என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இறகுபந்து போட்டி- விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் சாதனை
- நெல்லை குறுவட்ட அளவிலான இறகு பந்தாட்டப் போட்டி மேலப்பாளையம் பைலட் கிளப்பில் நடைபெற்றது.
- விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி மாணவன் ஜெய்சாம் 14 வயதிற்கு உட்பட்ட மாணவர் தனிநபர் பிரிவில் முதலிடம் பிடித்தார்.
நெல்லை:
நெல்லை குறுவட்ட அளவிலான இறகு பந்தாட்டப் போட்டி மேலப்பாளையம் பைலட் கிளப்பில் நடைபெற்றது. இதில் விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி மாணவன் ஜெய்சாம் 14 வயதிற்கு உட்பட்ட மாணவர் தனிநபர் பிரிவில் முதலிடம் பிடித்தார். மாணவன் அர்ஜுன் 17 வயதிற்கு உட்பட்ட மாணவர் தனிநபர் பிரிவில் முதலிடம் பிடித்தார். இரட்டையர் பிரிவில் மாணவன் அர்ஜூன் மற்றும் மாணவன் ராமசுப்பிரமணியன் முதலிடம் பிடித்தனர். மாணவி ரேசிகா 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் தனிநபர் பிரிவில் முதலிடம் பிடித்தார்.
இரட்டையர் பிரிவில் மாணவி ரேசிகா மற்றும் மாணவி ஸ்ரீநிதி முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். மேலும் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளியின் சேர்மன் சிவ சேதுராமன், தாளாளர் திருமாறன், முதல்வர் முருகவேள், துணை முதல்வர் ஜேக்கப் துரைராஜ், உடற்கல்வி இயக்குநர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர்கள் மோகன்குமார் மற்றும் பாலமுருகன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்