search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மூலை அனுமார் கோவிலில் நாளை ஆடி அமாவாசை வழிபாடு
    X

    தஞ்சை மூலை அனுமார் கோவிலில் நாளை ஆடி அமாவாசை வழிபாடு

    • தேங்காய் துருவல் அபிஷேகம், சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.
    • நாளை மாலை 1008 எலுமிச்சை பழங்களால் ஆன சிறப்பு அலங்காரம் நடக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேலவீதியில் மூலை அனுமார் கோவில் அமைந்துள்ளது.

    தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது.

    இங்கு மாதந்தோறும் அமாவாசை அன்று சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறுவது வழக்கம். சத்குரு தியாகராஜ சுவாமிகள்,சேது பாவா சுவாமிகள் மற்றும் ஆதி பீம ராஜ கோஸ்வாமி வழிப்பட்ட தலமாகும்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் நாளை (புதன்கிழமை ) காலை 7 மணிக்கு லட்ச ராம நாமம் ஜெபமும் அதனை தொடர்ந்து காலை10 மணிக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாகும் தேங்காய் துருவல் அபிஷேகம், சிறப்பு பாலாபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடக்கிறது.

    மாலை 6 மணிக்கு 10080 எலுமிச்சை பழங்களான சிறப்பு அலங்காரம் நடக்கிறது.

    அதனை தொடர்ந்து அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம் வரும் நிகழ்ச்சியும், 1008 எலுமிச்சை பழங்களான மாலை சாற்றி தீபாராதனை நடக்கிறது.

    இந்த வழிப்பாட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே , உதவி ஆணையர் கவிதா ,கோவில் செயல் அலுவலர் மாதவன், மேற்பார்வை யாளர் ரெத்தினவேல் மற்றும் அமாவாசை கைங்கர்ய குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×