search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    களக்காடு அருகே மணல் திருடிய ஒருவர் கைது-டிராக்டர் பறிமுதல்

    களக்காடு அருகே மணல் திருடியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள ஆதிச்சபேரியில் மணல் கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் ஆதிச்சபேரிக்கு சென்று சோதனையிட்டனர்.

    அப்போது அதே ஊரைச் சேர்ந்த பாலையா என்பவர் அனுமயின்றி ஓடை மணலை டிராக்டர் மூலம் அள்ளிக் கொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் அவர் தப்பி ஓட முயற்சி செய்தார். எனினும் போலீசார் அவரை கைது செய்தனர்.

    மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×