search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    ராசிபுரம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    ராசிபுரம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பேரூராட்சிக்குட்பட்ட குச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி (வயது 33). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி வனிதா (29). இவர்களுக்கு திருமணம் நடந்து 10 வருடங்கள் ஆகின்றன. மணிஷ் குமார் (10), ஹரிஷ் குமார் (8) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த   வனிதா நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி நாமகிரிபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வனிதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் வேறு ஏதேனும் உள்ளதா? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×