என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "video spreads"

    • மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • போலியான கல்லூரிகளை அதிகம் உருவாகுகின்றன. அதனை நம்பி மாணவர்கள் ஏமாறுகிறார்கள்... என்று கூறினார்.

    சென்னை:

    தி.மு.க. அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி மாட்டிக்கொள்வது என்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சர்ச்சை பேச்சால் பொன்முடி அமைச்சர் பதவி, கட்சி பொறுப்பு உள்ளிட்டவற்றை இழந்து தொண்டர் என்ற முறையில் உள்ளார்.

    இந்த நிலையில், தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பத்திரிகையாளர் சந்திப்பின் போது எடுக்கப்பட்டது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர், போலியான கல்லூரிகளை அதிகம் உருவாகுகின்றன. அதனை நம்பி மாணவர்கள் ஏமாறுகிறார்கள்... என்று கூறினார்.

    அதற்கு அமைச்சர் மா.சுப்பிரணியன், போலியான கல்லூரிகளை கண்டறிய வேண்டியது மாணவர்கள் தான். எது போலி, எது நிஜம் என்று கண்டுபிடிக்க வேண்டியது மாணவர்களும், பெற்றோர்களும். எங்கேயாவது போலியான கல்லூரி இருந்து மருத்துவத்துறையில் நடத்துகிறார்கள் என்று சொன்னா உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    போலியான கல்லூரிகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை. அமைச்சரின் பொறுப்பு. அதை மாணவர்களும், பெற்றோர்களும் கண்டுபிடிக்கணும் என்று அமைச்சர் சொல்லியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

    • பா.ஜ.க.வினர் சிலர் முதல்-மந்திரி சித்தராமையா பேசிக்கொண்டிருந்தபோது கருப்பு கொடி காட்டினர்.
    • வீடியோ வைரலாகி விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

    கர்நாடக காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் பெலகாவியில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக விலைவாசி உயர்ந்து வருகிறது. சமுதாயத்தை உடைக்கும் வேலையை இந்த பா.ஜ.க. செய்கிறது. மக்களுக்கு துரோகம் இழைக்கும் பணியை தவிர மத்திய பா.ஜனதா அரசு வேறு என்ன செய்கிறது?. ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது சங்பரிவார் அமைப்பினர் என்ன செய்தனர்?.

    காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் கர்நாடகத்தை சேர்ந்த 3 பேர் பலியாயினர். இது மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு இல்லையா? சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஒரு ராணுவ வீரர் இல்லை, ஒரு போலீஸ்காரர் இல்லை. இந்தியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் தோல்வி அடைந்துள்ள மத்திய அரசு குறித்து கேள்வி எழுப்பக்கூடாதா?. நாடு சுதந்திரம் அடைந்து 51 ஆண்டுகள் வரை ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது தேசிய கொடி ஏற்றப்படவில்லை.

    இதனால் பா.ஜ.க.வினருக்கு வெட்கம் ஏற்படவில்லையா?. சுதந்திர போராட்டம் முதல் நவீன இந்தியா வரை இதன் வளர்ச்சியில் பா.ஜ.க.வின் பங்கு என்ன?. வெட்கம் இல்லாமல் தேசபக்தி குறித்து அவர்கள் பேசுகிறார்கள். இந்தியர்களிடையே பிரிவினை ஏற்படுத்தியதை தவிர பா.ஜ.க. வேறு என்ன செய்தது?. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது பணக்காரர்களுக்கு 32 சதவீத வரி விதிக்கப்பட்டது.

    ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வரி 25 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. ஏழை, நடுத்தர மக்களுக்கு எதிரான மத்திய ஆட்சி நிர்வாகத்தை நாங்கள் எதிர்க்கக்கூடாதா?. இந்தியர்களை நிரந்தர பொய்களில் இன்னும் எத்தனை ஆண்டுகள் மூழ்கடிப்பீர்கள். மக்களுக்கு உண்மையை சொல்ல பா.ஜனதாவினர் முன்வர வேண்டும். நாட்டிற்காக காங்கிரஸ் தலைவர்கள் உயிா்த்தியாகம் செய்தனர். அதனால் போராட்டம் என்பது காங்கிரசுக்கு புதிது அல்ல.

