என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயற்சி
- வங்கி ஊழியர்கள் மீது புகார் தெரிவித்தார்.
- கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று நடந்தது.
கோவை
கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று நடந்தது. இதில் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பொது மக்கள் தங்களது கோரிக்கை சம்பந்தமான மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.
இதனையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் கலெக்டர் அலுவலகம் வரும் பொதுமக்களை தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர்.
அப்போது அங்கு வந்த ஒருவர் திடீரென தான் மறைத்து கொண்டு வந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனைப் பார்த்த போலீசார் அவரது கையில் இருந்த மண்எண்ணை கேனை பறித்து அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர்.
பின்னர் போலீசார் அவரிடம் தீக்குளிக்க முயன்றதற்கான காரணம் குறித்து விசாரித்தனர். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:-
எனது பெயர் ராஜேந்திரன் (வயது 60). ஆட்டோ டிரைவர். நான் கடந்த ஜூன் மாதம் வடவள்ளியில் உள்ள ஏ.டி.எம் மையத்துக்கு சென்று ரூ.2500 பணம் எடுக்க முயன்றேன். பணம் வரவில்லை.
ஆனால் எனது கணக்கில் பணம் பிடித்தம் செய்ததாக காட்டியது. இதுகுறித்து வங்கி மேலாளரிடம் முறையிட்டபோது அவர்கள் என்னை தரக்குறைவாக பேசி அலைக்கழிக்கின்றனர்.
மேலும் நான் ஏ.டி.எம்-மில் பணம் எடுத்துவிட்டு பொய்யான தகவலை கூறுவதாகவும், போலீசில் புகார் அளிப்போம் எனவும் மிரட்டுகின்றனர்.
எனவே இந்த பிரச்சினை தொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி எனது பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்