என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க.வுடன் கூட்டணியா? த.வெ.க.வுடன் கூட்டணியா? - பிரேமலதா விளக்கம்
- தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனையில் ஈடுபட்டார்.
- த.வெ.க.வுடன் கூட்டணியா என்பதை விஜயிடம் தான் கேட்க வேண்டும்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் தே.மு.தி.க.வும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி உள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க.வுக்கு மேல்சபை எம்.பி. பதவியை தருவதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது காலியான மேல்சபை எம்.பி. பதவி இடம் அந்த கட்சிக்கு ஒதுக்கப்படாததால் அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.
இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. நீடிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இதுபோன்ற சூழலில் இன்று முதல் 4 நாட்களுக்கு தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த கூட்டம் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை என 2 பிரிவாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.
முதல் நாளான இன்று காலையில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:
* 2026 சட்டசபை தேர்தலில் தேவைப்பட்டால் தனித்து போட்டியிடவும் தயார்.
* தே.மு.தி.க. தனித்து போட்டியா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.
* கூட்டணி குறித்து முடிவு செய்ய சில காலம் தேவைப்படுகிறது.
* தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் வரவேற்கிறோம்.
* ராஜ்யசபா சீட் குறித்த ஒப்பந்த கடிதத்தை நாகரிகம் கருதி வெளியிடவில்லை.
* தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணையுமா என்ற கேள்விக்கு தி.மு.க.விடம் கேளுங்கள்.
* த.வெ.க.வுடன் கூட்டணியா என்பதை விஜயிடம் தான் கேட்க வேண்டும்.
* தி.மு.க. அழைத்தால் செல்வீர்களா என்ற கேள்விக்கு காலம் வந்ததும் பதில் சொல்கிறேன் என்று அவர் கூறினார்.