    ஆங்கிலேயர்களை விரட்டி யடித்த எங்களுக்கு உங்களை (பா.ஜ.க.வை) எதிர்க்கும் சக்தி உள்ளது. நாங்கள் பால் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தி அதை அப்படியே விவசாயிகளுக்கு வழங்குகிறோம். பஸ் கட்டணம், குடிநீர் கட்டணம், மின்சார கட்டணம் உள்ளிட்டவை மற்ற மாநிலங்களை விட கர்நாடகத்தில் குறைவாகத்தான் உள்ளது. பா.ஜ.க.வின் பொய் பிரசாரத்தை கண்டு நான் பயப்பட மாட்டேன்.

    மத்திய அரசு அரிசி, சமையல் எண்ணெய், தங்கம், வெள்ளி, உரம், பருப்புகள், டீசல், பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களுக்கு கஷ்டத்தை கொடுத்துள்ளது. இந்த மத்திய அரசு எதை விட்டுவைத்து இருக்கிறது?. கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும், பெட்ரோலிய பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்துவது என்பது நாட்டு மக்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம் ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனிடையே, பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்திற்குள் நுழைந்த பா.ஜ.க.வினர் சிலர் முதல்-மந்திரி சித்தராமையா பேசிக்கொண்டிருந்தபோது கருப்பு கொடி காட்டினர். இதனால் ஆத்திரமடைந்த முதல்-மந்திரி சித்தராமையா ஏ.எஸ்.பி.யை அழைத்து, நீங்க என்ன பண்றீங்க? என கேள்வி கேட்டு கை ஓங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

    காவல்துறை அதிகாரியை அடிக்க கையை உயர்த்துவது உங்கள் பதவிக்கோ கண்ணியத்திற்கோ எந்தப் பெருமையையும் தராது. உங்கள் பதவிக்காலம் 5 ஆண்டுகள் மட்டுமே. ஆனால் ஒரு அரசு அதிகாரி 60 வயது வரை பணியாற்றுகிறார். அதிகாரம் யாருக்கும் நிரந்தரமானது அல்ல. உங்கள் தவறான நடத்தையைத் திருத்திக் கொள்ளுங்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 



    உத்தரபிரதேச மாநிலத்தில் ஈவ்டீசிங்கை தடுத்த பெண்ணை வீட்டுக்குள் புகுந்த கும்பல் நிர்வாணமாக்கி அடித்த உதைத்து இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் கோபிகஞ்ச் மாவட்டத்தில் பதோனி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் பெண்களை ஒரு கும்பல் ஈவ்டீசிங் செய்து வந்தது.

    சம்பவத்தன்று இக் கும்பலை சேர்ந்த லால்சந்த் யாதவ் என்பவர் ஒரு பெண்ணை ஈவ்டீசிங் செய்து கொண்டிருந்தார். அதை அக்கிராமத்தை சேர்ந்த நெசவு தொழில் செய்யும் பெண் தடுத்து தட்டிக் கேட்டார்.

    இதனால் லால்சந்த் யாதவ் ஆத்திரம் அடைந்தார். தனது கூட்டாளிகள் 3 பேருடன் அப் பெண்ணின் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்தார். அங்கு தனியாக இருந்த பெண்ணை அவர்கள் அடித்து உதைத்தனர்.

    பின்னர் அவரது உடலில் இருந்த துணிகளை வலுக்கட்டாயமாக அகற்றி நிர்வாண மாக்கினர். அவரை கிராமத்தில் ஊர்வலமாக இழுத்துச் சென்று அவமானப்படுத்தினர்.

    இந்த கொடூர செயலை கிராமத்தினர் சிலர் ஈவு இரக்கமின்றி தங்கள் செல்போன்களில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் வைரலாக பரவ விட்டனர். இதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்து சென்றதாக 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவன் கைது செய்யப்பட்டான்.

    ×