என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    போலியான கல்லூரிகளை கண்டறிய வேண்டியது மாணவர்கள் தான்- அமைச்சர் சர்ச்சை பேச்சு
    X

    போலியான கல்லூரிகளை கண்டறிய வேண்டியது மாணவர்கள் தான்- அமைச்சர் சர்ச்சை பேச்சு

    • மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • போலியான கல்லூரிகளை அதிகம் உருவாகுகின்றன. அதனை நம்பி மாணவர்கள் ஏமாறுகிறார்கள்... என்று கூறினார்.

    சென்னை:

    தி.மு.க. அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி மாட்டிக்கொள்வது என்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சர்ச்சை பேச்சால் பொன்முடி அமைச்சர் பதவி, கட்சி பொறுப்பு உள்ளிட்டவற்றை இழந்து தொண்டர் என்ற முறையில் உள்ளார்.

    இந்த நிலையில், தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பத்திரிகையாளர் சந்திப்பின் போது எடுக்கப்பட்டது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர், போலியான கல்லூரிகளை அதிகம் உருவாகுகின்றன. அதனை நம்பி மாணவர்கள் ஏமாறுகிறார்கள்... என்று கூறினார்.

    அதற்கு அமைச்சர் மா.சுப்பிரணியன், போலியான கல்லூரிகளை கண்டறிய வேண்டியது மாணவர்கள் தான். எது போலி, எது நிஜம் என்று கண்டுபிடிக்க வேண்டியது மாணவர்களும், பெற்றோர்களும். எங்கேயாவது போலியான கல்லூரி இருந்து மருத்துவத்துறையில் நடத்துகிறார்கள் என்று சொன்னா உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    போலியான கல்லூரிகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை. அமைச்சரின் பொறுப்பு. அதை மாணவர்களும், பெற்றோர்களும் கண்டுபிடிக்கணும் என்று அமைச்சர் சொல்லியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×