடவும் தயார்.

    * தே.மு.தி.க. தனித்து போட்டியா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.

    * கூட்டணி குறித்து முடிவு செய்ய சில காலம் தேவைப்படுகிறது.

    * தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் வரவேற்கிறோம்.

    * ராஜ்யசபா சீட் குறித்த ஒப்பந்த கடிதத்தை நாகரிகம் கருதி வெளியிடவில்லை.

    * தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணையுமா என்ற கேள்விக்கு தி.மு.க.விடம் கேளுங்கள்.

    * த.வெ.க.வுடன் கூட்டணியா என்பதை விஜயிடம் தான் கேட்க வேண்டும்.

    * தி.மு.க. அழைத்தால் செல்வீர்களா என்ற கேள்விக்கு காலம் வந்ததும் பதில் சொல்கிறேன் என்று அவர் கூறினார்.

    • மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • போலியான கல்லூரிகளை அதிகம் உருவாகுகின்றன. அதனை நம்பி மாணவர்கள் ஏமாறுகிறார்கள்... என்று கூறினார்.

    சென்னை:

    தி.மு.க. அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி மாட்டிக்கொள்வது என்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சர்ச்சை பேச்சால் பொன்முடி அமைச்சர் பதவி, கட்சி பொறுப்பு உள்ளிட்டவற்றை இழந்து தொண்டர் என்ற முறையில் உள்ளார்.

    இந்த நிலையில், தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பத்திரிகையாளர் சந்திப்பின் போது எடுக்கப்பட்டது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர், போலியான கல்லூரிகளை அதிகம் உருவாகுகின்றன. அதனை நம்பி மாணவர்கள் ஏமாறுகிறார்கள்... என்று கூறினார்.

    அதற்கு அமைச்சர் மா.சுப்பிரணியன், போலியான கல்லூரிகளை கண்டறிய வேண்டியது மாணவர்கள் தான். எது போலி, எது நிஜம் என்று கண்டுபிடிக்க வேண்டியது மாணவர்களும், பெற்றோர்களும். எங்கேயாவது போலியான கல்லூரி இருந்து மருத்துவத்துறையில் நடத்துகிறார்கள் என்று சொன்னா உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    போலியான கல்லூரிகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை. அமைச்சரின் பொறுப்பு. அதை மாணவர்களும், பெற்றோர்களும் கண்டுபிடிக்கணும் என்று அமைச்சர் சொல்லியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

    • பெண் விடுதலையே மகளிருக்கான முன்னேற்றம் என முழங்கியதுதான் திராவிட இயக்கம்.
    • இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன.

    சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழு தின விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

    * பெண் விடுதலையே மகளிருக்கான முன்னேற்றம் என முழங்கியதுதான் திராவிட இயக்கம்.

    * பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, பெண்கள் காவல்நிலையம் என அனைத்தையும் உருவாக்கியது தி.மு.க.

    * தி.மு.க. ஆட்சியில் மகளிருக்கான எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    * இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன.

    * மகளிர் சுய உதவிக் குழுவினரின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகின்றன.

    * இந்தியாவில் அனைத்திலும் தமிழ்நாடு முன்னணியில் இருக்க மகளிரின் பங்கும் காரணம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் இன்று திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். நாளை (12-ந்தேதி) கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    நாளை மறுநாள் (13-ந் தேதி) தமிழகம் முழுவதும் மழை அளவு அதிகரிக்கக் கூடும். கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வருகிற 14-ந்தேதி (சனிக்கிழமை) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

    வருகிற 15-ந்தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதிகனமழையும், கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    14, 15-ந்தேதிகளில் அதாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நீலகிரி மாவட்டத்தில் மிக மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை ரெட் அலர்ட்டாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது.

    ஏனெனில் 14-ந்தேதி (சனிக்கிழமை) நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் 204.4 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளன.

    நீலகிரியில் 14-ந்தேதி மிக பலத்த மழை பெய்யும் என்பதால் தண்ணீர் தேக்கம், நிலச்சரிவு அபாயங்கள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் இதற்கு ஏற்ப முன் எச்சரிக்கையுடன் தயாராக இருக்க வானிலை இலாகா அறிவுறுத்தி உள்ளது.

    16-ந்தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும், வட தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • என்னை புதுமனை புகுவிழாவிற்கு அழைத்தவரின் குடும்பம் ஒரு கூட்டுக்குடும்பம்.
    • எனக்கு நெருக்கமான குடும்பம். அவரும் எனக்கு நெருக்கமானவர்தான்.

    தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலுவிற்கு, த.வெ.க. நிர்வாகி பண மாலை அணிவித்து பின் மன்னிப்பு கேட்ட நிலையில் இதுதொடர்பாக எ.வ.வேலு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    என்னை புதுமனை புகுவிழாவிற்கு அழைத்தவரின் குடும்பம் ஒரு கூட்டுக்குடும்பம். அவர் அண்ணன், தம்பிகள் எல்லாம் தி.மு.க.வில் உள்ளனர். எனக்கு நெருக்கமான குடும்பம். அவரும் எனக்கு நெருக்கமானவர்தான். சென்ற முறை எனக்கு ஓட்டு போட்டவர் தான். அவர்கள் வீடு கட்டி புதுமனை புகுவிழாவிற்கு, ஐயா நீங்கள் வந்துதான் ஆக வேண்டும் என்று சொன்னார்கள்.

    நான் பொதுவாக கட்சி பார்ப்பதில்லை. திருவண்ணாமலையை பொறுத்தவரை யார் எனக்கு வந்து அழைப்பிதழ் கொடுத்தாலும் சரி, நான் அந்த சட்டமன்ற உறுப்பினர். எனக்கு யார் வாக்களித்தார்கள். வாக்களிக்கவில்லை என்று பார்க்க முடியாது.

    என்னை மதித்து அழைத்ததின்பேரில் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தி விட்டு வந்தேன். அவ்வளவுதான். அவர் என்ன செய்தார் என்று என்னிடம் கேட்டால் எனக்கு என்ன தெரியும் என்று கூறினார்.

    ×