search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்
    X

    எச்சரிக்கை பலகை இன்றி பாலம் கட்டப்படும் சாலை.

    சாலையில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்

    • பாலம் கட்டும் பகுதியில் எந்த ஒரு எச்சரிக்கை பலகையும் வைக்கவில்லை.
    • இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    அதிராம்பட்டினம்:

    அதிராம்பட்டினம் அருகே ஏரிப்புறக்கரை- கீழத்தோட்டம் சாலையில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பணிகள் நடைபெறுவதால் பாலம் கட்டும் பகுதியில் எந்த ஒரு எச்சரிக்கை பலகையும் வைக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    எனவே, அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு அப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×