search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய உறவினர்
    X

    கோவையில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய உறவினர்

    • முத்துக்குமார் அரிவாளை எடுத்து மகேந்திரனை சரமாரியாக வெட்டினார்.
    • மகேந்திரனின் மகன் சதிஷ்குமார் வால்பாறை போலீசில் புகார் அளித்தார்.

    கோவை:

    கோவை மாவட்டம் வால்பாறை அண்ணா நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 47). கூலி தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முத்துக்குமார் (37). கட்டிட தொழிலாளி. இருவரும் உறவினர்கள்.

    இந்த நிலையில் இருவரது வீட்டின் இடையே ஒரு காலியிடம் உள்ளது. மழை காலங்களில் அந்த இடத்தில் சேறும் சகதியுமாக மாறி முத்துக்குமாரின் வீட்டின் சுவரில் அசுத்தம் ஆகியதாக தெரிகிறது. இதனால் முத்துக்குமார், மகேந்திரனை அழைத்து அந்த இடத்தை சுத்தம் செய்யுமாறு கூறினார்.

    அதற்கு மகேந்திரன் மறுத்தார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது முத்துக்குமார் அவரை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனை கேட்டு மகேந்திரன் அவரை கன்னத்தில் அறைந்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் அரிவாளை எடுத்து மகேந்திரனை சரமாரியாக வெட்டினார். அவர் வலி தாங்க முடியாமல் அலரி துடித்து சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.அவர்கள் வருவதை பார்த்து முத்துக்குமார் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் அங்கு வந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த மகேந்திரன் மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து மகேந்திரனின் மகன் சதிஷ்குமார் வால்பாறை போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசார் தேடுவதை தெரிந்து கொண்ட மகேந்திரன் வால்பாறை போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×